Sunday 7 October 2012

கடவுள் நம்பிக்கை


கடவுள் நம்பிக்கை என்பது எங்களின் தனிப்பட்ட நம்பிக்கை,அதை நீங்கள் மறுத்து பேசுவதால் எங்கள் மனம் வேதனை அடைகிறது என்று ஆத்திக நண்பர்கள் சிலர் பேசுவதால் நானும் இனி ஒரு நிபந்தனையுடன் கடவுள் மறுப்பை கைவிடலாம் என முடிவு செய்துள்ளேன்.

அந்த நிபந்
தனை என்னவெனில், கடவுள் இல்லை என்பது எங்களின் அறிவின் துணைகொண்டு ஏன் எதற்கு என கேட்டு ஆராய்ந்து எடுத்த ஒரு முடிவு.கடவுள் இல்லை என்பது எங்களின் உறுதியான நம்பிக்கையாகி விட்டது.எனவே நீங்கள் கடவுள் இருக்கிறது என்று சொல்வது கடவுள் மறுப்பாளர்களான எங்களின் மனதை புண்படுத்துகிறது.வேதனைப்படுத்துகிறது,சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்த்துகிறது.

எனவே ஆத்திக நண்பர்கள் தயவு செய்து இனி கடவுள் இருப்பதாக பேசி எங்கள் மனதை புண்படுத்த வேண்டாம் என வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
 

No comments:

Post a Comment