Wednesday 22 August 2012

இறையாண்மை

இவர்கள் ஏற்கனவே அவநம்பிக்கையில் இருக்கிறார்கள்,இந்தியா எனும் நாடு தங்கள் மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக நினைப்பு அவர்களுக்கு எப்போதோ நம் ஆட்சியாளர்களின் பாராமுகத்தால் ஏற்பட்டுவிட்டது.

மற்ற மாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்
லும் அவர்கள் இந்தியாவுக்கு வேலைக்கு போகிறேன் என்று சொல்வதற்கு காரணம் முழுக்க நம் மத்தியில் ஆண்ட,ஆள்பவர்களின் அலட்சியமே.

நிலைமை இவ்வாறு இருக்க அந்த மக்கள் மீது பல மாநிலங்களில் நடந்து வரும் தாக்குதல் அவர்களை தவறான பாதைக்கு திசை திருப்பக்கூடும்.காரணம் எல்லைப்புற மாநில மக்களாகிய அவர்கள் வெறுப்பின் காரணமாக வெளிநாட்டு சதிவலையில் விழக்கூடும்.

ஒரே நாடு! ஒரே மக்கள்! ஒரே சட்டம்! என்று கூறிக்கொண்டு இப்படி நாட்டில் பிரிவினையை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார்களே!

No comments:

Post a Comment