Tuesday 8 January 2013

இதில் ஆச்சர்யம்,வியப்பு ஏதேனும் இருக்கிறதா? 

வீட்டுவேலை செய்வது, கணவனைத் திருப்திபடுத்துவது தான் பெண்கள் வேலை: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத். 

கட்டிய மனைவி சீதையை தீக்குளித்து தன்னுடைய புனிதத்தன்மையை நிரூபிக்க சொன்ன,

எவனோ ஒரு குடிமகன் இகழ்ந்து பேசிய காரணத்தால் மனைவியை காட்டில் விட்டு விடச்சொன்ன இராமனை,

அவதாரப் புருஷன் எனக்கொண்டாடி அரசியல் செய்து ஆட்சியை பிடித்த இவர்களிடம்,

15 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் ரூப்கன்வர் எனும் பெண் உடன்கட்டை ஏறுதல் எனும் சதியில் பலியாக்கப்பட்ட போது,அந்த இடத்திற்கு சென்று அவளை சதிமாதா என்று கைகூப்பி வணங்கிய விஜயராஜே சிந்தியாவை பாஜகவின் அகில இந்திய துணைத்தலைவராகக் கொண்டிருந்த இவர்களிடம் பெண்விடுதலை,பெண்ணுரிமை ஆகியவற்றை எதிர்பார்த்திட முடியுமா?

இவர்கள் குறித்து முதலில் பெண்கள்தான் சிந்திக்க வேண்டும்.

No comments:

Post a Comment