Sunday 7 October 2012

ஆர்யாஸ்,உயர்தர சைவ உணவகம்

ஒவ்வொரு முறையும் வயலுக்கு செல்லும்போது வழியில் இருக்கும் ஓட்டல் ஆர்யாஸ் உயர்தர சைவ உணவகம் என்ற பலகையை காணும்போது எரிச்சலாக இருக்கும்.காரணம் ஓட்டல் உரிமையாளர் திராவிடர்.

அது என்ன ஆர்யாஸ் உயர்தர சைவ உணவகம்? திராவிடன் உணவில் உயர்தரம் இருக்காத
ா? இவை எல்லாமே நம் சிந்தனைகளில் புகுத்தப்பட்ட மாயை அவ்வளவே.

மற்றவர்களில் இருந்து தங்களை தனித்துவப்படுத்தி உயர்த்திக்காட்ட முற்காலத்தில் உருவாக்கப்பட்ட ஏற்பாடுதான் இந்த சைவம் சமாச்சாரம் எல்லாம்.

சைவம் சாப்பிடுபவர்கள் நல்லவர்கள்,மென்மையானவர்கள்,ஒழுக்கமானவர்கள்,புத்திக்கூர்மை உடையவர்கள் என்று திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரம் காலம் காலமாக செய்யப்பட்டு வருகிறது.

சைவம் சாப்பிட்டுகொண்டு மதத்தின் பெயரால் பல கொடுமைகளை செய்து வந்தவர்களிடம் இருந்து சமூக விடுதலையை பெற்றுத்தந்த மனித நேயத்தின் முகவரி தந்தை பெரியார் அசைவப்பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே.

உலகில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளிலும்,பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய விஞ்ஞானிகளிலும் 99 சதவிகிதம் பேர் அசைவ உணவுக்காரர்கள்தான்.

விளம்பரங்கள் செய்யாமல் பல சமூகப்பணிகளை செய்த,மற்றும் செய்து வரும் ஸ்டீவ்ஜாப்ஸ்,பில் கேட்ஸ் போன்ற நாத்திகர்களும் கூட அசைவ உணவுக்காரர்கள்தான்.

ஒரு மனிதனின் மேன்மையான செயல்பாடுகளை அவன் சாப்பிடும் உணவு நிர்ணயிப்பதில்லை.அவனுடைய தனிப்பட்ட குண் நலன்களே தீர்மானிக்கிறது.ஆகையால் இந்த உயர்தர சைவம் என்ற ஒரு விஷயத்தை புறந்தள்ளுவோம்.

எனக்கும் ஒரு ஆசை இருக்கிறது.எதிர்காலத்தில் வசதி வாய்ப்புகள் வரும்போது ஓட்டல் திராவிடன் என்ற பெயரில் சைவம் மற்றும் அசைவத்துக்கு இரண்டு ஓட்டல்கள் திறக்கவேண்டும் என்று.

No comments:

Post a Comment