Tuesday 8 January 2013


அந்த பெண்ணின் குடும்பம் மனதால் செத்து செத்து பிழைத்துக்கொண்டிருக்கிறது, இந்நிலையில் இங்கிருக்கும் ஆதீனம் போன்ற அறிவீலிகள் கருத்து சொல்கிறோம் என்ற போர்வையில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகின்றன,இப்போது புதிதாக ஒன்று குஜராத் சாமியார் என்ற ஒன்று திருவாய் மலர்ந்திருக்கிறது,இது போன்ற சாமியார்களை நாட்டில் இருக்கும் பெண்கள் புறக்கணிக்க ஆரம்பித்தாலே போதும், காணாமல் போய் விடுவார்கள்.அந்த சாமியார் கூறிய கருத்து இதோ,

"டெல்லி மாணவி வன்புணர்வு சம்பவத்துக்கு அந்த 6 பேர் மட்டும் தான் குற்றவாளிகள் என்று கூற முடியாது. அவர்களைப் போல் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணும்அக்குற்றத்துக்கு ஒரு காரணமாக இருந்துள்ளார். சம்பவத்தின் போது அந்தப் பெண் அவர்களைச் சகோதரர்கள் என்று அழைத்திருக்க வேண்டும். என்னை விட்டுவிடுங்கள் அண்ணா என கெஞ்சியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் அவள் தனது மானத்தையும், வாழ்க்கையும் காப்பாற்றி கொண்டிருக்க முடியும்.
வன்புணர்வு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கக் கூடாது. கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் பட்சத்தில் அது வரதட்சணை கொடுமைக்கான தண்டனையைப் போல் தவறான முறையில் பயன்படுத்தப்படலாம்

Read more about வன்புணர்வு: மாணவியும் குற்றவாளிதான் - சாமியார் அஷ்ரம் குற்றச்சாட்டு! [7941] | இந்திய செய்திகள் | செய்திகள் atwww.inneram.com

No comments:

Post a Comment