Friday 10 August 2012

மூளைச்சலவை


அல்-கொய்தாவின் துப்பாக்கி தூக்கும் இளைஞன் ஆகட்டும்,கல்கி, நித்தி புகழ்பாடும் சீடர்களாகட்டும் அவர்கள் அனைவரும் பரிதாபத்துக்குரிய ஜீவன்களே,அய்யா! கல்கியிடம்/ நித்தியிடம் சிக்கியிருக்கும் என் மகன்/மகளை மீட்டுத்தாங்கய்யா என்று அவ்வப்போது பெற்றோர்கள் கண்ணீர் விடுவதை அறிந்திருப்போம்.ஒரு தரப்பு சிறுவயதிலேயே பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்டு தீவிரவாதத்தில் இறக்கி விடப்படுகிறது,இன்
னொரு தரப்பு,B.E,M.B.A,M.C.A என்று படித்து நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் பருவத்தில் மயக்கி சிலரின் புராணங்கள் பாட பயிற்றுவிக்கப்படுகிறது.ஆன்
மிகத்தின் பெயரால் ஒரு சிலரின் புகழ்பாடும் கருவிகளாக செயல்படும் இவர்களால் சமூகத்திற்கு விளையும் நன்மை யாது?எய்தவன் சுகபோகங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும்
போது கருவிகள் இவர்களை நொந்து கொள்வதில் பயனில்லை.என்னைப் பொறுத்தவரையில் இவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்ட அப்பாவிகள் மட்டுமல்ல,ஒரு குறிப்பிட்ட விஷயத்தை புரோகிராம் செய்யப்பட்ட மனித இயந்திரங்கள் அவ்வளவே.

No comments:

Post a Comment