Sunday 7 October 2012

பன்றியின் வீரம் கூட......

ஒரு மூலிகைத்தழையை தேடி சென்றபோது ஒரு பன்றிக்கூட்டம் கண்ணில் பட்டது.தன் குட்டிகளுக்கு ஏதேனும் ஆபத்தோ என்று எண்ணி என்னைப்பார்த்து உர் உர் என்று சத்தம் எழுப்பி முறைத்து நின்றதை பார்த்து திகைத்து போய் விட்டேன்.

இந்த பன்றியின் வீரம் உண்மையில் ம
ெச்சத்தகுந்தது.தன் இனத்துக்கு ஆபத்தோ என்று நினைக்கும் வேளையில் அது அஞ்சாமல் நின்று எதிர்ப்பதை சங்க இலக்கியத்திலேயே கபிலர் பாடியுள்ளார்.அந்த பாடல்

நகை நீ கேளாய் தோழி! அல்கல்

வய நாய் எறிந்து, வன்பறழ் தழீஇ

இளையர் எய்துதல் மடக்கிக் கிளையொடு

நால்முலைப் பிணவல் சொலியக் கான் ஒழிந்து

அரும்புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற

தறுகட் பன்றி நோக்கி, கானவன்

குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி

மடைசெலல் முன்பின் தன் படைசெலச் செல்லாது

‘அருவழி விலக்கும் எம் பெருவிறல் போன்ம்’ என

எய்யாது பெயரும்

பன்றியின் வீரம்........ ஆனால் நம் மனித இனம்?????? நம்மிடையே தொடுக்கப்பட்ட அடக்குமுறைகள்,ஒடுக்குமுறைகள்,சாதி,மத ஏற்றத்தாழ்வுகளைக்கண்டு எளிதில் பொங்கி எழுவதில்லையே.


பேசும்போது மட்டும் சிங்கம்லே என்கிறோம்,ஆனால் பன்றி அளவு வீரத்தைக்கூட நாம் அவ்வளவு சுலபத்தில் வெளிப்படுத்துவதில்லை.

No comments:

Post a Comment