Tuesday 9 October 2012

ஆடுகள் அல்ல,சிங்கங்கள்

முஸ்லிம்கள் தலித்துக்கள் முன்னேற்றத்திற்காக பாரதீய ஜனதா பாடுபடும். - நிதின்கட்காரி.

இதை படித்தவுடன் அய்யய்யோ மகாத்மாகாந்தி செத்துட்டாரா? என்ற ஜோக்தான் நினைவுக்கு வருது.

முஸ்லிம்கள் மீது இவர்கள் வைத்த பாசம் உலகத்துக்கே தெரியும்.மோடி முஸ்
லிம்கள் மீது வைத்த பாசத்துக்காக இன்னைக்கு வரைக்கும் அமெரிக்காவில் நுழைய முடியல.

அது என்ன புதுசா தலித்துகள் மீது பாசம்? அம்பேத்கர்,பெரியார் உள்ளிட்ட சான்றோர் பலர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய காலகட்டத்தில் முடிந்த அளவுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் எல்லாம் இன்று தலித் முன்னேற்றம் பேசறாங்கப்பா.

உங்க கரிசனத்தை பார்க்கும்போது கசாப்புக்கடைக்காரன் ஆட்டை தடவிக்கொடுக்கிற மாதிரி இருக்கு.

நீங்களெல்லாம் ஆடுகள் அல்ல வெட்டப்படுவதற்கு, சிங்கங்கள் என்று அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கிட்டத்தட்ட 70 வருடங்கள் கழித்து தலித் முன்னேற்றம் குறித்து பேச மனுதர்மக்கூட்டம் கிளம்பியிருக்கு பாஸ்.

Monday 8 October 2012

இந்து என்று சொல்வதிலே......

ஆமாம் பெருமிதம் அடைகிறேன்,என்னை சூத்திரன் என்று சொன்னமைக்காக பெருமை கொள்கிறேன்.

என்னை தொட்டால் தீட்டு என்று வகைப்ப்டுத்தியமைக்காக உவமை கொள்கிறேன்.

மனித மலத்தை அள்ளுவதற்கும்,கழிப்பறையை கழுவுவதற்காக ஒரு சாதியை வைத்திருப்பதற்காக பூரிப்பு அடை
கிறேன்.

கோவிலுக்குள் நான் சென்றால் சாமிக்கு தீட்டு என்று சொல்லிவிட்டு,மலம் அள்ளுவது புனிதமான தொழில் என்று சொல்லி எங்கள் கவுரவத்தை உயர்த்தியமைக்காக பெருமை அடைகிறோம்.

பிணம் புதைக்கும்,எரிக்கும் தொழிலை எவருக்கும் கொடுக்காமல் தாராள மனதுடன் எங்களுக்கு மட்டுமே கொடுத்ததற்காக பெருமகிழ்ச்சியடைகிறோம்.

ஆடு,மாடுகள் கூட குடிக்கும் பொதுக்குளத்தில் நாங்கள் மட்டும் குடிக்காமல் பார்த்துக்கொண்டதற்காக புளகாங்கிதம் அடைகிறோம்.

இந்த 21ம் நூற்றாண்டிலும் சாதிக்கட்டமைப்பை பாதுகாத்து வருவதை எண்ணி மட்டில்லா இன்பம் கொள்கிறோம்.

இந்து என்று சொல்லிக்கொள்வதிலே இறுமாப்பு அடைகிறோம்

Sunday 7 October 2012

ஆவாரம்பூ

ஆவாரம் பூவு.....ஆறேழு நாளா ...... நீ போகும் பாதையில் பார்த்திருந்தேன்,இனிமையான தமிழ்ப்பாடல்.

ஆனால் நாம் போகும் பாதைகளில் கண்ணுக்கு குளிர்ச்சியாக மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் பூ ஆவாரம் பூ என்பதை எத்தனை பேர் அறிவோம்?

தமிழகம் முழுவது
ம் தானாக விளைந்து வீணாக போகும் மூலிகைகளில் இதுவும் ஒன்று.

செடி முழுக்க மருத்துவப்பயன் உடையது. பூவை தண்ணீரில் காய்ச்சியோ அல்லது பாலில் கொதிக்க வைத்தோ சாப்பிட்டு வந்தால் உடல் நாற்றம் ,உடலில் உப்பு பூத்தல், நா வறட்சி ஆகியன நீங்கும்.

இதன் விதை சூரணம்,உடலுக்கு வலு கொடுக்கும்,காமம் தூண்டும். முழுச்செடியின் சூரணம் நீரிழிவு(சர்க்கரை நோய்) உடல் மெலிவு ,எரிச்சல் ,உடல் பலகீனம்,மயக்கம்,மூச்சுத்திணறல் ஆகியவற்றை போக்கும்.

இதன் பட்டையை பொடி செய்து வைத்துக்கொண்டு தண்ணீரில் இட்டு சுண்டக்காய்ச்சி கஷாயம் செய்து குடித்தால் நீரிழிவு,சிறு நீர்க்கோளாறுகள்,தாக வறட்சி ஆகியவை தீரும்.

நாட்டு மருந்து கடைகளில் சீயக்காய் பொடி தயாரிக்க மூலிகைகள் வாங்கும்போது அதில் ஆவாரம் பூவும் இடம்பெறும்.அரைத்து தேய்த்து குளித்தபிறகு ஒரு புத்துணர்வு கிடைக்கும் பாருங்க அது எந்த சோப்பிலும் கிடைக்காது.

ஆவாரம் பூ பூத்துக் குலுங்கும் காலங்களில் என் கண்ணில் பட்டுவிட்டால் போதும், அப்படியே வண்டியை ஓரம் கட்டி பை நிறைய பறிச்சுடுவேன்.வீட்டில் சாம்பார்,காரக்குழம்பு எல்லாவற்றிலும் இந்த பூவை வதக்கி சேர்த்து விடுவார்கள்.

அதேபோல் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொள்வேன், தேநீர்,காஃபிக்கு கொஞ்சம் இடைவெளி கொடுக்க நினைக்கும் போதெல்லாம் இந்த பொடியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிடுவேன்,சமயங்களில் பாலுடனும் சேர்த்துக்கொள்வேன்.வாசனை அருமையாக இருக்கும்,சுவையாகவும் கூட இருக்கும்.இதே போன்று தாமரை இதழ்களையும் பொடி செய்து பயன்படுத்துவதுண்டு.

எனக்கு புரியாத ஒரு விஷயம் இந்த ஆவாரம் பூ,தாமரை பொடியில் தயாரிக்கப்படும் தேநீர் நல்ல சுவையும்,மணமும் இருந்தும் தமிழர் வாழ்வில் இருந்து விலகிப்போனது ஏனோ? இத்தனைக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும், நீரிழிவு நோய் வர வாய்ப்புள்ளவர்களுக்கும் அருமருந்து இது.

எனக்கு ஆவாரம் பூவின் நினைவு வந்து விட்டது, பறிக்க பையை தூக்கிக்கொண்டு கிளம்பி விட்டேன், நீங்க?????????????????????????? ரெடியா????????

முள்ளிக்கீரை

இதன் பெயர் முள்ளிக்கீரை. 10 வருடங்களுக்கு முன்பு வரை இந்த கீரையை நான் சாப்பிட்டதில்லை.ஒருமுறை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வார்த்தை சித்தர் வலம்புரிஜான் அவர்கள் இந்த கீரையின் பெருமைகளை எடுத்துக்கூறியதைக்கண்ட பிறகுதான் முதன்முதலாக சுவைத்து ப
ார்த்தேன், நல்ல சுவை.அதன்பிறகு இதனை அடிக்கடி பயன்படுத்துகிறேன்.

மற்ற எந்தகீரைகளை விடவும் சுவைமிகுந்தது,சத்துக்கள் நிறைந்தது.பார்ப்பதற்கு முளைக்கீரை போன்று காணப்படும்,தமிழகம் எங்கும் தானாக விளைந்து காணப்படுகிறது.இந்த கீரையின் தண்டு சிவப்பாக காணப்பட்டால் அது செம்முள்ளிக்கீரையாகும்.அதுவும் மிகுந்த பலன்கள் தரக்கூடியதே.

இதில் தண்டுகளில் காணப்படும் முட்கள் காரணமாகவே மனிதன் இதை விவசாயம் செய்யாமல் விட்டிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.இதில் ஏகப்பட்ட தாதுக்களும்,விட்டமின்களும் நிறைந்திருக்கின்றனவாம்.

இலையை கீரையாக சமைத்து அடிக்கடி உண்டுவந்தால் பசியை தூண்டும்,ஜீரணசக்தி அதிகரிக்கும்,மலம் கெட்டிப்படும்.உடலுக்கு பலம் கூடும்.

இதன் வேரை சாம்பலாக்கி சோறு வடித்த நீரில் குழைத்து கட்டிகள் மீது பற்றுப்போட கட்டிகள் உடையும்.

இந்த கீரை அடிக்கடி உண்டுவந்தால் சிறுநீர்க்கோளாறுகளை தீர்க்கும்.முள்ளிக்கீரைவேர்,பிரண்டைவேர்,சோற்றுக்கற்றாழைவேர்,கடுக்காய்,சுக்கு,மிளகு,பூண்டு ஆகியவற்றை தலா 5கிராம் எடுத்து அரைத்து மோரில் கலக்கி குடித்து வர மூல நோய்கள் ஓடிவிடும்.

இயற்கை நமக்கு கொடுத்துள்ள கொடைகளில் ஒன்று முள்ளிக்கீரை,தானாக விளைகிறது, நம் அறியாமையால் வீணாகப்போகிறது.மற்ற எல்லாக்கீரைகளிலும் மருத்துவ குணத்தில் மேலே நிற்கிறது.ஆனால் நாம் அதை பயன்படுத்துவதில்லை,இனி அதை பயன்படுத்தி நலம் பெறுவோமா?

ஊருக்கொரு அணு உலை


இவ்வளவு கோடி செலவு செய்து கட்டியபின் கைவிடமுடியுமா என்றும் சிலர் கேட்பார்கள். திருமணத்துக்கு முதல் நாள் இரவு மாப்பிள்ளைக்கு எய்ட்ஸ் என்று தெரிந்தால் பரவாயில்லை நிறைய செலவு செய்துட்டோம்,கல்யாண மண்டபம் புக் பண்ணிட்டோம்னு பெண்ணை கட்டி கொடுப்போ
மா?


இனி எதற்கு விவாதம்? தேசபக்தியோடு வாழ்வோம்,தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் ஒரு அணு உலை அமைப்போம்,பின்னர் ஒவ்வொரு தாலுக்காவிலும் ஒரு அணு உலை அமைப்போம்.இந்தியாவின் மின் பிரச்சினையை தீர்ப்போம்.இந்தியாவை வல்லரசு ஆக்குவோம். நாம் அழிந்தால் என்ன? தமிழினம் பூண்டோடு ஒழிந்தால் என்ன? இந்தியா வல்லரசாக இருக்குமே? ஜெய் பாரத்! ஜெய் ஹிந்த்!
 

கூடங்குளம்

கூடங்குளம் ஆபத்தானதா இல்லையா? அது வேண்டுமா வேண்டாமா? என்று பேசும் முன் அந்த திட்டம் தமிழகத்துக்கு எப்படி வந்தது என்று யோசித்து பார்ப்போம்.

இந்த அணுமின் நிலையத்துக்காக மற்ற மாநிலங்கள் போட்டிபோட அந்த போட்டியில் போராடி வென்று இந்த திட்டம
் தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டதா?

இந்த திட்டம் குறித்து ஆரம்பகட்ட ஆலோசனைகள் நடைபெற்றபோது மற்ற மாநிலங்கள் தந்திரமாக கழன்று கொண்டு நம் தலையில் இதை கட்டிவிட்டன என்பதை யோசித்தோமா?

அணு உலை கட்டி முடிக்கப்பட்டவுடன்,இந்த திட்டம் எங்களுக்கு வேண்டாம் என்று ஒதுங்கிய கேரளா இதில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 250 மெகாவாட் தங்களுக்கு பங்கு தரவேண்டும் என்று கேட்கிறதே,அதன் பெயர் அயோக்கியத்தனம் இல்லை, நம்முடைய கையாலாகாத்தனம்.அவன் எச்சரிக்கையாக புத்திசாலித்தனமாக மாநில நலனில் அக்கறையோடு இருக்கிறான்.

சரி இந்த அணு உலை திட்டத்துக்கு பதிலாக வேறு ஏதேனும் மிகப்பெரும் வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய தொழில் திட்டம் ஒன்று தீட்டப்பட்டிருந்தால் மற்ற மாநிலங்கள் இந்த திட்டத்தை தமிழகத்திற்கு விட்டுக்கொடுத்திருப்பார்களா?

உலகம் முழுதும் இருக்கும் தமிழர்களுக்கு பூர்வீகம் தமிழகம் மட்டுமே,இந்த தமிழகத்தின் தலைப்பகுதியில் கல்பாக்கத்தில் ஒரு அணு உலை,கால் பகுதி கூடங்குளத்தில் ஒரு அணு உலை. நாளை எவனோ ஒரு எதிரியால் இந்த அணு உலைகள் தாக்கப்படுமேயானால் தமிழகம் என்னவாகும்? தமிழருக்கென்று ஒரு நிலம் இருக்குமா?

நியாயமாகப்பார்த்தால் இது போன்ற அணு உலைகள் உத்திரப்பிரதேசம்,பீகார்,ராஜஸ்தான்,ஹரியானா,மத்தியப்பிரதேசம் போன்ற இந்தி பேசும் மாநிலங்களில்தான் அமைக்கப்படவேண்டும்.ஒரு இடம் அழிந்தால்கூட மற்ற இடங்களில் இந்திக்காரன் வாழ்வான்.

ஆனால் தமிழகம் அழிந்தால் தமிழினமே இருக்காது பாஸ்.ஏனெனில் தமிழனுக்கு என்று இருப்பது தமிழகம் மட்டுமே.

ஓநாய்க்கும் தர்மம்

அணு உலை வேண்டாம் என்று சொன்னால் தேசவிரோதிகளா?தேசத்துரோகிகளா? தேசப்பற்று இல்லாதவர்களா?

காடுகளை ஒட்டிய கிராமங்களுக்குள் திடீரென புகுந்து ஓநாய்கள் குழந்தைகளை தூக்கிச்சென்று தங்கள் இரையாக்குவதை பலமுறை செய்தித்தாள்களில் படித்திருப
்போம்.

அவ்வாறு ஓநாய்கள் குழந்தைகளை கொன்று தின்பதை அறிந்து மனம் பதறி துடிப்போரையே கண்டிருக்கிறோம்.

அந்த ஓநாய்களுக்காக நியாயம் கூறி பேசுவோரை கண்டிருக்கிறோமா? பாவம்பா அந்த ஓநாய்கள்,அவற்றுக்கும் வயிறு இருக்கிறது,அந்த வயிற்றுக்கும் பசி என்று ஒன்று இருக்கிறது,எனவே குழந்தைகளை தூக்கிச்செல்கின்றன என்று ஓநாய்க்கும் தர்மம் பேசுவோரை காண்பது மிகவும் அரிது.

இந்த அணு உலை விஷயத்தில் அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை கொஞ்சமும் ஆராயாமல்,யோசிக்காமல்,ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கவலைப்படாமல் தேசியம்,தேசப்பற்று,தேச ஒற்றுமை என பேசுபவர்களை காணும் போது ஓநாய்க்கும் தர்மம் பேசுபவர்களாகவே தெரிகிறார்கள்.

சுயபுத்தி

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதில் நன்மை என்ன? தீமை என்ன? என்று அலசி ஆராய்ந்து முடிவெடுக்காமல்,என் தானைத்தலைவர் சொன்னதால் எதிர்க்கிறேன்,என் தலைவர் ஆதரிப்பதால் ஆதரிக்கிறேன் என்று செம்மறியாட்டுக்கூட்டம்போல் இருப்பது மனிதனாக பிறந்தவர்க்கு பெருமை சேர்க்கக்கூடியதா? சுயமாக சிந்தித்து சரியான முடிவை எடுப்பது எப்போது?

வயசாகி இருந்தால்தான் சான்ஸ்


வளர்ந்த நாடுகளின் தலைவர்களை பார்க்கும் போது பொறாமையா இருக்கு. விளாடிமிர்புடின் பாராசூட்டில் இருந்து குதித்தார்,டென்னிஸ் ஆடுகிறார்,வேட்டைக்கு போகிறார் என்ற செய்திகளை படிக்கும் போதும்,ஒபாமா,சர்கோஸி ஆகியோர் விறு விறுவென்று மிடுக்காய் நடந்து செ
ல்வதை காணும்போதும் நம் நாட்டு வயோதிக இளைஞர்களை நினைத்து பெருமூச்சு விடாமல் இருக்க முடியவில்லை.

நாம் பள்ளியில் வரலாறு புத்தகங்களில் படித்திருப்போம்,ஔரங்கசீப்புக்கு பிறகு முகலாய சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சியடைந்தது என்று.மிகப்பெரும் மன்னனுக்கு பிறகு ஒரு சாம்ராஜ்ஜியம் சடாரென வீழ்ச்சியை நோக்கி செல்ல காரணம் என்ன?

ஔரங்கசீப் 92 வயது வரை உயிர் வாழ்ந்தார்,தான் மறையும் வரை அரசாட்சி முழுவதையும் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தாராம்.அவருடைய பிள்ளைகள் அவரிடம் சென்று பேசவே அஞ்சுவார்களாம்,விளைவு அவருக்கு அடுத்த தலைமுறைக்கு நிர்வாகத்திறன் இல்லாமல் போனது.சாம்ராஜ்ஜிய வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம்.

நம் நாட்டிலும் கூட வயோதிக தலைவர்கள் வாலிபர்களிடம் அரசுப்பொறுப்பை அளிக்க முன் வருவதில்லை.பதவி மோகம் அவர்களை மற்றவர்க்கு வழிவிடாமல் தடுக்க செய்கிறது.

நல்ல ஆளுகைத்திறனுக்கும்,சிறந்த நிர்வாகத்துக்கும் உடல் வலிமையும் அவசியம்.பொது நிகழ்ச்சிகளில் வாஜ்பாய்,சங்கர் தயாள் சர்மா,அப்துல்கலாம் போன்றோர் தடுமாறிய செய்திகளை செய்தித்தாள்களிலும்,தொலைக்காட்சிகளிலும் கண்டிருக்கிறோம்.

இப்படி ஒரு நாடு முழுக்க பெரும்பாலான தலைவர்கள் வயோதிகர்களாக, மருத்துவ சிகிச்சையை ரகசியமாக எடுத்துக்கொண்டு இருப்பவர்களாக இருந்தால் அந்த நாடு எப்படி பீடு நடை போட முடியும்?

ஆனால் வளர்ந்த நாடுகளில் தலைவர்கள் நடுத்தர வயதுக்காரர்களாக துள்ளி குதிக்கிறார்கள்,அவர்கள் நாடும் வளர்ச்சிப்பாதையில் துள்ளிக்குதித்து செல்கிறது.

ஆனால் இங்கே? என்ன செய்வது? நம் தலைவர்கள் 58 வயதுக்கு மேல்தான் வயசுக்கே வர்ராங்க,65 வயதில்தான் இளைஞரணி தலைவராக பொறுப்பேற்கிறார்கள்.
 

பாதகஞ் செய்பவரைக் கணடால்

பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

என்றான் பாரதி.

அலகாபாத்தில் தன்னை தொடர்ந்து பல நாட்களாக கேலி,கிண்டல் செய்து வந்த இளைஞன் ஒருவனை கடைவீதியில் பலரும் பார்க்க ஒரு பெண் பளார் பளார் என்று அவன் கன்னத்தில் அறைந்து எட்டி உதைத்திருக்கிறாள்,அவன் அலறி ஓடியும் ஆத்திரம் அடங்காமல் அவன் மோட்டார்பைக்கை தீயிட்டு கொளுத்தி இருக்கிறாள்.

இந்த துணிச்சலும்,வீரமும் எல்லாப்பெண்களுக்கும் அமைந்து விட்டால் காலித்தனங்கள் காலி செய்து கொண்டு ஓடிவிடுமல்லவா?

இந்த துணிச்சல் பெண்ணினத்திற்கு வர என்ன செய்யவேண்டும்? முதலில் பெண்களை போலியாக புகழ்வதை நிறுத்த வேண்டும்,பெண் என்பவள் புனிதமானவள்,தெய்வாம்சம் பொருந்தியவள்,சாந்த சொரூபமானவள் போன்ற பசப்பு வார்த்தைகளை கூறி அவளை முடக்கி வைப்பதை நிறுத்த வேண்டும்.

பெண்ணே நீ ஆண் மகனை போன்றவள் என்பதை விட ஆணுக்கு சரி நிகர் சமமானவள் என்று உணர்த்தி வளர்க்க வேண்டும்,ஆணுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளும்,உணர்வுகளும் பெண்ணுக்கும் பூரணமாக உண்டு என்ற எண்ணம் பெண்ணினத்துக்கு தோன்றிவிட்டால் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தானாகவே காணாமல் போகும்.

பூக்காரம்மா

சில நேரங்களில் கொள்கைகளில் சமரசம் செய்யவேண்டியிருக்கிறது.

சைக்கிளை மாங்கு மாங்கென மிதித்துக்கொண்டு ப்ப்ப்பூவெய்ய்ய் என பூக்காரம்மா ராத்திரி ஒன்பது மணிக்கு குரல்கொடுக்கும் போது கடுப்பா இருக்கும்.

ஏந்தான் தினமும் ஃபோட்டோவுக்கு பூ போட காசை வ
ேஸ்ட் பண்ணறீங்களோன்னு என் வொய்ஃப்கிட்டயும்,அம்மாவிடமும் சலித்துக்கொள்வேன்.

ஒரு நாள் என் அம்மாவிடம் கேட்டேன்,அம்மா ஊரில் எந்த தெருவுக்குள் போனாலும் இந்த பூக்காரம்மா கண்ணில் படுது,ராத்திரி 9.30 மணிக்கு கூட பூ விக்குதேன்னு கேட்டேன்,அவங்க சொன்ன பதில் இது.

அந்த பூக்காரம்மாவோட கணவர் நோயாளியாம்,வேலைக்கு செல்லமுடியாதாம்,இவருடைய வருமானத்தில்தான் குடும்பம் நடக்குதாம்.இவருடைய எம்பிஏ படிக்க வைத்து விட்டாராம்,பொண்ணு ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறாராம்.

இதை கேட்டவுடன் வாயை மூடிக்கொண்டேன்,ஏன் பூவை வாங்கி காசை வேஸ்ட் பண்ணறீங்கன்னு கேட்கறதை விட்டுட்டேன்.

மன்னராட்சி

இங்கிலாந்து அரசியலுக்கும் இந்திய அரசியலுக்கும் வித்தியாசம் என்ன?

அங்கு மன்னரின் பெயரால் மக்களாட்சி சிறப்பாக செயல்படுகிறது.

ஆனால் இங்கே இந்தியாவிலோ மக்களாட்சி என்ற பெயரில் அறிவிக்கப்படாத மன்னராட்சி (வாரிசு அரசியல்) நடைபெறுகிறது.

எக்ஸ்ரே,ஸ்கேன்

அறிவியல்ரீதியாக அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து பார்த்தால் மதத்தின் பெயரால் இருந்து வரும் நம்பிக்கைகள் முழுக்க முழுக்க பொய்யும் புரட்டும் மட்டுமே என்பது எல்லோருக்கும் தெரியும்.

தெரிந்திருந்தும் மெத்தப்படித்தவர்கள் அறிவியல் உண்மைகளை புறந்தள்ளி ஆன
்மிகத்தை தூக்கிப்பிடிக்கிறார்களே ஏன்? வீண் பிடிவாதமும்,ஏற்றுக்கொண்ட நம்பிக்கையை கைவிட முடியாமையும்தான்.

அத்தகு குருட்டு நம்பிக்கையாளர்கள் எக்ஸ்ரே,ஸ்கேன் எடுக்க பவுடர்,க்ரீம் உதவியுடன் மேக்கப் போட்டுக்கொண்டு செல்பவர்கள்.அவர்களுக்கு தெரியும் எக்ஸ்ரே என்பது உள்ளுறுப்புகளை படமெடுக்கத்தான் என்று.ஆனால் அவர்கள் ஃபோட்டோவுக்கு தயாராகும் மன நிலை அவர்களை எக்ஸ்ரேவுக்கும் மேக்கப் போடச்செய்கிறது.

தேனீக்கள்

இந்த வாரம் ஆனந்தவிகடனில் ஒரு செய்தியை படித்து மனதில் ஏற்பட்ட உதறலின் விளைவால் இந்த பதிவு.

உலகில் இருக்கும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பூக்கும் தாவரங்களின் இனப்பெருக்கம் தேனீக்களின் உதவியால் அயல் மகரந்தசேர்க்கை வாயிலாகவே நடைபெறுகின்றன.

தேனீக்கள் முற்றிலும் அழிந்தால் தாவரங்கள் இல்லை,உணவு இல்லை,பிறகு மனிதகுலமே இல்லை.தேனீக்கள் முற்றிலும் அழியும் நிலை வந்தபிறகு அடுத்த ஐந்து ஆண்டுகளில் மனிதகுலமே அழியத் துவங்கும் என மாபெரும் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் அன்றே கூறியுள்ளார்.

கடந்த 2010-ல் எடுத்த கணக்கெடுப்பின்படி தேனீக்கள் ஆஸ்திரேலியா,ஜெர்மனி, நியூசிலாந்து போன்ற நாடுகளில் பாதியாகவும்,அமெரிக்காவின் ஒரு சில பகுதிகளில் 80 சதவிகிதமும் காணாமல் போய்விட்டனவாம்.

தேனீக்கள் 5கிமீ சுற்றளவுக்கு சென்று தேன் சேகரித்து மீண்டும் தங்கள் கூட்டிற்கு திரும்ப காரணம் பூமியின் மின் காந்த அலைகளாம்.இப்போது செல்போன் கோபுரங்களின் அலைவீச்சினால் தேனீக்கள் மின் காந்த அலைகள் சிதறடிக்கப்பட்டு தேனீக்கள் கூட்டம் கூட்டமாக செத்து மடிகின்றனவாம்.இதற்கு ”காலனி கொலாப்ஸ் டிசார்டர்” என்று விஞ்ஞானிகள் பெயரிட்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே செல்ஃபோன் என்ற ஒரு சாதனத்தால் தினந்தோறும் நம் வீட்டுக்கு வந்து சென்று கொண்டிருந்த சிட்டுக்குருவிகளை தொலைத்து தேடிக்கொண்டிருக்கிறோம்.இப்போது இந்த பேரதிர்ச்சி தகவல் வந்து மிரட்டுகிறது.

மனிதகுலத்துக்கு அழிவு நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையிலே வீட்டுக்கொரு செல்ஃபோன் கொடுப்பது எங்கள் இலக்கு என்று அரசாங்கங்கள் திட்டம் வகுத்துக்கொண்டிருப்பது வேடிக்கையான ஒன்று.

எது எப்படியோ அவ்வாறு ஓரிரு வருடங்களில் மனித குலம் அழியும் நிலை ஏற்பட்டால் நாத்திகனான நான் ஆத்திகர்களிடம் ஒரு கேள்வி கேட்டுவிட்டு சாவேன்,எங்கேப்பா இறுதி தீர்ப்பு நாள்? இனி எப்போதுதான் வருவார்கள் தேவகுமாரனும்,தேவதூதனும் என்று?

ஃபேஸ்புக் காதல்

ஃபேஸ் புக்கில் காதல்வலை,பெண் கர்ப்பம்,இளைஞருக்கு போலிஸ் வலைவீச்சு.

துயர் துடைக்க ஃபேஸ்புக்கில் பணம் வசூல் மோசடி.ஏமாந்தவர்கள் புலம்பல்.

இதெல்லாம் ஏற்றுக்கொள்ளும்படியாகவா இருக்கிறது. நாட்டை உலுக்கும் படி ஒரு துயரம் நடந்தால் அதற்கு உதவ நினைத
்தால் முதல்வர் நிவாரண நிதிக்கோ அல்லது துயரம் நடந்த மாவட்டத்தின் ஆட்சியருக்கோ பணம் அனுப்பலாமே! இந்த அடிப்படை விஷயங்கள் கூட அறியாமல் ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்புவதில் என்ன நியாயம்?

ஃபேஸ் புக் என்பது ஒரு சமூக வலைத்தளம்,கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் இடம் மட்டுமே.இந்த நிலைக்கு மேல் செல்பவர்கள் ஏமாந்து போனால் ஃபேஸ்புக் எப்படி பொறுப்பாக முடியும்? இது என்ன மேட்ரிமோனியல்.காம்-ஆ என்ன?

ஒவ்வொரு தவறுக்கும் ஏமாந்து போனவர்களின் எச்சரிக்கையின்மை மற்றும் விழிப்புணர்வு இன்மையே முழுக்காரணமாக இருந்திட இயலும்.வேறு எதுவும் காரணமாக இருக்க இயலாது.

மாருதி 800 காருக்கு அஷோக் லே லேண்ட் டாரஸ் வண்டி எஞ்சினை பொருத்த முயற்சி செய்யக்கூடாது பாஸ்.
இந்த பக்தர்களைக்கண்டால் ஒரே எரிச்சலாக வருகிறது.அப்பா புள்ளையாரப்பா,ஆஞ்சநேய சுவாமியே எனக்கு சகல சௌபாக்கியத்தையும் கொடு,அழகான புள்ளைய கொடுன்னு வேண்டறாங்களே தவிர,சாமி உன்னை மாதிரி தும்பிக்கையோய பிள்ளைய கொடு,குரங்கு மாதிரி பிள்ளைய கொடு,உன்னை மாதிரி உருவமில்லாத பிள்ளையை கொடுன்னு ஒருத்தரும் வேண்ட மாட்டறாங்கப்பா,சரியான நன்றி கெட்ட ஜென்மங்கப்பா

முப்பது கோடி முகமுடையாள் ,உயிர். மொய்ம்புற வொன்றுடையாள்

முப்பது கோடி முகமுடையாள் ,உயிர். மொய்ம்புற வொன்றுடையாள் -இவள். செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற். சிந்தனை ஒன்றுடையாள் என்று பாடினான் புலவன் அன்று.

உண்மையில் சிந்தனை ஒன்றாக இருக்கிறதா இன்று?
உலகத்தில் இருக்கும் தமிழர்கள் அனைவராலும் வெறுக்
கப்படும் மனிதமிருகம் ராஜபக்க்ஷே.அந்த மனிதனை ஆதரிக்கும் தமிழன் எவரேனும் இருக்கிறானா? அப்படி ஆதரித்தால் அவன் பச்சைத்தமிழனா?

அப்படிப்பட்ட கொடியவனை இனவெறி பிடித்தவனை இந்தியாவிற்கு அழைத்து வந்து புத்தரின் பெயரால் விழா எடுக்கிறார்கள்.யார் எடுத்தது,இதன் பின்னணியில் இருப்பது யார் என்று பார்த்தால் ஒரே நாடு ! ஒரே மக்கள்! ஒரே சட்டம்! என முழங்கும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த்சின்ஹாவின் குடும்பத்தினர்.

இதுதான் ஒரே சிந்தனைக்கு அழகா? தமிழர்களின் உள்ளக்குமுறல் வட இந்திய பாஜக தலைவர்களுக்கு தெரியாதா? அவர்கள் நினைத்திருந்தால் இதை தடுத்து நிறுத்தி இருக்க முடியாதா? முடியவில்லை,ஏனெனில் தமிழந்தானே? சில நாட்களில் சுரணையற்று மறந்து போவான் என்ற எண்ணம்தானே?

இங்கே தமிழகத்தில் காவிக்கட்சியின் மோடிவித்தைகளில் மயங்கி தமிழர் நலனை மறந்திருப்போரே! உங்கள் மத்திய தலைவர்களின் தமிழர் விரோத போக்கை எண்ணிப்பார்த்திடுங்கள்.ஒரே நாடு,ஒரே மக்கள்,ஒரே சட்டம் எனும் சிந்தனை உங்களின் வட இந்தியத்தலைவர்களுக்கு இருக்கிறதா என்று சிந்தனை செய்திடுங்கள்.

ஆராய்ந்து பார்த்திட்டால் அவ்வாறான சிந்தனை இல்லை என்று உணர்வீர்கள்,உணர்ந்து பின்னும் காவிக்கட்சியின் புகழ் பாடுவீர்களானால் உங்கள் மூளை காவி என்னும் குளோரோஃபார்ம் ம்ருந்தால் மறத்து உணர்ச்சியற்று போய் விட்டது என்றே உணரப்படும்.

பெரியார்

இந்த கிழவரிடம் ஏதோ ஒன்று இருக்கு,இன்றைக்கும் சமூகநீதி போராளிகளின் ஆயுதமாக பெரியாரின் கருத்துக்கள் பிரதானமாக இருக்கு.

நான் ரொம்ப நாளா கவனிச்சுட்டு வர்ரேன், என் மனசுல தோன்றிய பகுத்தறிவு கருத்துக்களை இந்த ஃபேஸ்புக்கில் பதிவு செய்தால்,உடனே ரெ
ண்டு கமெண்ட்டுகளாச்சும் பெரியாரை தாக்கி வருது.

பகுத்தறிவு கருத்துக்களை பேசினால் ஆன்மிகவாதிகளுக்கு பெரியார் மேல் கோபம் வருதுன்னா,அந்த அளவுக்கு மதத்தின் பெயரால் மூட நம்பிக்கையை கட்டிக்காத்து வரும் மதவாதிகளுக்கு பெரியார் சிம்மசொப்பனமாக விளங்கியிருக்காருன்னு புரிந்து கொள்ள முடிகிறது.

சும்மா பத்திரிக்கைகளில் வரும் பெரியாரின் கருத்து துணுக்குகளை படிச்சுட்டு பகுத்தறிவு பேசும்போதே ஆன்மிகவாதிகளுக்கு இவ்வளவு கோபம் வருதுன்னா,பெரியார் கருத்துக்களை ஆழமாக படித்துவிட்டு பகுத்தறிவு பேசினால்........?

வருவாரா? அவர் வருவாரா?

வரும் டிசம்பர் 21 இறுதி தீர்ப்பு நாள் அன்று தப்பிக்க ஏதேனும் வழி இருக்கிறதா?

பூமிக்கு வரும் தேவனுக்கு காஸ்ட்லியான சால்வை போட்டு மரியாதை செய்தால் என்னை விட்டு விடுவாரா?

ஆர்யாஸ்,உயர்தர சைவ உணவகம்

ஒவ்வொரு முறையும் வயலுக்கு செல்லும்போது வழியில் இருக்கும் ஓட்டல் ஆர்யாஸ் உயர்தர சைவ உணவகம் என்ற பலகையை காணும்போது எரிச்சலாக இருக்கும்.காரணம் ஓட்டல் உரிமையாளர் திராவிடர்.

அது என்ன ஆர்யாஸ் உயர்தர சைவ உணவகம்? திராவிடன் உணவில் உயர்தரம் இருக்காத
ா? இவை எல்லாமே நம் சிந்தனைகளில் புகுத்தப்பட்ட மாயை அவ்வளவே.

மற்றவர்களில் இருந்து தங்களை தனித்துவப்படுத்தி உயர்த்திக்காட்ட முற்காலத்தில் உருவாக்கப்பட்ட ஏற்பாடுதான் இந்த சைவம் சமாச்சாரம் எல்லாம்.

சைவம் சாப்பிடுபவர்கள் நல்லவர்கள்,மென்மையானவர்கள்,ஒழுக்கமானவர்கள்,புத்திக்கூர்மை உடையவர்கள் என்று திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரம் காலம் காலமாக செய்யப்பட்டு வருகிறது.

சைவம் சாப்பிட்டுகொண்டு மதத்தின் பெயரால் பல கொடுமைகளை செய்து வந்தவர்களிடம் இருந்து சமூக விடுதலையை பெற்றுத்தந்த மனித நேயத்தின் முகவரி தந்தை பெரியார் அசைவப்பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே.

உலகில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளிலும்,பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய விஞ்ஞானிகளிலும் 99 சதவிகிதம் பேர் அசைவ உணவுக்காரர்கள்தான்.

விளம்பரங்கள் செய்யாமல் பல சமூகப்பணிகளை செய்த,மற்றும் செய்து வரும் ஸ்டீவ்ஜாப்ஸ்,பில் கேட்ஸ் போன்ற நாத்திகர்களும் கூட அசைவ உணவுக்காரர்கள்தான்.

ஒரு மனிதனின் மேன்மையான செயல்பாடுகளை அவன் சாப்பிடும் உணவு நிர்ணயிப்பதில்லை.அவனுடைய தனிப்பட்ட குண் நலன்களே தீர்மானிக்கிறது.ஆகையால் இந்த உயர்தர சைவம் என்ற ஒரு விஷயத்தை புறந்தள்ளுவோம்.

எனக்கும் ஒரு ஆசை இருக்கிறது.எதிர்காலத்தில் வசதி வாய்ப்புகள் வரும்போது ஓட்டல் திராவிடன் என்ற பெயரில் சைவம் மற்றும் அசைவத்துக்கு இரண்டு ஓட்டல்கள் திறக்கவேண்டும் என்று.

மின்தடை

என்னதான் வெளிநாட்டுக்காரன் தொழில் நுட்பத்தில் கலக்கினாலும் ஒரு சில விஷயங்களில் நம்மாளுங்களோட தொழில் நுட்ப அறிவு மெய் சிலிர்க்க வைக்குது.

கரண்ட் கம்பிய தொட்டா ஷாக் அடிக்கும்தானே? ஆனால் எங்க ஊரில் கரண்ட் கம்பியை தொட்டா ஷாக்கே அடிக்க மாட்டேங்குது.இதை பாராட்டாம மின்தடைன்னு சொல்லி எல்லோரும் திட்டறாங்கப்பா.

கடவுள் நம்பிக்கை


கடவுள் நம்பிக்கை என்பது எங்களின் தனிப்பட்ட நம்பிக்கை,அதை நீங்கள் மறுத்து பேசுவதால் எங்கள் மனம் வேதனை அடைகிறது என்று ஆத்திக நண்பர்கள் சிலர் பேசுவதால் நானும் இனி ஒரு நிபந்தனையுடன் கடவுள் மறுப்பை கைவிடலாம் என முடிவு செய்துள்ளேன்.

அந்த நிபந்
தனை என்னவெனில், கடவுள் இல்லை என்பது எங்களின் அறிவின் துணைகொண்டு ஏன் எதற்கு என கேட்டு ஆராய்ந்து எடுத்த ஒரு முடிவு.கடவுள் இல்லை என்பது எங்களின் உறுதியான நம்பிக்கையாகி விட்டது.எனவே நீங்கள் கடவுள் இருக்கிறது என்று சொல்வது கடவுள் மறுப்பாளர்களான எங்களின் மனதை புண்படுத்துகிறது.வேதனைப்படுத்துகிறது,சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்த்துகிறது.

எனவே ஆத்திக நண்பர்கள் தயவு செய்து இனி கடவுள் இருப்பதாக பேசி எங்கள் மனதை புண்படுத்த வேண்டாம் என வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
 

குரங்கு,முதலை

சிறுவயது முதல் என்னால் விரும்பிப்படிக்கப்படும் மூத்தப்பத்திரிக்கையாளர் திரு.குல்தீப் நய்யார். அவர் கட்டுரைகள் வெளியான காலத்தில் எல்லாம் தினமணிக்கு ஒரு தரம் இருந்தது.அவருடைய பேட்டி இந்த வாரம் ஆனந்த விகடன் இதழில் வெளியாகி இருக்கிறது.சுவாரசியம
ான பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

91 வயதான அவர் இரவு 9 மணிக்கு தொடங்கிய பேட்டியை அதிகாலை 3.50க்கு முடித்து குட்நைட் சொல்லியிருக்கிறார்.அந்தளவுக்கு பத்திரிக்கை துறையின் மீது ஈடுபாடு அவருக்கு.

எமர்ஜென்சி,இந்திய ஜனநாயகம்,ஊடகத்துறை,தமிழக அரசியல்,கூடங்குளம் போராட்டம், ஈழப்போராட்டம் என பல விஷயங்களை பேசியிருக்கிறார்.

வேற்று மொழிக்காரர்,வேறு மாநிலத்தவரான அவர் கூடங்குளம் போராட்டம்,ஈழ விடுதலைப்போர் குறித்து அவர் பேசியுள்ள விஷயங்கள் இங்குள்ள சில பத்திரிக்கைகளின் தமிழர் விரோதபோக்கை நினைவு கொள்ளசெய்து வருத்தத்தில் ஆழ்த்துகிறது.

இங்கே தமிழகத்தில் கல்லாகட்டி காசு பார்த்து சொகுசாக வாழ்ந்து கொண்டு தமிழர்களின் போராட்டங்களை ஏளனம் செய்து செய்தி வெளியிடும் ஒரு சில பத்திரிக்கைகளை காணும்போது, குரங்கு பறித்து போட்ட நாவல்பழங்களை ருசித்து உண்டு கொழித்து கடைசியில் அந்த குரங்கின் ஈரலையே சுவைத்து பார்க்க ஆசைப்பட்ட நன்றிகெட்ட முதலையின் கதைதான் நினைவுக்கு வருகிறது.

கழைகூத்தாடி

காலையில் ஒரு நண்பரை பேருந்து நிலையத்தில் விடுவதற்காக சென்றபோது கண்ட காட்சி இது.தாய் மேளம் கொட்டி தாளம் போட தந்தை வழியில் போவரை அழைக்க இந்த சிறுமி கயிற்றின் மேல் நடந்து வித்தை காட்டுகிறாள்.

இது போன்று பரம்பரையாக வித்தைகாட்டி பிழைப்பு நடத்து
ம் இனத்தை சார்ந்த குழந்தைகளை கல்விச்சாலையில் சேர்த்து பள்ளிகளில் அவர்களை சிறந்த ஜிம்னாஸ்டிக் வீரர்களாக மெருகேற்றலாம் அல்லவா? அதே போல் இந்த இனத்தை சார்ந்தவர்களை உடற்கல்வி ஆசிரியர்களாக்கினால் பல ஜிம்னாஸ்டிக் வீரர்கள் உருவாகி இந்த தேசம் பல சர்வதேச விருதுகளை குவித்திட காரணமாக அமைவார்கள் அல்லவா?

என்ன செய்வது இவர்களுக்கு வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வாக்கு எண்ணிக்கை பலம் இல்லை என்கிறீர்களா? இது போன்று பல சமுதாயத்தினர் இந்தியத்திருநாட்டில் இருக்கிறார்கள்.

பூம்பூம் மாட்டுக்காரர்கள்,குடுகுடுப்பைக்காரர்கள்,கழைக்கூத்தாடிகள்,காட்டு நாயக்கர்,இருளர் என பல நூறு இனங்கள் சாதி சான்று பெறுவதற்கு கூட வழியில்லாமல் இருக்கிறார்கள்.இவர்களுக்கு உரிய நேரத்தில் சாதி சான்றுகள் வழங்கப்படுமாயின் இந்த இனங்களில் இருந்து படித்தவர்கள் உருவாகக்கூடும்.அவர்களின் இழிநிலை மாறக்கூடும்.

இதில் கொடுமையான விஷயம் இதுபோன்ற இனங்களில் பள்ளி இறுதிவரை படித்து முடிக்கும் இளைஞர்கள் சாதிசான்று கிடைக்காமையால் மேற்படிப்புக்கு வழியின்றி செங்கல்சூளைகளில் முடங்கிப்போகின்ற அவலம் ஏற்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை பலம் இன்மையால் கேட்பாரற்று கிடக்கும் இவர்களுக்காக,ஆதிக்க சாதிகளில் பிறந்திருந்தாலும் மனித நேயத்தோடு தங்களின் வாழ்க்கையையே அர்ப்பணித்துகொண்டு உழைக்கின்ற பேராசிரியர் பிரபாகல்விமணி(கல்யாணி புரொபசர்),வழக்குரைஞர் திரு.ரத்தினம் ஆகியோர் என் பார்வையில் மாமனிதர்களாக தெரிகிறார்கள்.

தமிழ்நாடு

பிரிட்டனிடம் இருந்து 1947-ல் பெற்றதுதான் உண்மையான சுதந்திரமா? ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட வரையறைக்குட்பட்ட சுதந்திரம் எப்படி உண்மையான சுதந்திரமாக இருக்க இயலும்?

இந்த மண்ணின் பெரும்பான்மை மக்களுக்கு சமூக நீதி மறுக்கப்பட்டு வ
ந்த நிலையில் அம்பேத்கர்,பெரியார் உள்ளிட்ட பல ஆன்றோர்களும்,சான்றோர்களும் போராடியதன் விளைவாகவே ஓரளவுக்கு வர்ணாசிரமத்தினால் பல வர்ணங்களாக வகைப்படுத்தப்பட்டவர்கள் ஓரளவு சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறோம்.இருப்பினும் முழுமையான சமூகநீதி இன்னும் கிடைக்கவில்லை.

இந்த அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு ஏற்றத்தாழ்வுகளில் உழலும் மக்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை கோடிக்கணக்கில் பெரும்பான்மையினராக வாழ்ந்து வருகிறார்கள்.போராட்டங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.இந்த சமூக நீதி போராட்டங்கள் இந்த மண் முழுமைக்குமே அவசியமாகிறது.

நிலைமை இவ்வாறு இருக்க,என்னைப்போலவே எனக்கிருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் சந்தித்து வருகின்ற அந்த மக்களை எல்லாம் மறந்து விட்டு தமிழ்தேசியம்,தனித்தமிழ்நாடு என்ற குறுகிய வட்டத்துக்குள் சிந்திக்க சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

இலவச லேப்டாப்

நான் 9ம் வகுப்பு படிக்கும் போது முதன்முதலாக என்னுடைய பள்ளிக்கு கம்ப்யூட்டர் வாங்கப்பட்டது.எங்களுக்கு கம்ப்யூட்டர் என்னவென்று தெரியாத நேரம் அது.(இப்போதும் அதே நிலைதான்) கம்ப்யூட்டர் என்றால் இயந்திர கைகால்கள் இருக்கும் என்ற கற்பனையில் கம்ப்யூ
ட்டரை பார்க்க அந்த அறையை எட்டிப்பார்க்க முயலுவோம்.தோட்டவேலை ஆசிரியர் குச்சியை எடுத்துக்கொண்டு விரட்டி அடிப்பார்.

இன்று நிலைமை வேறு.பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படுகிறது.மாணவ,மாணவிகள் பேருந்துகளில் அதை இயக்கிக்கொண்டிருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.ஆனால் அதற்கும் வேட்டு வைக்கும் முயற்சி நடைபெறுகிறது.

இன்றைக்கும் கிராமப்புற மாணவர்களில் பலர் தங்களின் வறுமை சூழலை சமாளித்தே கல்வியை தொடர்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.இத்தகு மாணவர்களை குறிவைத்து அரசு வழங்கிய லேப்டாப்புகளை விலைக்கு வாங்க ஊருக்கு ஒரு கூட்டம் அலைகிறது.விலை 7000 -ல் இருந்து 12000 வரை போகிறதாம்,என்ன ஒரு கேவலமான மனிதர்கள் பாருங்கள்.

இதை பார்க்கும் போது எனக்கு ஒரு விஷயம் புரிந்தது.இப்படித்தான் அந்த காலத்தில் ஏழைகளுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள்,பூமிதான நிலங்கள்,எஸ்/எஸ்டி,பெண்கள்,முன்னாள் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட கண்டிஷன் பட்டா நிலங்கள் எல்லாம் அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி பறிக்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.

படிக்கிற பிள்ளைகள் பாவம்,அவர்களை விடுங்கப்பா. நீங்கள் அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி பறிப்பது அவர்களின் கம்ப்யூட்டரை அல்ல,கம்ப்யூட்டர் அறிவு என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.உங்களுக்கு விற்ற பிறகும் அந்த ஏழை மாணாக்கர்களின் மனதில் தங்கள் கம்ப்யூட்டரை ஏழ்மையால் இழந்த ஏக்கமும்,சோகமும் இருந்து கொண்டுதான் இருக்கும்.

இறுதித்தீர்ப்பு நாள்

இறுதித்தீர்ப்பு நாள் வரும்,அப்போது நான் வருவேன் என்று சொன்னவர்களே! வருகிற தேதியை சொல்லாம போய்ட்டீங்களே! தேதி சொல்லாததால் இந்த பூமியில்தான் எவ்வளவு பிரச்சினைகள் அட்டூழியங்கள்?

இந்த இறுதிதீர்ப்பு என்ற ஒன்றை வைத்துக்கொண்டு தேவன் அழைக்கிறார் என்று பலரும் கல்லா கட்டி காசு சம்பாதிப்பது கூடவா உங்கள் கவனத்துக்கு இன்னும் வரவில்லை?

பன்றியின் வீரம் கூட......

ஒரு மூலிகைத்தழையை தேடி சென்றபோது ஒரு பன்றிக்கூட்டம் கண்ணில் பட்டது.தன் குட்டிகளுக்கு ஏதேனும் ஆபத்தோ என்று எண்ணி என்னைப்பார்த்து உர் உர் என்று சத்தம் எழுப்பி முறைத்து நின்றதை பார்த்து திகைத்து போய் விட்டேன்.

இந்த பன்றியின் வீரம் உண்மையில் ம
ெச்சத்தகுந்தது.தன் இனத்துக்கு ஆபத்தோ என்று நினைக்கும் வேளையில் அது அஞ்சாமல் நின்று எதிர்ப்பதை சங்க இலக்கியத்திலேயே கபிலர் பாடியுள்ளார்.அந்த பாடல்

நகை நீ கேளாய் தோழி! அல்கல்

வய நாய் எறிந்து, வன்பறழ் தழீஇ

இளையர் எய்துதல் மடக்கிக் கிளையொடு

நால்முலைப் பிணவல் சொலியக் கான் ஒழிந்து

அரும்புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற

தறுகட் பன்றி நோக்கி, கானவன்

குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி

மடைசெலல் முன்பின் தன் படைசெலச் செல்லாது

‘அருவழி விலக்கும் எம் பெருவிறல் போன்ம்’ என

எய்யாது பெயரும்

பன்றியின் வீரம்........ ஆனால் நம் மனித இனம்?????? நம்மிடையே தொடுக்கப்பட்ட அடக்குமுறைகள்,ஒடுக்குமுறைகள்,சாதி,மத ஏற்றத்தாழ்வுகளைக்கண்டு எளிதில் பொங்கி எழுவதில்லையே.


பேசும்போது மட்டும் சிங்கம்லே என்கிறோம்,ஆனால் பன்றி அளவு வீரத்தைக்கூட நாம் அவ்வளவு சுலபத்தில் வெளிப்படுத்துவதில்லை.

நாராயணசாமி

சும்மா தமாசுக்காச்சும் இவரால் இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் விடமுடியுமா? விட்டுவிட்டு புதுச்சேரி அரசியலில் நீடிக்கமுடியுமா?

கூடங்குளம் அணு உலை புதுச்சேரிக்கு மாற்றப்படுகிறது.

அல்லது ரஷ்ய உதவியுடன் புதுச்சேரியில் புதிதாக ஒரு அணு உலை கட்டப்படும் என்று.

ஜோதிமயம்

ஆன்மிகக்கதைகளில் மகான்கள் எனப்புகழப்படுபவர்களில் எவரெல்லாம் சிறிது பரந்த மனப்பான்மையுடன் மூடநம்பிக்கைகளை எதிர்த்தார்களோ அல்லது முட்டாள்தனமான கட்டுப்பாடுகளை மீறினார்களோ, அவர்களெல்லாம் இறைவன் மூட்டிய ஜோதியில் இறங்கி இறைவனுடன் இரண்டறக்கலந்து போனார்கள் என்று கதைகள் முடிக்கப்பட்டுள்ளன்வே,இதில் ஏதேனும் உள்குத்து இருக்குமோ?

Saturday 6 October 2012

சனாதானதர்மம்


உலகில் எத்தனை மதங்கள் இருந்தாலும் எங்களின் சனாதான தர்மத்திற்கு ஈடாக வரமுடியுமோ?

மற்ற மதங்களில் எல்லாம் பஞ்சமன்,பரதேசி,சூத்திரன்,இன்னும் பிற இழிகுலத்தில் பிறந்தவன் எல்லாம் மத நூல்களை கற்றறிந்து மதகுருமார்களாக ஆகமுடிகிறது.இதனால் மதங்களின் புனிதத்தன்மை கெட்டுப்போகாதா?

ஆனால் எங்கள் சனாதான தர்மத்தை பாருங்கள்,கண்டவரையெல்லாம் அர்ச்சகராக அனுமதிப்பதில்லை நாங்கள்.எங்கள் ஆலயங்களில் அர்ச்சகராக எல்லோரையும் அனுமதிப்பதில்லை,பிறப்பின் அடிப்படையில் ஒரு தகுதியை வைத்திருக்கிறோம்,அதனால்தான் எங்களின் மதம் புனிதத்தன்மையோடு இருக்கிறது.

சனாதான தர்மமே உன் புனிதத்தன்மை கண்டு பூரித்துப்போகிறோம்,புளகாங்கிதம் அடைகிறோம்,பெருமை கொள்கிறோம்,உன்னை ஆராதிக்கிறோம்,போற்றி வணங்குகிறோம்.

பெரிய பதவி

என்னப்பா இந்த நாட்டில் எல்லாம் முரண்பாடாகவே இருக்கு, நாட்டுக்கு பிரதமரா,ஜனாதிபதியா, நீதிபதியா எல்லோரும் ஆகமுடியுது.

யார் வேண்டுமானாலும் சிவில் சர்வீஸ் குரூப்-1 தேர்வுகளை எழுதி கலெக்டராக முடியுது,போலிஸ் அதிகாரியா ஆகமுடியுது.

ஆனால் வேதம்,பு
ரோகிதம்,மந்திரம்,ஸ்லோகம் எல்லாம் ஒருவர் அறிந்திருந்தாலும், தெரிந்திருந்தாலும் அவர் குறிப்பிட்ட சாதியை சாராதவராக இருந்து விட்டால் அவரால் அர்ச்சகராக முடியவில்லையே ஏன்?

பிரதமர்,ஜனாதிபதி,கலெக்டர்,போலிஸ், நீதிபதி இது எல்லாவற்றையும் விட பெரிய பதவியாங்க இந்த அர்ச்சகர் பதவி?