Wednesday 22 August 2012

அடிமையாக்கிய கதைகள்

சுருங்கக் கூற வேண்டுமானால்,பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக்கிக் கொண்டு தங்களுடைய நிலைமையை துஷ்பிரயோகப்படுத்தி,தங்கள் விருப்பம்போல் எழுதிய கட்டுக்கதைகளுக்கு எல்லா விஷயங்களையும் உட்படுத்தி வைத்தார்கள்.இந்த கற்பனைக்கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன்,சாமர்த்தியமாய்ப் பிறரை அழுத்தி,தங்கள் நிலைமையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப்பட்டவையாகும்.

-ஹென்றி பெவரிட்ஜ் (”விரிவான இந்திய சரித்திரம்; முதற்பாகம்” 1895)

கறுப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு

வாழும் இடத்திற்கேற்ப,பூகோளரீதியாக அங்கு வாழும் மனிதனின் நிறம் இயற்கையால் நிர்ணயிக்கப்படுகிறது.
உடல் நிறத்தை நிர்ணயிக்கும் மெலனின் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டு இருக்கும்,அதனடிப்படையிலேயே நிறமும் அமைந்து விடுகிறது.

சூரிய ஒளி மெலனோ சைட்ஸ் செல்க
ளின் உற்பத்தியை அதிகமாக உற்பத்தி செய்ய தூண்டுவதால்தான் குளிர்ப்பிரதேசங்களில் வாழ்பவர்களை விட வெப்பப்பிரதேசங்களில் வாழ்வோர் கறுப்பாக இருக்கிறார்கள்.

காரணம் இப்படியிருக்க,இயற்கை நமக்கு நிர்ணயித்த மாநிறத்தை வெறுத்து எப்படியாகிலும் சிகப்பாகிவிட மாட்டோமா என்று ஏங்குவது நம்மினமாகத்தான் இருக்கும்.

அயல் நாட்டிலிருந்து படையெடுத்து வந்த இஸ்லாமியர்கள்,அதன்பிறகு வந்த வெள்ளையர்களின் நிறம், நீண்ட மூக்கு இவற்றால் கவரப்பட்ட தமிழன் மனதில் தன் நிறம் குறித்து ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாகிவிட்டது போலும்.அதனால்தான் அடேய் கருவாப்பயலே,கருஞ்சட்டி மூஞ்சா என்று தன் இனத்தின் நிறத்தையே கேலி செய்யும் காமெடிக்காட்சிகள் சினிமாவில் வரும்போது அதையும் வயிறு குலுங்க சிரித்து ரசிக்கிறான்.

இதில் ஆபத்தான விஷயம் சிவப்பாக,வெள்ளையாக இருப்பவர் கறுப்பாக இருப்பவரைவிட நல்லவராக,உயர்ந்த குணங்கள் உடையவராக,புத்திக்கூர்மையுடன் இருப்பார் என்று நம்புவது.

இத்தகு நிறத்தின்பொருட்டு தமிழனுக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மையால்தான்,சிறிதளவும் பயன்கொடுக்காது என்று உறுதியாக தெரிந்தும்,சிவப்பு நிறம் கொடுக்கும் கிரீம்கள் விற்பனை சக்கைபோடு போடுகிறது போலும் தமிழகத்தில்.

இறையாண்மை

இவர்கள் ஏற்கனவே அவநம்பிக்கையில் இருக்கிறார்கள்,இந்தியா எனும் நாடு தங்கள் மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக நினைப்பு அவர்களுக்கு எப்போதோ நம் ஆட்சியாளர்களின் பாராமுகத்தால் ஏற்பட்டுவிட்டது.

மற்ற மாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்
லும் அவர்கள் இந்தியாவுக்கு வேலைக்கு போகிறேன் என்று சொல்வதற்கு காரணம் முழுக்க நம் மத்தியில் ஆண்ட,ஆள்பவர்களின் அலட்சியமே.

நிலைமை இவ்வாறு இருக்க அந்த மக்கள் மீது பல மாநிலங்களில் நடந்து வரும் தாக்குதல் அவர்களை தவறான பாதைக்கு திசை திருப்பக்கூடும்.காரணம் எல்லைப்புற மாநில மக்களாகிய அவர்கள் வெறுப்பின் காரணமாக வெளிநாட்டு சதிவலையில் விழக்கூடும்.

ஒரே நாடு! ஒரே மக்கள்! ஒரே சட்டம்! என்று கூறிக்கொண்டு இப்படி நாட்டில் பிரிவினையை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார்களே!

மரபு மீறல்

கிறிஸ்து மீது நம்பிக்கை வைத்து சர்ச்சுக்கு செல்கிறேன்: உமாசங்கர் ஐஏஎஸ்.

இந்த நாடு சுதந்திரம் அடைந்த தருணத்தில் ஆட்சிப்பொறுப்பு ஏற்ற முதல் ஆட்சியாளர்களுக்கு இந்திய அரசியல்வாதிகள் மீது அவநம்பிக்கை இருந்தது.எதிர்காலத்தில் இவர்கள் இந்தியாவை அழ
ிவுப்பாதைக்கு கொண்டு சென்றுவிடுவர் என்று ஐயமுற்றனர்.

அத்தகு நிலை ஏற்பட்டால் இந்தியாவை காப்பாற்றும் சக்திகளாக ஐஏஎஸ் அதிகாரிகள் இருப்பர் என நேருவும்,படேலும் நம்பினர்.அதனால்தான் இந்த பதவிக்கு அதிக அதிகாரங்களை கொடுத்தனர்.

சிலர் ஓய்வுக்கு பிறகு அரசியல் கட்சிகளில் சேர்ந்து பணியாற்றுவதைக்காணும் போது அவர்கள் பணியில் இருந்தபோது,அவர்களின் நடு நிலைமையை சந்தேகப்படவேண்டியதாகிறது.

அதனால்தான் திரு.முருகன் ஐஏஎஸ் என்ற ஓய்வுபெற்ற அதிகாரி தினமணியில் எழுதும் கட்டுரைகளை நான் படிப்பதே இல்லை.ஏனெனில் அவர் சரத்குமாரின் கட்சியில் இருந்தவர்.

தற்போது உமாசங்கர் ஐஏஎஸ் மதப்பிரச்சாரங்களுக்கு செல்வது கூட முரணான ஒன்றுதான். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த அவர் தன்னுடைய நேர்மையை கிறித்தவ மதப்பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகிறார் என்றே நினைக்கத்தோன்றுகிறது.மதம் என்பது அவருடைய உரிமையாயினும் பிரச்சாரம் என்பதும் ஐஏஎஸ் அதிகாரியாக அவருக்கு இருக்கும் உரிமையா? தார்மீக கட்டுப்பாடு வேண்டும் அல்லவா?

உமாசங்கர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர்,அவரைப்போய் பழிக்கிறாயே,இனத்துரோகி என்று என் மேல் பாயாதீங்கப்பா.

கடவுள் மீது சத்தியம்

எந்த ஃபைனான்ஸ் கம்பெனிக்கு உள்ளே போனாலும் ஆளுயரத்துக்கு ஏதாவது ஒரு கடவுள் ஃபோட்டோ வெச்சிருக்காங்க.ஆனா எந்த ஒரு ஃபைனான்ஸிலும் கடவுள் மேல சத்தியம் வாங்கிகிட்டு கடன் கொடுக்க மாட்டறாங்கப்பா,எல்லோரும் சொத்து பத்திரம் அல்லது ஜாமீன் பத்திரம் கேட்க
றாங்கப்பா.

தெரியாமத்தான் கேட்கறேன் சுப்ரீம் பவர்னு சொல்லப்படும் கடவுளை விட உயர்ந்ததா இந்த ஜாமீன் பத்திரம்,சொத்துபத்திரம்,பிராமசரி நோட் எல்லாம்? அப்புறம் ஏன்பா பெருசு பெருசா கடவுள் படத்தை தொங்கவிட்டுக்கிட்டு இருக்காங்க?

கடவுளே.....

கடவுளே நீ என்ன காப்பத்தலன்னாலும் பரவாயில்ல,தயவு செய்து உன்னை மட்டுமாவது காப்பாத்திக்குப்பா.அடிக்கடி சிலை திருட்டு,சிலை கடத்தல்னு செய்தி வருது.

அக்கறை

மெத்தப்படித்த ஔரங்கசீப் கொடுங்கோலன் எனப்படும் போது,கல்விகற்கும் வாய்ப்பை இளமையில் இழந்த அக்பர் மகாஅக்பர் என அழைக்கப்படுவது ஏன்?

தன் குழந்தைப்பருவம் முழுவதும் தன் தந்தையுடன் உயிருக்கு அஞ்சி பாலைவனங்களில் அலைந்து திரிந்த அக்பருக்கு தான் கல்வ
ி கற்கவில்லையே எனும் ஏக்கம் இருந்தது.அந்த ஏக்கத்தினை எப்படி தீர்த்துக்கொண்டார்? தன் சபை முழுவதும் தான்சேன்,அபுல்பசல்,பீர்பால் போன்ற கற்றறிந்த சான்றோர்களையும் ஆன்றோர்களையும் தன்னருகே வைத்துக்கொண்டார்.கலைகளையும்,இலக்கியங்களையும் ஊக்குவித்தார்.சமய,சமூக நல்லிணக்கத்தை பேணிக்காத்தார்.இத்தகு காரணங்களால்தான் அவர் மகா அக்பர் என அழைக்கப்படுகிறார்.

அடுத்து நம்முடைய காமராசர்.மூதறிஞர் என அழைக்கப்படும் ராஜாஜி,தீரர்சத்தியமூர்த்தி என்ற ஜாம்பாவான்களைவிட மக்களால் கர்மவீரர் என அன்புடன் அழைக்கப்படுகிறார்,ஏனெனில் பள்ளிப்படிப்பையே பாதியில் கைவிட நேர்ந்த காமராசருக்கு சமூகத்தின்பால் அக்கறை இருந்தது,அதனால்தான் அவர் காலத்தில் பல ஆயிரம் பள்ளிகள் துவங்கப்பட்டன,பள்ளிக்கு மாணவர்களை ஈர்க்கும் விதமாக மதிய உணவு உள்ளிட்ட பல நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.மேலும் பல மக்கள் நல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன,இதனால்தான் இன்றும் கர்மவீரர் மக்கள் மனதில் நிலையான இடம்பிடித்து வாழ்கிறார்.

கல்வி பயில முடியாத அக்பருக்கும்,காமராசருக்கும் சமூகத்தின் மீது இருந்த அக்கறை,இன்று பல தடைகளை தாண்டி உயர்ந்த நிலைக்கு வந்த பலருக்கு இல்லாமல் போனது ஏன்?

பெரியாரின் சமூகநீதி போராட்டங்களால் தங்களின் முந்தைய தலைமுறை சமூக விடுதலை பெற்றதை மறந்து பெரியாரை இகழ்வதை என்னென்று சொல்வது?

அம்பேத்கர் பெற்றுத்தந்த இட ஒதுக்கீட்டில் படித்து விட்டு அம்பேத்கரா எங்களுக்கு பரீட்சை எழுதினார் என்று கேட்போரை எந்த வரிசையில் சேர்ப்பது?

அடித்தளத்தில் இருந்து எப்படியோ போராடிஒரு அந்தஸ்தினை பெற்ற பிறகு,அப்பாடா தப்பித்தோம் என்று பெருமூச்சு விடுவோரையே இப்போது பெரும்பாலும் காணமுடிகிறது.தன்னைப்போல் இருக்கும் தன் சமுகத்தை கைதூக்கி விடவேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் இல்லாமல் போனதே.

பெரியார்,அம்பேத்கர்,காமராசர் போன்றோரும் சுய நலத்தோடு தங்கள் நலன்,தங்கள் குடும்ப நலன் என்று சிந்தித்திருந்தால் நம் நிலைமை என்னவாகியிருக்கும்?

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம் பழுத்தற்று. என்று சொன்னான் வள்ளுவன்.

இதன் பொருள் மற்றவர்க்கு உதவும் இரக்ககுணமில்லாதவனிடம் இருக்கும் செல்வமானது ஊருக்கு நடுவே நச்சு மரத்தில் பழுத்திருக்கும் பழம் போன்றது என்பதாகும்.

மேலே குறிப்பிட்ட தலைவர்கள் ஊருக்கு நடுவே பழுத்திருக்கும் நல்ல கனியாக விளங்கினார்கள்.எனவேதான் மக்கள் மனதில் நன்றியுடன் போற்றப்படுகிறார்கள்.

நாம் எப்படி? ஊருக்கு நடுவே பழுத்திருக்கும் நச்சுக்கனியா? நல்ல கனியா?

காமராசர்

இங்கே நம் இரண்டு பேருக்கு மட்டும்தான் சாப்பாடு,சிக்கனமாக இருக்கணும்,தேவையான அரிசி,பருப்பு எல்லாம் பக்கத்து ரேஷன் கடையில் வாங்கிக்கோப்பா என்றார் காமராசர்.

அங்க வாங்கும் அரிசி வாடை அடிக்குது அய்யா.வேறு எங்காகிலும் வாங்கலாம், நல்ல சாப்பாடு சா
ப்பிடலாம் அய்யா என்றாராம் உதவியாளர் வைரவன்.

முதலமைச்சர்தாம்ல இந்த அரிசியை முதலில் சாப்பிடணும்,இந்த மக்களுக்கு என்னிக்கு நல்ல அரிசி கிடைக்குதோ,அன்னிக்கு நானும் நல்ல அரிசி சாப்பிடலாம்,ஜனங்க என்ன சாப்பிடறாங்களோ அதுதான்யா நமக்கும் சாப்பாடு என்றாராம் கோபமாக.

என்னே ஒரு எளிமையான குணம் கர்மவீரரிடம் பாருங்கள்.காமராசர் காலமானபோது அவரிடம் இருந்தது பத்து வேட்டி,சட்டைகளும்,66 ரூபாய் பணமும்தான்.

இத்தகு எளிமையான குணம் இன்றைக்கு இருக்கும் தலைவர்கள் எவரேனுக்கும் இருக்கிறதா?

நாந்தான் அடுத்த எம்ஜிஆர்,அடுத்த கருணாநிதி என்று எவர் வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்.ஆனால் நாந்தான் அடுத்த காமராசர் என்று எவரேனும் சுய நலத்துக்காக சொல்வாரேயானால் சொல்பவர் மனசாட்சியே அவரை கொன்று விடும்.அதனால்தான் எவரும் சொல்லிக்கொள்வதில்லை போலும்.

Thursday 16 August 2012

இளைப்பாருதல் உண்மையில் யாருக்கு?

காலையில் தூங்கி எழுந்து தூக்க கலக்கத்துடன் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தால் இந்த போஸ்டர் எதிர் வீட்டு சுவரில்.

எல்லோருக்கும் இளைப்பாறுதல் தருவேன் என்ற வார்த்தையை பார்த்தவுடன்,யாரோ பைபாஸ் ரோட்டில் பயணவழி உணவகம் துவங்கியிருக்காங்கன்னு நினை
ச்சுட்டேன்,அப்புறம் உற்று பார்த்தால் புரியுது,யாரோ ஒருத்தர் மதபோதனை செய்ய பயிற்சி எடுத்து புதுசா ஒரு வெந்தகோஸ்,சாரி பெந்தகோஸ்தே சர்ச்சு துவக்கியிருக்காரு,அதற்கான விளம்பரம் இதுன்னு புஞ்சுது.

புதுசா சர்ச்சு துவங்கும்போது ரொம்ப ஏழ்மையாக இருக்கும் பாஸ்டருங்க எல்லோரும் சில வருடங்களில் சொகுசு கார்கள்,ஆடம்பர வீடுகள்,வீட்டுமனைகள்,விவசாய நிலங்களுக்கு சொந்தக்காரரா மாறிடறாங்களே எப்படி?இத்தனைக்கும் அவங்க வேற வேலைக்கு போகறது இல்லை.பாஸ்டரானா வருமானம் கொட்டுமா?

என்னோட சந்தேகம்,உண்மையான இளைப்பாறுதல் ஏமாந்து அங்கே போகும் மக்களுக்கா? இல்லை பாஸ்டர் குடும்பத்தினருக்கா?

நான் சிவன், நீ பார்வதி வா........

த்தூ.......னு இவனுங்க மூஞ்சியிலேயே காரித்துப்பனும் போல இருக்கு.இப்போது இவன் பெயர் தத்துவ போதானந்தாவாம்,ஆனா உண்மையான பெயர் விக்ரம் திராவிட்.மும்பையை சார்ந்த இவன் வசிப்பது அமெரிக்காவில்.மருத்துவரான இவன் நித்தியின் சீடனாக மாறி தற்போது அமெரிக்க
ாவில் ஆசிரமம் வைத்திருக்கிறான்.

இப்போது ஒரு பெண் இவன் மீது பாலியல் புகார் கொடுத்திருக்கிறார்.மும்பையை சார்ந்த ஒரு நீதிபதியின் மகளான இவரைப்பார்த்து அவன் சொன்னானாம், நான் சிவன், நீ பார்வதி என்று.உடனே இந்த அம்மணி மயங்கி அவனிடம் இவளை இழந்து விட்டாளாம்.

விதவிதமா புதுசுபுதுசா கிளம்பும் இதுபோன்ற கதைகளை கேட்டால் இன்றைய இளைஞர் சமுதாயத்தின் மீதே அவநம்பிக்கை எழுகிறது. நான் சிவன், நீ பார்வதி என்றான்,என்னை இழந்தேன். நான் விஷ்ணு, நீ லஷ்மி என்றான்,என்னை இழந்தேன். நான் கண்ணன், நீ ராதை என்றான்,என்னை இழந்தேன்.பக்தியின் பெயரால் அறிவை இழக்கும் இவர்களை என்னவென்று சொல்வது?

சாமியார்கள் மீது இப்படிப்பட்ட மோசடிக்குற்றம் சாட்டுபவர்கள் முழுக்க,முழுக்க மெத்தப்படித்து, நுனி நாக்கில் ஆங்கிலம் சரளமாக படித்தவர்களே.படிக்காத கிராமத்துப்பெண்களுக்கு இருக்கும் விழிப்புணர்வு கூட இவர்களுக்கு இல்லையே,இவர்கள் கற்றகல்வியால் என்ன பயன்?இவர்கள் கற்ற கல்வி இவர்களுக்கு சிந்திக்கும் திறனை வழங்கவில்லையே,விஷயங்களை ஆராய்ந்து உண்மையை கண்டறியும் பகுத்தறிவினை வழங்கவில்லையே எனும்போது வேதனைதான் எழுகிறது.

மரிக்கும் கிணறுகள்


ஈமு - அடுத்தவர் மீது பழி

ஏன்? எதற்கு? என்று கேள்வி கேளு,எதையும் ஆராய்ந்து பாருன்னு பெரியவங்க பல பேர் சொல்லியிருக்காங்க,அதையெல்லாம் கேட்டு அதன்படி நடக்கிறாங்களா?

மூட நம்பிக்கைகளை விட்டொழி,கடவுளின் பெயரால் உன்னை ஏமாற்றுபவனை நம்பி வீணாகாதே என்று சொன்னவர்கள் பேச்சைக்க
ேட்டு நடந்திருக்கிறார்களா?

சரி அதை விடுங்க,இந்த ஈமுகோழி குறித்து பத்திரிக்கைகளில் சந்தேகம் எழுப்பப்பட்டு கட்டுரைகள் வெளிவந்த போது எச்சரிக்கையானார்களா?

ஆனால் இப்போ ஈமு கோழி வளர்ப்பில் முதலீடு செய்து ஏமாந்து போன பிறகு,அந்த ஈமுகோழி வளர்ப்பு குறித்து தொலைக்காட்சி விளம்பரங்களில் பணத்திற்காக நடித்து விட்டுப்போன நடிகர்கள் வீட்டை முற்றுகையிடுவோம் என்று சொல்வது என்ன நியாயங்க?

பேச்சுரிமை

எத்தனையோ பிரச்சினைகள் இருந்தும்,எத்தனையோ பற்றாக்குறை இருந்தும்,சாதி,மத,இன வேறுபாடுகள் இருந்தும் நாம் மற்ற உலக நாடுகளில் இருந்து தனித்து தெரிவதற்கு காரணம், நமக்கு கிடைத்திருக்கும் பேச்சு சுதந்திரம்.இந்த பேச்சுரிமைதான் வல்லரசின் குடிமக்கள் என
ப்படும் சீனர்களுக்கு கூட நம் மீது பொறாமை ஏற்படுத்தும் ஒரே விஷயமாகும்.

இந்த பேச்சுரிமை பறிக்கப்பட்டபோதுதான் இரண்டாவது சுதந்திர போராட்டம் என அழைக்கப்பட்ட எமர்ஜென்ஸி யுத்தம் நடந்தது.

ஒரு குடும்பத்தின் மீது,தனிப்பட்ட ஒரு தலைவன் மீது நாம் வைக்கும் கண்மூடித்தனமான விசுவாசங்கள்,தனிமனித துதிபாடல்களாக உருவெடுக்கும்போது,அந்த தலைவன் புகழ்ச்சியால் மதி மயங்குகிறான்,சர்வாதிகாரியாக உருமாறுகிறான்,இதற்கு சமீபகால உதாரணம்,பேச்சுரிமைக்கு எதிரான மம்தாபானர்ஜியின் நடவடிக்கைகள்.

பேச்சுரிமை என்ற ஒன்று மட்டுமே உலக நாடுகளில் நம்மை தனித்து அடையாளம் காட்டுகிறது.அதையும் இழந்துவிட்டால் நம்மை பெருமைபடுத்தி சொல்ல எதுவும் இல்லை எனலாம்.எனவே தனிமனித துதிபாடல்களை தவிர்ப்போம்.சுயமரியாதையுடன் வாழத்தலைபடுவோம்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

இட்டார் பெரியோர்

வாய் புளித்ததோ,மாங்காய் புளித்ததோ என ஆராயாமல் தந்தை பெரியாரை இகழ்வோரே!பெரியார் குறித்து ஒரு நண்பர் முகநூலில் எழுதியிருக்கும் கருத்தைப்பாருங்கள்.

சு. ஜெயக்குமார்
எனது தாத்தா (தந்தையின் தந்தை) எனது தந்தையின் சிறு வயதிலேயே இறந்துவிட...

ஆதரவற
்றிருந்த ... பொறுப்புகள் நிறைந்த எனது தந்தையை (மூன்று சகோதரிகள் & ஒரு இளைய சகோதரர்)...

எங்களூரிலிருந்த எம்.எல்.சி. ஒருவர் (திரு.தங்கவேலு) பெரியார் அவர்களது ஆசிரி
யர் பயிற்சி பள்ளியில் படிக்கவைத்திருக்கிறார்...

பெரியார் அப்பொழுது உயிருடனிருந்தார்...

இதிலென்ன விசேஷம்...? பெரியார் எதிர்த்த குலத்தில் பிறந்தாலும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்...

தற்பொழுது 72 வயதான எனது தந்தை ஒரு ஓய்வு பெற்ற ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்...

எனவே கடவுள் நம்பிக்கையுடையவனாக நான் இருந்தாலும் பெரியாருக்கு நன்றிக்கடன் பட்டவன் (எங்கள் குடும்பமே).


இதனால்தானய்யா அவர் பெரியார் என அழைக்கப்படுகிறார்.

பெண் தானம் எனும் இழிவு

திருமணத்தின்போது பெண்ணை தாரைவார்த்துக்கொடுங்கோ என்று ஒரு சம்பிரதாயம் இருக்கிறதே,அப்படி என்றால் என்ன?பெண்ணை தானமாக கொடுப்பதுதானே?ஒரு பொருளை இலவசமாக கொடுப்பது போலத்தானே இதன் அர்த்தமாகிறது?ஆணையும் தாரைவார்த்துக் கொடுக்கும் சடங்கு இருக்கிறதா?

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு ஏன் என்ற காலம் மாறி,ஆணுக்கு பெண் சரிநிகர் சமானம்,பெண்களுக்கு சொத்துரிமை சமமாக உண்டு,எல்லாத்துறைகளிலும் பெண்கள் என்று உயர்ந்து நிற்கிற இந்தக்காலத்தில் இன்னமும் பெண்களை இழிவுபடுத்தும் இதுபோன்ற சடங்குகள் தேவையா?இந்த சடங்குகளை பெண்ணினம் விரும்பித்தான் ஏற்கிறதா?

Sunday 12 August 2012

புடவை கட்டிக்கொண்டு ஒலிம்பிக்க்கில்........

போல்பாட் எனும் கொடியவனிடம் சிலகாலம் கம்போடியா சிக்கித்தவித்தது போல,அல்-கொய்தா,தலிபான் எனும்  புரோகிராம் செய்யப்பட்ட மனித இயந்திரங்களிடம் ஆப்கானிஸ்தான் அகப்பட்டு அழிந்தது போல,இந்த இந்தியாவும், மங்களூரில் பிறந்த நாள் பார்ட்டியில் அத்துமீறி புகுந்து பிரச்சினை செய்த மதக்காவலர்கள்,ஜீன்ஸ் அணிந்தால் ஆசிட் ஊற்றுவோம் என்று கூறும் பழமைவாதிகள் போன்றோரிடம் அடிமையாக இருக்கக்கூடிய ஒரு தருணம் வருமேயானால்,ஒலிம்பிக் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் நீச்சல், நீளம் தாண்டுதல்,உயரம் தாண்டுதல்,போல் வால்ட் போன்றவற்றில் பெண்கள் புடவை கட்டிக்கொண்டுதான் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்டளை இடுவார்களோ?

Saturday 11 August 2012

ஒலிம்பிக் கனவு,வெறுங்கையால் முழம்

வல்லரசு,வலுவான நாடு என்றால் எல்லாத்துறைகளிலும் முத்திரை பதிக்க வேண்டும்.அப்போதுதான் அது வல்லரசு.இது விளையாட்டுத்துறைக்கும் பொருந்தும்.

ஒருமுறை இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்தபோது இந்தியவீரர்களின் உடல்வலிமையை தென்னாப்பிரிக்காவினர்
இரகசியமாக கணித்திருக்கின்றனர்.அதில் முதலிடம் பிடித்தவர் ராபின்சிங் என்ற தமிழக வீரர்.இதில் வேடிக்கையான விஷயம்,தென்னாப்பிரிக்காவின் கடைசி வீரரின் உடல் வலிமையைவிட ராபின்சிங் கீழே இருந்தாராம்.அப்படிப்பட்ட ராபின்சிங்கிற்கு சரியான வாய்ப்பு அளிக்கப்பட்டதா என்றால் இல்லை.இத்தனைக்கும் அவர் பல இக்கட்டான தருணங்களில் இந்திய அணியை காப்பாற்றியிருக்கிறார்.

இது அனைத்து விளையாட்டுக்கும் பொருந்தும்.மொழி,இனம்,அழகு,வளைந்து கொடுத்தல்,செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையிலேயே வீரர்கள் பல்வேறு விளையாட்டு அணிகளுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவது இங்கே சர்வசாதாரணமான ஒன்று. நிலைமை இப்படியிருக்கையில் ஒலிம்பிக்கில் நாம் தங்கப்பதக்கத்தை எதிர்பார்த்து நிற்பது வீணான எதிர்பார்ப்பு.

திறமைக்கு முக்கியத்துவம் அளித்து வீரர்களை தேர்ந்தெடுப்பதால்தான் அமெரிக்கா,சீனா,ரஷ்யா மட்டுமல்லாமல் சிறு நாடுகளும் பதக்கங்களை அள்ளிக்குவிக்கிறார்கள்.

நாம் என்ன செய்வோம்? ஒலிம்பிக் தோல்வியின் ஏமாற்றத்தால் விளையாட்டை ஊக்குவிக்கவேண்டும் என நாடாளுமன்றத்தில் நமது எம்பிக்கள் குரல் எழுப்புவார்கள்,பத்திரிக்கைகள் தலையங்கள் எழுதும்.மெல்ல மறந்து போவோம். நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒலிம்பிக் வரும், நாமும் மிகுந்த எதிர்பார்ப்போடு தொலைக்காட்சி முன் அமருவோம்,பத்திரிக்கைகளை புரட்டுவோம்.இது வாடிக்கையாக நடந்து கொண்டிருக்கும்.

Friday 10 August 2012

தாய்ப்பால்



ஓரிரு தினங்களுக்கு முன்பு பெண்ணுரிமை பற்றி விவாதம் நடந்தபோது தாய்ப்பால் கொடுக்க மறுக்கும் பெண்கள் குறித்து நண்பர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்,வருத்தமான விஷயம் அது.6 மாதங்களுக்கும் மேல் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பகபுற்று நோய் அபாயம் மிகவும் குறைவு என்பது எல்லோரும் அறிந்த ஒன்று,ஒரு புது செய்தி.அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகம் 56000 தாய்மார்களிடம் ஆய்வு ஒன்றை ந்டத்தியது,6 மாதங
்களுக்கும் அதிகமாக தாய்ப்பால் கொடுத்த பெண்களுக்கு எதிர்காலத்தில் இரத்த அழுத்த பிரச்சினைகள் மிகவும் குறைவாகவே வருகிறதாம்,அது மட்டுமல்ல அதிகம் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் உடற்பருமன் பிரச்சினையில் சிக்குவதில்லை,காது,தொண்டை,
ஆஸ்துமா போன்ற நோய்களும் எளிதில் அண்டுவதில்லை,நோயெதிர்ப்பு சக்தியும் அதிகம் உண்டாகிறது,முக்கியமாக தாய்க்கும் சேய்க்கும் உள்ள பாசப்பிணைப்பு அதிகமாகிறது.ஆக தாய்க்கும் சேய்க்கும் வாழ்நாள் முழுமைக்கும் நலம் பல தரும் விஷயங்கள் தாய்ப்பாலில் இருக்க செயற்கை உணவுகளை குழந்தைகளுக்கு ஊட்டி தாய்ப்பால் மறுப்பது முறையாகுமா?தாய்ப்பாலை சேய்களுக்கு மறுத்திடும் நிலை அதிகரிக்குமானால் மழலைகள் விலங்குகளின் குட்டிகளை ஏக்கத்துடன் பார்த்து ஏங்கிடும் நிலை உருவாகிவிடும்.எந்த ஒரு செயற்கை உணவும் தாய்ப்பாலுக்கு இணையாகாது.தாய்ப்பால் மறுத்தல் என்பது நம் நாட்டை பொறுத்த வரையில் எங்கோ ஒன்றாகத்தான் இருக்கும் என நம்புவோம்,அத்தகு எதிர்மறையான எண்ணம் எல்லா பெண்களிடத்தும் சென்று அடையும் முன் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

மூளைச்சலவை


அல்-கொய்தாவின் துப்பாக்கி தூக்கும் இளைஞன் ஆகட்டும்,கல்கி, நித்தி புகழ்பாடும் சீடர்களாகட்டும் அவர்கள் அனைவரும் பரிதாபத்துக்குரிய ஜீவன்களே,அய்யா! கல்கியிடம்/ நித்தியிடம் சிக்கியிருக்கும் என் மகன்/மகளை மீட்டுத்தாங்கய்யா என்று அவ்வப்போது பெற்றோர்கள் கண்ணீர் விடுவதை அறிந்திருப்போம்.ஒரு தரப்பு சிறுவயதிலேயே பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்டு தீவிரவாதத்தில் இறக்கி விடப்படுகிறது,இன்
னொரு தரப்பு,B.E,M.B.A,M.C.A என்று படித்து நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் பருவத்தில் மயக்கி சிலரின் புராணங்கள் பாட பயிற்றுவிக்கப்படுகிறது.ஆன்
மிகத்தின் பெயரால் ஒரு சிலரின் புகழ்பாடும் கருவிகளாக செயல்படும் இவர்களால் சமூகத்திற்கு விளையும் நன்மை யாது?எய்தவன் சுகபோகங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும்
போது கருவிகள் இவர்களை நொந்து கொள்வதில் பயனில்லை.என்னைப் பொறுத்தவரையில் இவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்ட அப்பாவிகள் மட்டுமல்ல,ஒரு குறிப்பிட்ட விஷயத்தை புரோகிராம் செய்யப்பட்ட மனித இயந்திரங்கள் அவ்வளவே.

கலப்புத்திருமணம்


முதலாளி வணக்கமுங்க,உங்களை மாதிரி பெரிய புத்திசாலி கிடையாது நான்,இருந்தாலும் என் மனசுல ஒண்ணு தோணுது,அதை சொல்லிடறேன்,சொல்லலனா என் தலை வெடிச்சுபுடும்,இந்த சாத்திரம்,சாதி,குலம்,கோத்த
ிரத்தை ஆராயுறதுக்கு பதிலா 6 மாசத்துக்கு ஒரு முறை உங்க மூத்திரத்தை ஆராய்ந்தீங்கன்னா,சிறுநீரகக
்கோளாறுகள், நீரிழிவு நோய்,கல்லீரல் நோய்கள்,புரோஸ்டேட் பிரச்சினை,எலும்புகளில் பிரச்சினை என்று இன்னும் பல பிரச்சினைகளை கண்டுபிடிக்கலாமாம்,அதனால இந்த சாதி,குலம்,கோத்திரத்தை பேசி வீணா டென்ஷனாகாம குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்க மூத்திரத்தை ஆராய்ந்து ஆரோக்கியமா வாழற வழியை பாருங்க முதலாளி.ஆத்திரப்படாதீங்க முதலாளி, நான் லேபுக்கு போறேன்.

ரிஷிமூலம் அத்தனையும் மயிர்தான்

ு வெளியேறி என் கணவரிடம் சொல்லி அழுதபோது ஒரு குழந்தையாக என்னை பாவித்துக்கொண்டார்.என் மீதும்,என் கணவர் மீதும் நித்தி அமெரிக்காவில் போட்ட வழக்குகளால் நொந்து போ
ன்.இது நித்தியால் பாதிக்கப்பட்ட ஆர்த்திராவின் புலம்பல். நல்ல கணவனின் அறிவுரைகளை மீறிச்சென்று குட்டிச்சுவராகி வாழ்க்கையை தொலைத்து இப்போது புலம்பி என்ன பயன்?சலூன்கடை குப்பையை கிள்றினால் அத்தனையும் மயிராக இருப்பது போல் சாமியார்களின் அந்தரங்கங்களை தோண்டினால் ஆபாசமாகத்தான் இருக்கும் போல,அதனால்தான் எச்சரிக்கையாக ரிஷி மூலம் பார்க்காதே என்று சொல்லி வைத்தார்கள் போல.

மிலேச்சனின் அடிமைகள்

மாட்டிறைச்சி சாப்பிடுபவன் மிலேச்சன்,பஞ்சமன்,இழிகுலத்
தவன்,தீண்டத்தகாதவன் என்றால் மாட்டிறைச்சியையே பிராதான உணவாகக்கொண்ட அமெரிக்கன்,ஐரோப்பியன் எல்லோரும் மிலேச்சர்கள்தானே!தீண்டத்தக
ாதவர்கள்தானே?அப்படிப்பட்ட தீண்டத்தகாதவர்கள் வாழும் நாடுகளிலே,ஒபாமா,புடின்,கார்டன் பிரவுன் போன்ற மிலேச்சர்கள் ஆட்சி செய்யும் நாடுகளிலே ஏதாவது ஒரு வேலை கிடைத்து செட்டிலாகி விட மாட்டோமா என்ற பரிதவிப்புடன் அவர்கள் நாட்டு தூதரக வாசலிலே வரிசையில் நின்று தவம் கிடக்கிறார்களே,இங்கே வர்ணாசிரமத்தை உருவாக்கியவர்களின் வாரிசுகள்,இது என்ன முரண்பாடு?மிலேச்சர்களிடம் வேலை செய்யப்போகிறோம் என்ற எண்ணம் இங்கு மட்டும் ஏன் அவர்கள் மனதில் உருவாகவில்லை?

யாருக்காக?

சொர்க்கம், நரகம் உண்டென்பது உண்மையா?இதை எவரேனும் நேரில் கண்டு வந்து சொல்லியிருக்கிறார்களா? உன்னுடைய முன்னோரும்,என்னுடைய முன்னோரும் சாகும்வரையில் நல்லி எலும்பையும்,முட்டி எலும்பையும் கடித்து நொறுக்கி ரசித்து ருசித்து சாறு குடித்ததை நானும் நீ
யுமல்லவா அறிவோம்.அப்படிப்பட்ட முன்னோர் இறந்த பிறகு சுத்த சைவம் ஆகிவிட்டார் என்று கதை கட்டி விட்டது யார்?எவருடைய வயிற்றுப்பிழைப்புக்காக,வருமானத்துக்காக திதி என்ற பெயரில் காய்கறிகளையும்,பலவகை பழங்களையும்,இனிப்புகளையும்,தானியங்களையும் புரோகிதனுக்கு தானமாக கொடுக்கும் வழக்கம் நம்மிடையே திணிக்கப்பட்டது?யாருக்காக? இது யாருக்காக?

ஏன்? எதற்கு?

ஆறறிவு படைத்த மனிதன் என்கிறோமே!அதை முழுமையாக பயன்படுத்துகிறோமா?எவரோ எப்போதோ எழுதி வைத்த பழம் பஞ்சாங்கத்தை கட்டி வைத்து அழுகிறோமே, அறிவியலின் சுகங்களை அனுபவித்துக்கொண்டு பல விஷயங்களில் அறிவீலியாக இருக்கிறோமே,ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கத்து
ணிவதில்லையே ஏன்?ஆடி மாசத்திலே கல்யாணம் செய்யாதே என்று நமக்கு விதிகளை உருவாக்கி கொடுத்தவன், அவன் வீட்டுத்திருமணத்தை மட்டும் ஆடி மாதத்தில் நடத்துகிறானே!ஏன் என்று சிந்தித்தோமா? ஏன் இன்னும் மூளை மழுங்கிய மனிதர்களாய் ஆடி மாதம் என்றாலே அலறி ஓடுகிறோம்?

வாழ்ந்தவர் கோடி,மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?

வாழ்ந்தவர் கோடி,மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?ஒருவர் எத்தனை பெரிய அறிஞராக இருந்தாலும் அவருக்கு சமூகத்தின்பால் இருந்த அக்கறைதான் மக்கள் மனதில் அவரை வாழச்செய்கிறது.காங்கிரஸ் இயக்கத்தின் மிகப்பெரும் தூண்களாக விளங்கியவர்கள் யாரென
்றால் அனைவரும் சத்தியமூர்த்தி,ராஜாஜி,காமராசர் என்று கூறுவோம்,ஆனால் இவர்களில் இன்றைக்கும் மக்களால் நேசிக்கப்படுபவர் யார் என்றால் அது காமராசர் மட்டுமே.
சத்தியமூர்த்தி பேச்சாற்றலால் வெள்ளையரையே கதிகலங்கச்செய்தவர் என்றாலும் தேவதாசிமுறை வேண்டும் என்று அவர் சட்டசபையில் பேசியதே மக்கள் மனதில் இன்றும் நிழலாடுகிறது.
மூதறிஞர் ராஜாஜி என்கிறோம்,ஆனால் வழக்கத்திலிருந்து ஒழிந்து கொண்டிருந்த குலத்தொழில் முறையை மீண்டும் நிலை நாட்ட அவர் கொண்டு வந்த குலக்கல்வித்திட்டம் இன்றும் மக்களிடம் வெறுப்புடன் பேசப்படுகிறது.
ஆனால் பள்ளிப்படிப்பையே பாதியில் கைவிட்ட காமராசர் இன்றும் மக்களால் கர்மவீரர் என்று பாசத்துடன் போற்றப்படுகிறாரே ஏன்? ஏனென்றால் அவருக்கு சமுதாயத்தின் மீதிருந்த அக்கறை.அவருடைய காலத்தில்தான் வைகைஅணை,மணிமுத்தாறு,சாத்தனூர்,அமராவதி,கிருஷ்ண்கிரி,ஆரணியாறு போன்ற பெரிய மற்றும் சிறிய அணைத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலை, நெய்வேலி நிலக்கரி சுரங்கம்,திருச்சி பெல் கம்பெனி,மணலி சுத்திகரிப்பு நிலையம்,ஊட்டி பிலிம் தொழிற்சாலை,கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் போன்றவை ஆரம்பிக்கப்பட்டன.
இன்னொரு முக்கியமான சாதனை.குழந்தைகளுக்கு மதிய உணவு,சீருடை போன்றவை,இது ஏழைக்குழந்தைகளை பள்ளியை நோக்கி வரச்செய்யவேண்டும் என்ற நோக்கில் துவங்கப்பட்டது.
இன்னுமொரு ஆச்சர்யமான விஷயம் இன்று தமிழகத்தில் இருக்கும் 50,000 அரசு பள்ளிகளில் 27,000 பள்ளிகள் காமராசரின் ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்டவை.இத்தகு காரணங்களால்தான் கற்ற கல்வியால் சான்றோர் என அழைக்கப்பட்டவர்கள் எல்லாம் மக்கள் மனங்களில் இடம்பெற முடியாதபோது பள்ளிப்படிப்பையே பாதியில் நிறுத்திய காமராசர் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராசர் என மக்களால் பாசத்துடன் அழைக்கப்படுகிறாரோ.

மூத்த தமிழ்க்குடி இன்று டாஸ்மாக் குடி?


கல்வித்தந்தைகளா இவர்கள்?இல்லை எமன்கள்.


கூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை

அய்யய்யோ அரைகுறை ஆடைகளில் பெண்களா?அய்யகோ கலாச்சாரம் கெட்டு விட்டதே என்று புலம்புவர்களைப் பார்த்து கேட்கிறேன்,மங்களூரில் பிறந்த நாள் பார்ட்டியில் நுழைந்து தாக்கியவர்களைப் பார்த்து கேட்கிறேன்.கலாச்சாரத்தின் காவலர்களே! உங்களில் எத்தனை பேர் கிர
ிக்கெட்டில் புகுத்தப்பட்ட சியர்ஸ் கேர்ள்ஸ் கலாச்சாரத்துக்காக கிரிக்கெட்டை புறக்கணித்திருக்கிறீர்கள்?சியர்ஸ் கேர்ள்ஸ் கலாச்சாரம் இருக்கும் வரை கிரிக்கெட்டை டிவியில் கூட பார்க்க மாட்டோம் என சபதம் செய்திருக்கிறீர்கள்?

வீட்ல புலி,வெளியில் எலி

சங்பரிவார் எனப்படும் ஆர்.எஸ்.எஸ், விஹெச்பி போன்ற அமைப்புகளுக்கு அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகளில் கிளைகள் இருக்கிறதே!எதற்காக? நன்கொடைகள் வசூல் செய்து அனுப்ப மட்டுமா? அல்லது இந்து கலாச்சாரத்தை கட்டிக்காக்கவுமா? இங்கே மங்களூரில் பிறந்த நாள் பார்ட்
டியில் அத்து மீறி நுழைந்து அடித்து உதைத்து தாக்கியது போன்று,அந்த மேலை நாடுகளில் இந்திய இளைஞர்களும்,இளம்பெண்களும் கொண்டாடும் பிறந்த நாள் பார்ட்டிகளில் புகுந்து உங்கள் வல்லமையை காட்டும் துணிச்சல் உண்டா? அங்கே உங்கள் வீரத்தை காட்டினால் டப்பா டான்ஸ் ஆடிடும் என்ற பயம்தானே?

காங்கிரஸ் வேதாளம்


எங்க ஏரியாவில் இதன் பெயர் நாக்கு மீன்,உங்க பகுதியில் என்னவென்று தெரியாது. ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை இந்த மீனை சாப்பிட்டதே கிடையாது,மீன்மார்க்கெட்டில் இந்த மீனை அருவறுப்போடு பார்த்து செல்வேன்,ஆனா சில வருடங்களுக்கு முன்பு குமுதம் புத்தகத
்தில் நடிகர் விக்ரம் ஒரு பேட்டியில், நாக்கு மீன் வறுவல் என்றால் இரண்டு பிடி சோறு அதிகமா உள்ளே இறங்கும் என்று சொல்லியிருந்தார்.அதை படித்தபிறகு ஒரு ஆர்வம் வந்து வாங்கி வறுத்து சாப்பிட்டா ஸ்......ஆ ஹா சூப்பர்.இப்போதெல்லாம் விடுவதில்லை,ஒரு கட்டு கட்டிடறேன்,இன்னைக்கும் நாக்குமீன் வறுவல் எனக்கு மட்டும்,மத்தவங்களுக்கு வேறு மீன்.

வேண்டும் ஒரு ஞாபகமறதி


அத்வானி....திராட்சைத்தோட்டத்து நரியா?


ஆத்மா


பத்திரிக்கை தர்மம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் கல்லூரியில் கட்டுமானம் சரிந்து விழுந்ததில் 9 கூலித்தொழிலாளிகள் மரணம் - இது இன்றைய தினமணி செய்தி.

அது என்ன தனியார் கல்லூரி? நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாமை என்று பறைசாற்றிக்கொண்டு இப்படி மறைமுகமாக செய்தி வெளியீடு?துணிச்சலா கல்லூரி பெயரை சொல்ல வேண்டியதுதானே?
ஜேப்பியார் கல்லூரியில் கட்டுமானம் சரிந்து 9 கூலித்தொழிலாளர் சாவு என்று தினமலர் செய்தி போட்டிருக்குன்னு சொல்றீங்களா? அங்கேயும் ஒரு சூட்சுமம் இருக்கு,சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரி என்பதால் அவன் பேரை போட்டுட்டான்,இதே கற்பக விநாயகர் கல்லூரின்னு மட்டும் பேர் இருந்திருந்தால் தினமலரும் தனியார்கல்லூரியில் விபத்துன்னுதான் போட்டிருப்பான்,எல்லாவற்றிலும் ஒரு சூட்சுமம் ஒளிந்து கொண்டுதான் இருக்கு

எங்க சாதி,பெரிய்ய்ய்ய்ய்ய சாதி

எங்களுடையது தமிழகத்தின் மிகப்பெரும் சாதி,அதனால் உயர்நீதிமன்ற நீதிபதி,தலைமைசெயலர் பதவி,உள்துறை செயலர், நிதித்துறை செயலர் ஆகிய பதவிகளுக்கு எங்கள் சாதியை சார்ந்தவரை நியமிக்கவேண்டும் என்று சாதித்தலைவர்கள் கூறுகிறார்களே! மலம் அள்ளும் தொழில்,குப்பைவாரும் தொழில்,கக்கூஸ் கழுவும் தொழில் ஆகியவற்றை மட்டும் ஒரே சாதி ஆயிரக்கணக்கான வருஷமா செய்து வருகிறதே,அதிலும் பங்கு கேட்கலாம் இல்லையா? 

ரேபிஸ்


மதவெறி

ஆப்ரிக்க நாடான மாலியில் இஸ்லாமிய மதப்பழமைவாதிகளின் அடாவடிசெயல்கள்,மதத்தின் பெயரால் நடைபெறும் மனித நேயமற்ற மிருகத்தனமான தண்டனைகளால் வெறுத்துப்போயிருக்கும் அந்நாட்டு இளைஞர்கள்,இத்தகைய பழைமைவாதிகளுக்கு எதிராக ஒன்று கூடத்துவங்கி இருக்கிறார்களாம
்,மற்றொரு இஸ்லாமிய நாடான ஈரானில் பெண்கள் அவர்கள் உரிமைக்கான மாநாடு ஒன்றை நடத்தியிருக்கிறார்கள்,அரசு அலுவலகங்களில் பெண்கள் பலரும் பணியில் இடம்பெறத்துவங்கியுள்ளனர்.இத்தகைய செய்திகளை படிக்கும் போது உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.இந்தியாவில் தேவதாசிமுறை,உடன்கட்டை ஏறுதல்,பால்யவிவாகம் போன்றவற்றுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்பட்டு அவை பெருமளவு ஒழிந்து போனதுபோல் உலகம் முழுவதும் மதத்தின் பெயரால் நடைபெறும் மூட நம்பிக்கைகள் துடைத்தெறியப்பட வேண்டும்.பெண்கள் சுயமரியாதையோடு வாழத்தலைப்பட வேண்டும்.மனிதன் மதத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட வேண்டும்.

புராண புருடா


மதவெறி சாஃப்ட்வேர்

சில நாட்களுக்கு முன் முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்ஸன் காணாமல் போய் திரும்ப கிடைத்தது குறித்து சில நாட்களுக்கு முன்னால் ஒரு பதிவு போட்டிருந்தேன்.அந்த பதிவில் ஒருவர் என்னை நோக்கி பதிந்த கருத்து இது.

Murugadas Kanyakumari · 81 mutual frie
nds
who is this Rajesh Deena Dog

பாவம் இவர்கள்,சங்க்பரிவார் எனும் கம்பெனியால் மதவெறி எனும் சாஃப்ட்வேர் புகுத்தி புரோகிராம் செய்யப்பட்ட மனித இயந்திரங்கள்.இவர்களிடம் கருத்துக்கு பதில் கருத்தையோ அதில் நாகரிகத்தையோ எப்படி எதிர்பார்க்க முடியும்? இவர்களின் நாக்கு இவர்களின் தரத்தை வெளியுலகுக்கு பறைசாற்றுகிறது, நமக்கு வேலை மிச்சம்.

முரண்பாடு

நால்வகை வர்ணங்களை வலியுறுத்தியவன்,பெண்களுக்கு தீராத தொல்லையாக விளங்கியவன்,சூழ்ச்சிக்காரன்,இத்தனைக்கும் ஒரு கற்பனைக்கதாபாத்திரம் அவனுக்கு ஒரு கொண்டாட்டம்,அதற்கு அரசு விடுமுறை.

இம்மண்ணிலே புரட்சி செய்தவர்,பெண்ணுரிமை பேசியவர்,மனித நேயத்தின் ம
ுகவரி,தலித்துக்களை அழைத்துக்கொண்டு ஆலயப்பிரவேசம் சென்றவர்,மூட நம்பிக்கைகளை தகர்த்து எறிந்தவர்,இன்றைக்கும் சமூக நீதிப்போராளிகளின் ஆயுதமாக இருக்கக்கூடிய அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் பிறந்த நாள்,நினைவு நாள் பொன்றவை அரசாங்கத்தால் போற்றப்படுகிறதா? இதன் பெயர்தான் முரண்பாடு என்பதோ?

கலிலியோ

காலம்காலமாக உலகம் உண்மை என்று நம்பி வந்த பல விஷயங்களை தவறு என்று அறிவியல்பூர்வமாக நிரூபித்து உண்மையை உலகுக்கு சொன்னவர் கலிலியோ கலிலி.

1564-ல் இத்தாலியில் பிறந்தவர்.முதல் டெலஸ்கோப்புக்கு சொந்தக்காரர்.இலேசான பொருட்களை விட கனமான பொருட்கள் வேக
மாக கீழே விழும் என்ற அரிஸ்டாட்டிலின் கூற்று தவறு என நிரூபித்தவர்.இதற்கான சோதனையை பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தின் மீதிருந்து செய்தார் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை.

கீழே விழும் பொருள்களின் வேகவளர்ச்சி விகிதம் குறித்து இவர் உருவாக்கிய சூத்திரங்கள் இன்றைக்கும் நவீன அறிவியலில் முக்கிய அம்சமாக விளங்குகின்றன.இவர் கண்டுபிடித்த சடத்துவ விதி(law of inertia) இயற்பியலில் இன்றியமையாத விதிகளில் ஒன்றாக விளங்குகிறது.

சந்திரனின் மேற்பரப்பு சமதளமாக இல்லாமல்,பள்ளங்களாலும்,மலைகளாலும் நிறைந்திருக்கிறது என்று உலகுக்கு சொன்னவர் இவர்.சூரியனையும்,பால்வீதியையும் ஆராய்ந்து பல உண்மைகளை வெளிப்படுத்தினார்.

கோப்பர் நிக்கஸின் கோட்பாட்டினை மறுக்க முடியாத ஆதாரங்களுடன் விளக்கும் “ தலையாய இரு உலக மண்டலங்கள் பற்றிய உரையாடல்” எனும் நூல் கத்தோலிக்க சபையின் கோபத்திற்கு உள்ளாக்கியது.

கத்தோலிக்க சபையின் கோபத்திலிருந்து தப்பிக்க,உயிருக்கு பயந்து பூமிதான் சூரியனை சுற்றிவருகிறது என்ற இவரது கூற்றினை மனம் வெதும்பி திரும்ப பெற்றார்.

இருப்பினும் இவருக்கு கத்தோலிக்க சபை தண்டனை விதித்தது, கி.பி.1642-ல் மரணமடையும் வரை வீட்டுச்சிறையில் மனம் வெதும்பி இருந்தபடியே உயிர் வாழ்ந்தார்.

உண்மைகளை எத்தனை காலத்துக்கு மறைத்து வைக்கமுடியும்? ஆயிரம் சங்கிலிகள் கொண்டு பூட்டி பாதாளத்தில் பூட்டி வைத்தாலும் உண்மை ஒரு நாள் வெளி வந்தே தீரும் அல்லவா?ஆம்,இவர் மறைந்த 1642 ம் ஆண்டு மாபெரும் விஞ்ஞானி நியூட்டன் பிறந்தார், நியூட்டன் விதிகள் பிறந்தன,உலகின் பல சிக்கலான கேள்விகளுக்கு விடைகிடைத்தன.பல அரிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன.தொழிற்புரட்சி ஏற்பட்டது.மனிதன் ஏன் எதற்கு என்று கேள்விகள் கேட்க ஆரம்பித்தான்,இனிமேலும் உண்மைகளை மறைக்க இயலுமா?

எந்த கத்தோலிக்க சபை கல்லியோவை வீட்டுச்சிறையில் வைத்ததோ,அந்த கத்தோலிக்க சபையில் தலைவராக இருந்த போப் ஜான்பால் 1992-ம் ஆண்டு கலிலியோவின் கூற்று உண்மை,அதை வாடிகன் ஏற்பதாக அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்தார்.

நேற்று நிலவில் மனிதன் கால் வைத்தான்,இன்று கியூரியாசிட்டி ரோவர் செவ்வாயில் இறங்கிவிட்டது.ஆனாலும் இன்றும் படித்தும் பலர் சாத்திரங்களையும்,மூட நம்பிக்கைகளையும் கட்டிக்கொண்டு அழுவது வேடிக்கையானது.

பாகிஸ்தான்,இந்துஸ்தான் இரண்டும் ஒன்றே

Monday 6 August 2012

பயண வழி எமன்கள்

குடித்துவிட்டு பேருந்தை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநருக்கு பொதுமக்கள் தர்ம அடி,போலிஸ் வந்து மீட்டது.- இது செய்தி.

இது போன்று போதையில் வண்டியை ஓட்டி விபத்துக்குள்ளாக்கும் செய்திகள் அடிக்கடி வரக்காரணம் என்ன? 1.பயண வழி உணவகங்கள் 2.டாஸ்மாக்.

சில ப
யணவழி உணவகங்களை கடக்கும் போது குடலை புரட்டும் அளவுக்கு மூத்திரவாடை வீசும்.அத்தகையை ஓட்டல்களுக்குத்தான் இந்த பேருந்துகள் செல்லும்.அந்த ஓட்டல்களின் கழிப்பறைகள் படுகேவலமாக இருக்கும்,உணவு தயாரிக்கும் இடங்களும் சுகாதாரமற்று இருக்கும்.இந்த உணவகங்களால் நம் வயிற்றுக்கும் உத்தரவாதமில்லை,உயிருக்கும் உத்திரவாதமில்லை.

பின் ஏன் இந்த பேருந்துகள் இது போன்ற ஓட்டல்களுக்கு செல்கின்றன.காரணம் அந்த ஓட்டல்களில் ஓட்டுநர், நடத்துனருக்கு அளிக்கப்படும் தனி கவனிப்பு.சைவ ஓட்டல் என்று பெயர்,ஆனால் தனி அறையில் ஓட்டுநர், நடத்துனருக்கு மீன்,கறி என அசைவம் வழங்கப்படும்,பிற்கு ஒரு குவாட்டர் பாட்டில் வேறு சப்ளை செய்யப்படுகிறதாம்,அவர்கள் குடிப்பழக்கம் இல்லாதவரெனில் பிஸ்கெட்பாக்கெட்,பழங்கள் வழங்கப்படுமாம்.பல நூறு பயணிகளின் வாழ்க்கையோடு விளையாடும் இவர்கள் பயணவழி எமன்கள் என்றால் மிகையல்ல.

பேருந்துக்கட்டணம் வாங்கும் அரசாங்கத்துக்கு பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் பொறுப்பு இருக்கிறது.ஆங்காங்கே வழியில் வாகனத்தை நிறுத்தி பேருந்து பயணச்சீட்டினை பரிசோதிப்பது போல்,ஒவ்வொரு நகரத்துக்குள்ளும் பேருந்து நுழையும்போதும் தகுந்த உபகரணங்களின் உதவியோடு ஓட்டுநர் குடித்திருக்கிறாரா இல்லையா என்று சோதிக்கப்பட்டு பேருந்தினை இயக்க அனுமதிக்கும் நிலை வருமானால் குடியினால் நிகழும் விபத்துக்களை முற்றிலும் தடுத்துவிடலாம்.

சீ சீ இந்த பழம் புளிக்கும்

அடுத்த பொதுத்தேர்தலில் பாஜக,காங்கிரஸ் அல்லாதவர் பிரதமராக வாய்ப்பு - அத்வானி.
இது இன்றைய பத்திரிக்கை செய்தி.

உட்கட்சிப்பிரச்சினை,வயது முதிர்வு ,மோடியின் போட்டி ஆகிய காரணங்களால் பிரதமர் பதவி மீது அத்வானி வெறுத்துப்போய் சொன்னதுக்கும்,

திராட்
சைத்தோட்டத்தில் புகுந்த நரி எட்டி எட்டி பார்த்தும் திராட்சை கிடைக்காத ஏக்கத்தில் சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று வெறுத்து ஓடிப்போனதை விளக்கும் இந்த படக்கதைக்கும் சம்பந்தம் இல்லிங்கோ.என்னை யாரும் தப்பா நினைச்சுக்காதீங்கோ.

Saturday 4 August 2012

ஞாபகமறதி

காலையில் நடைபயிற்சி சென்ற ஆர்.எஸ்.எஸ் முன்னாள் தலைவர் காணாமல் போய் விட்டாராம்,6 மணி நேரம் கழித்து கர்நாடகா போலிஸ் கண்டு பிடித்தது என்று செய்திகள் கூறுகின்றன.காரணம் அவருக்கு இருக்கும் ஞாபகமறதி நோயாம், நல்லவேளை சீக்கிரம் கண்டுபிடிக்கப்பட்டார்
,இல்லன்னா என்னென்ன வதந்திகள் இறக்கை கட்டி பறந்திருக்குமோ?என்னென்ன விளைவுகள் சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்ந்திருக்குமோ?

எனக்கு ஒண்ணு தோணுச்சு, நாட்டில் இருக்கும் சங்கராச்சாரிகள்,சங்பரிவார் தலைவர்கள்,மடாதிபதிகள்,ஆதீனகர்த்தர்கள் எல்லோருக்கும் இந்து மதத்தில் இருக்கும் வர்ணாசிரம்,சாதிகட்டமைப்புகள்,ஏற்றத்தாழ்வுகள்,பெண்களுக்கு எதிரான நிலைப்பாடுகள்,தீண்டாமை,மூட நம்பிக்கை ஆகியவை திடீரென மறந்து போகிறமாதிரி ஒரு ஞாபகமறதி நோய் வந்ததுன்னா எவ்வளவு நல்லாயிருக்கும்?சமுதாயம் அமைதியாக இருக்கும் அல்லவா? நான் நினைச்சதுல ஏதேனும் தப்பு இருக்கா?

சூத்திர பிரம்மா

Friday 3 August 2012

மூத்த தமிழ்க்குடி இன்று டாஸ்மாக்கினால் அழியும் குடி?


கலாச்சாரக்காவலர்களே...........


பாசிச மங்களூர் மதவாதிகளே?




சங்பரிவார் எனப்படும் ஆர்.எஸ்.எஸ், விஹெச்பி போன்ற அமைப்புகளுக்கு அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகளில் கிளைகள் இருக்கிறதே!எதற்காக? நன்கொடைகள் வசூல் செய்து அனுப்ப மட்டுமா? அல்லது இந்து கலாச்சாரத்தை கட்டிக்காக்கவுமா? இங்கே மங்களூரில் பிறந்த நாள் பார்ட்
டியில் அத்து மீறி நுழைந்து அடித்து உதைத்து தாக்கியது போன்று,அந்த மேலை நாடுகளில் இந்திய இளைஞர்களும்,இளம்பெண்களும் கொண்டாடும் பிறந்த நாள் பார்ட்டிகளில் புகுந்து உங்கள் வல்லமையை காட்டும் துணிச்சல் உண்டா? அங்கே உங்கள் வீரத்தை காட்டினால் டப்பா டான்ஸ் ஆடிடும் என்ற பயம்தானே?