Saturday 4 August 2012

ஞாபகமறதி

காலையில் நடைபயிற்சி சென்ற ஆர்.எஸ்.எஸ் முன்னாள் தலைவர் காணாமல் போய் விட்டாராம்,6 மணி நேரம் கழித்து கர்நாடகா போலிஸ் கண்டு பிடித்தது என்று செய்திகள் கூறுகின்றன.காரணம் அவருக்கு இருக்கும் ஞாபகமறதி நோயாம், நல்லவேளை சீக்கிரம் கண்டுபிடிக்கப்பட்டார்
,இல்லன்னா என்னென்ன வதந்திகள் இறக்கை கட்டி பறந்திருக்குமோ?என்னென்ன விளைவுகள் சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்ந்திருக்குமோ?

எனக்கு ஒண்ணு தோணுச்சு, நாட்டில் இருக்கும் சங்கராச்சாரிகள்,சங்பரிவார் தலைவர்கள்,மடாதிபதிகள்,ஆதீனகர்த்தர்கள் எல்லோருக்கும் இந்து மதத்தில் இருக்கும் வர்ணாசிரம்,சாதிகட்டமைப்புகள்,ஏற்றத்தாழ்வுகள்,பெண்களுக்கு எதிரான நிலைப்பாடுகள்,தீண்டாமை,மூட நம்பிக்கை ஆகியவை திடீரென மறந்து போகிறமாதிரி ஒரு ஞாபகமறதி நோய் வந்ததுன்னா எவ்வளவு நல்லாயிருக்கும்?சமுதாயம் அமைதியாக இருக்கும் அல்லவா? நான் நினைச்சதுல ஏதேனும் தப்பு இருக்கா?

No comments:

Post a Comment