உலகில் எத்தனை மதங்கள் இருந்தாலும் எங்களின் சனாதான தர்மத்திற்கு ஈடாக வரமுடியுமோ?
மற்ற மதங்களில் எல்லாம் பஞ்சமன்,பரதேசி,சூத்திரன்,இன்னும் பிற இழிகுலத்தில் பிறந்தவன் எல்லாம் மத நூல்களை கற்றறிந்து மதகுருமார்களாக ஆகமுடிகிறது.இதனால் மதங்களின் புனிதத்தன்மை கெட்டுப்போகாதா?
ஆனால் எங்கள் சனாதான தர்மத்தை பாருங்கள்,கண்டவரையெல்லாம் அர்ச்சகராக அனுமதிப்பதில்லை நாங்கள்.எங்கள் ஆலயங்களில் அர்ச்சகராக எல்லோரையும் அனுமதிப்பதில்லை,பிறப்பின் அடிப்படையில் ஒரு தகுதியை வைத்திருக்கிறோம்,அதனால்தான் எங்களின் மதம் புனிதத்தன்மையோடு இருக்கிறது.
சனாதான தர்மமே உன் புனிதத்தன்மை கண்டு பூரித்துப்போகிறோம்,புளகாங்கிதம் அடைகிறோம்,பெருமை கொள்கிறோம்,உன்னை ஆராதிக்கிறோம்,போற்றி வணங்குகிறோம்.
No comments:
Post a Comment