Tuesday 8 January 2013


சிவகங்கையில் பெண் சாமியார் 7 அடி உயர முள் படுக்கையில் ஏறினார்! சரி இந்த வித்தைகளாலும் தந்திரங்களாலும் என்ன பயன்?

ஓசோனில் ஓட்டை அடைபட்டதா? அண்டாட்டிகாவில் பனி உருகுதல் நின்று விட்டதா? காற்று மாசுபடுதல் குறைந்து விட்டதா? அசுத்தமடைந்த நீர் சுத்தமாகி விட்டதா?உலகில் இருந்த புற்று நோயாளிகளும், எய்ட்ஸ் நோயாளிகளும் குணமாகி விட்டார்களா? விகாரத்துக்கு விண்ணப்பித்திருந்த தம்பதிகள் வழக்கை வாபஸ் பெற்று விட்டார்களா? ஊழல் பெருச்சாளிகள் திருந்தி விட்டார்களா? எது நடந்தது?

இதில் எதுவும் நடக்காது.ஆனால் சாமியாரை பார்த்து வாய் பிளந்து காசு கொட்டும் கூட்டத்தால் சாமியாரின் வாழ்க்கை வசதிகள் பெருகும்,அவர் உறவினர்கள் சுகபோகமாக வாழ்வார்கள்.அவ்வளவே, அதற்காக கற்றதுதானே இந்த முள் மீது படுக்கும் வித்தை எல்லாம்.
 

No comments:

Post a Comment