Thursday 16 August 2012

பெண் தானம் எனும் இழிவு

திருமணத்தின்போது பெண்ணை தாரைவார்த்துக்கொடுங்கோ என்று ஒரு சம்பிரதாயம் இருக்கிறதே,அப்படி என்றால் என்ன?பெண்ணை தானமாக கொடுப்பதுதானே?ஒரு பொருளை இலவசமாக கொடுப்பது போலத்தானே இதன் அர்த்தமாகிறது?ஆணையும் தாரைவார்த்துக் கொடுக்கும் சடங்கு இருக்கிறதா?

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு ஏன் என்ற காலம் மாறி,ஆணுக்கு பெண் சரிநிகர் சமானம்,பெண்களுக்கு சொத்துரிமை சமமாக உண்டு,எல்லாத்துறைகளிலும் பெண்கள் என்று உயர்ந்து நிற்கிற இந்தக்காலத்தில் இன்னமும் பெண்களை இழிவுபடுத்தும் இதுபோன்ற சடங்குகள் தேவையா?இந்த சடங்குகளை பெண்ணினம் விரும்பித்தான் ஏற்கிறதா?

No comments:

Post a Comment