Thursday 6 September 2012

புளியாரை

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் என் மனம் வாடியதே என்று கூறிய வள்ளலார் இராமலிங்கசுவாமிகள் மனிதகுலம் நோய் நொடியின்றி வாழ உணவுமுறைகளையும், நாம் அடிக்கடி பயன்படுத்த வேண்டிய மூலிகைகளையும் கூறியுள்ளார்.

அவர் சிறப்பித்து கூறியுள்ள மூலிகைகள் கரிசாலை,தூ
துவேளை,முசுமுசுக்கை மற்றும் புளியாரை.இவற்றை நாம் அடிக்கடி பயன்படுத்தி வந்தால் ஆரோக்கியமுடனும் நீண்ட ஆயுளுடனும் வாழலாம் என வள்ளலார் கூறியுள்ளார்.

அவர் சிறப்பித்து கூறியுள்ளவற்றில் புளியாரையின் குணங்களை பார்ப்போம்.

தமிழகம் முழுதும் நீர் நிலைகள்,ஈரப்பதமான இடங்கள்,மலைப்பகுதிகளில் காணப்படுகிறது.மென்மையான நீண்ட காம்பில் முக்கூட்டு இலைகள் இருக்கும் சிறு செடி இது.

உடல்வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் உண்டு.இதன் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட கழிசல் குணமாகும்.
பருப்புடன் சேர்த்து குழம்பாகவோ,கூட்டு அல்லது பொரியல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூலம்,பித்தம், நாவில் சுவையின்மை,மயக்கம் போன்றவை குணமாகும்.

புளியாரையுடன் வேறு சில மூலிகைகள் சேர்த்து தயாரிக்கப்படும் புளியாரை நெய் மூலம்,இருமல்,காசம்,காமாலை போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

இதன் இலையை அரைத்து ஒரு சிறு உருண்டை எடுத்து தினந்தோறும் மோரில் கலந்து குடித்து வர வாய்ப்புண்,வயிற்றுப்புண் ஆகியவை தீரும்.இதன் இலையை அரைத்து முகத்தில் பூசிவர பருக்கள் நீங்கும்,முகம் பொலிவு பெறும்.

புளியாரையின் இத்தகு குணங்களால்தான் வள்ளலார் இதனை சிறப்பித்து கூறியிருக்கிறார்.இனி புளியாரையை அடிக்கடி பயன்படுத்துவோமா?

அடுத்த பதிவில் வள்ளலார் கூறிய காலை உணவு கரிசாலைப்பால்.

Wednesday 5 September 2012

பட்டாசு

சிவகாசி தீ விபத்து: கொடுமை,கொடுமையிலும் கொடுமை,வர்ணிக்க முடியாத கொடுமை.என் குழந்தைகளை அமரவைத்து பக்குவமாக எடுத்து சொன்னேன்.தீ விபத்தின் கொடுமையை சொன்னேன்,என் குழந்தைகளின் வயதையொத்த பிள்ளைகள் கல்வி மறுத்து சிறார் தொழிலாளர்களாக பணிபுரியும் அவலத்தை எடுத்து சொன்னேன்,புரிந்து கொண்டார்கள்.இனி பட்டாசு வெடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளோம்.

கட்டுவிரியன்

இதுவும் பாம்புதான்,பேரு கட்டுவிரியன், நல்லபாம்பை விட விஷம் அதிகம்.விரியன் கடிச்சா விதி முடிஞ்சு போச்சுன்னு கிராமங்களில் சொல்வாங்க.ஆனா இதை யாரும் கும்பிடறது இல்லை.இதுக்கு பால் ஊத்தி வைக்கறது இல்ல,முட்டையும் ஓட்டை போட்டு வைக்கறது இல்ல.இந்த பாம்பு செய்த பாவம் என்ன? நல்லபாம்புக்கு கொடுக்கும் மரியாதையை இந்த பாம்புக்கு ஏன் கொடுப்பதில்லை?

ஆசிரியர் தினம்

மந்தை ஆடுகளிலே நடக்க இயலாத ஆட்டின் மீது தனிக்கவனம் செலுத்துபவனே நல்மேய்ப்பன் என்பார்கள்.ஆசிரியர் சமுதாயமும் அப்படியே. பாகுபாடு பார்க்காமல் திறமைகுறைந்த மாணவனை ஊக்குவித்து அவன் திறமைகளை ஊக்குவிப்பதே நல்ல ஆசிரியர்க்கு அழகு. 

இப்போதைய காலகட்டத்தில் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஆசிரியர்களை தேடினால் மட்டுமே பார்க்கமுடிகிறது.

நான் கல்வி பயின்ற போது ஒவ்வொரு மாணவனையும் தங்கள் பிள்ளைகளாக பாவித்த ஆசிரியர்களுக்கும்,இன்றும் அத்தகு குணங்கள் வாய்க்கப்பட்ட இந்த தலைமுறை ஆசிரியர்களுக்கும் இந்த ஆசிரியர் தினத்திலே என் பணிவான வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tuesday 4 September 2012

ஓடும் உதிரத்தில்......

ஓடும் உதிரத்தில் வடிந்தொழுகும் கண்ணீரில் சாதி தெரிவதுண்டோ!

கண்டிப்பாக தெரியாது என்றார் கார்ல் லேண்ஸ்டைனர்.ஆஸ்திரிய நாட்டைச்சார்ந்த இவர் வெய்னர் என்ற விஞ்ஞானியுடன் சேர்ந்து 1930-ல் நோபல் பரிசு வென்றவர்.

குருதியில் சாதி தெரியாது,ஆனால் இரத்த
த்தில் சில பிரிவுகள் உண்டு.அது ஒரு குறிப்பிட்ட இனத்துக்கு மட்டும் சொந்தமல்ல.

ஆண்,பெண் ஏழை,பணக்காரன்,உயர்ந்தவன் தாழ்ந்தவன், நெட்டையன்,குட்டையன் கறுப்பன்,வெள்ளையன்,கீழ்சாதி மேல்சாதி,எல்லா மதத்தவனுக்கும் இரத்தம் ஒன்றே.இரத்தத்தின் பிரிவுகள் மனிதனாக பிறந்தவர்கள் அனைவருக்கும் பொதுவானவை.கறுப்பன் இரத்தம் வெள்ளையனுக்கும்,வெள்ளையன் இரத்தம் கறுப்பனுக்கும் பொருந்தும்.கிறித்தவன் இரத்தம் இஸ்லாமியனுக்கும் இஸ்லாமியன் இரத்தம் கிறித்தவனுக்கும் பொருந்தும் என்ற அறிவியல் உண்மையை கண்டுபிடித்து உலகுக்கு வெளிப்படுத்தினார்.

உண்மை இப்படியிருக்க, இன்னும் என்னய்யா சாதி,மதம் இன்னும் பிற ஏற்றத்தாழ்வுகள் எல்லாம்?மானுடராய் ஒன்று சேருங்கய்யா.

பெரியாரின் மதம்,சாதி

சந்தர்ப்பவாதிகளாய்,தாங்கள் வடிவமைத்துக்கொண்ட அரசியல் கொள்கைகளுக்காக வாய்கூசாமல் பெரியாரை இகழ்வோரே!

தமிழில் உருவான நூல்களிலேயே தந்தை பெரியாருக்கு மிகவும் பிடித்தது திருக்குறள்,அந்த குறளின் பெருமையை பரப்ப 1948-ல் திருக்குறள் மாநாடு ஒன்றை நடத
்தினார் என்பதை எத்தனை பேர் அறிவோம்?

அய்யா! திருக்குறளில் கடவுள் வாழ்த்து இருக்கிறதெ,அதில் தங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா?என்று கேட்டதற்கு, திருவள்ளுவர் என்பவர் ஒரு பலசரக்கு கடைக்காரர் போன்றவர்,அவரிடம் யாருக்கு என்ன வேண்டுமோ அதை வாங்கிக்கொள்ளவேண்டும் என்றார்.

மேலும் தமிழா நீ என்ன மதம் என்று எவரேனும் கேட்டால் வள்ளுவன் மதம் என்று சொல்லு.என்ன சாதி என்றால் குறள்சாதி என சொல்லு என்று அறிவுறுத்தியவர் பெரியார்.

இப்படி வாழ்நாள் முழுவதையும் தமிழையும்,தமிழரையும் நேசித்து,தமிழருக்காக உழைத்தவரை சந்தர்ப்பவாதிகளாய் இகழ்கிறார்களே,அவர்களது மனசாட்சி உறுத்தவில்லையா?

மகனின் பொறுப்பற்ற குணத்தின் மீது கொண்ட கோபத்தினால் நீ எருமை மாடு மேய்க்கத்தான் லாயக்குடா என்று ஒரு தந்தை பொய்க்கோபத்தால் சொன்னால்,அந்த தந்தையை வெட்ட அரிவாளை தூக்கும் புத்திபேதலித்த பிள்ளை போன்றவர்கள் இவர்கள்.

இதெல்லாம் நடக்கும்

ஆசிரியர் மகனை என்ன ஆசிரியரே என்று அழைப்பதுண்டோ,மருத்துவர் மகனை என்ன மருத்துவர் அய்யா என்று அழைக்கும் வழக்கம் உண்டோ,ஆனால் புரோகிதர் வீட்டு ஐந்து வயது சிறுவனைக்கூட என்ன சாமி அப்பா இல்லையா? என்று கேட்கும் அளவுக்கு பல கட்டுக்கதைகளை புணைந்து அவற
்றை நமக்கு ஊட்டி நம்மை அடிமைப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த படத்தில் சிறுவர்கள் காலில் விழுந்து வணங்குபவர் கர்நாடகா சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனந்த்சிங்.கருனாடகத்தில் மழைவேண்டி அரசு செலவில் 17.5 கோடி செலவில் நடந்த யாகத்தின் ஒரு பகுதிதான் அமைச்சர் இந்த சிறுவர்களின் காலில் விழும்காட்சி.சுயமரியாதை உள்ளவர் எவரேனும் இது போன்ற செயலில் ஈடுபடுவார்களா?

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பது உண்மையெனில் அரசு பணத்தை ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த,அதுவும் மூட நம்பிக்கைகளுக்காக செலவு செய்ய இவர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்?அரசியல் சாசனம் இதை அனுமதிக்கிறதா?

பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால்,எந்த மூட நம்பிக்கைகள் எல்லாம் சிறுக சிறுக நம்ம்முடைய சமூகநீதிப் போராட்டங்களினால் அழித்துக்கொண்டிருக்கின்றன என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அவை எல்லாம் மீண்டும் தலை விரித்து ஆடத்துவங்கிவிடும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம்.

கடவுளின் மரணம்

கடவுளுக்கும் மரணம் வரும்,மனிதனுக்கு தன்னம்பிக்கை பிறக்கும் போது.

- தந்தை பெரியார்

தினப்பலன்


நான் சொல்லலப்பா, பிரபல பத்திரிக்கையாளர் குஷ்வந்த்சிங் சொல்லியிருக்கார்.

இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி (ILLUSTRATED WEEKLY)
மேற்சொன்ன ஆங்கில் வார இதழின் ஆசிரியர் திரு குஷ்வந்தசிங் அவர்கள். சோதிடத்தை நம்பாதவர். அந்த வார இதழில் ராசி பலன் எழுதிவந்த ச
ோதிடர் தனக்குச் சம்பளம் போதவில்லை என்று சொல்லிக் கொஞ்சம் சேர்த்துக் கொடுக்குமாறு கேட்டார். அதற்குக் குஷ்வந்த்சிங் அவர்கள் நீங்கள் எழுதுவது பொய்தானே? இதற்கு ஏன் அதிகச் சம்பளம் என்று கூறி மறுத்துவிட்டார். ஜோஸியரும் வேலைக்கு வருவதை நிறுத்திக்கொண்டார்.
ராசிபலன் இல்லாமலேயே பத்திரிகையும் வெளிவந்தது. ராசிபலன் இல்லாததால் பத்திரிகை விற்பனை மிகவும் மோசமானது.
அப்போது அந்தப் பத்திரிகையின் உரிமையாளர்கள் குஷ்வந்த் சிங் அவர்களிடம் நமக்கேன் வம்பு? அந்தச் சோதிடருக்குச் சம்பளம் அதிகமாகக் கொடுத்து வேலைக்குச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். நூலாசிரியரோ அதை மறுத்துவிட்டு 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பத்திரிகையில் வெளிவந்த ராசிபலன்களை அப்படியே எடுத்து அச்சிட்டு வெளியிடச் சொன்னார். வீழ்ந்த வியாபாரம் மள, மளவென்று பழைய நிலைக்கு வந்தது.

நன்றி திரு :Sirpi Rajan
 

சாமை,வரகு

அரிசி உணவை அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வருவதற்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்களே,அந்தக்காலத்தில் நம் தமிழர்கள் எப்படி தாக்குபிடித்தார்கள் என்று யோசித்திருக்கிறேன்.ஆராய்ந்து பார்த்ததில் கிடைத்த விடை என்னவெனில் வரகு,சாமை,தினை,கம
்பு,கேழ்வரகு ஆகியவற்றை பெருமளவு பயன்படுத்தியிருக்கிறார்கள் நம் முன்னோர்.

ஒருமுறை நமது தோழர் Sirpi Rajan அய்யா அவர்களை காண ஆரோவில் சென்றபோது அவருடன் இருந்த வெளிநாட்டுக்காரர்கள் மதிய உணவு கொடுத்தார்கள்.அவர்கள் கொடுத்த உணவு முழுக்க சாமை,வரகு,தினைஆகியவற்றில் செய்யப்பட்ட எலுமிச்சை,புளியோதரை மற்றும் கேழ்வரகு தோசை ஆகியவை.சாமை,வரகில் செய்யப்பட்ட சோறு அவ்வளவு அருமையான சுவையாக இருந்தது.அங்கிருந்த ஒரு ஆஸ்திரேலிய பெண் கூறினார், நீங்கள் மறந்து போனதை நாங்கள் சாப்பிடுகிறோம் என்று.

நம்மில் எத்தனை பேருக்கு சாமை,வரகரிசி தெரியும்? ஏன் இந்த தானியங்கள் நம் பயன்பாட்டில் இருந்து மறைந்து போனது?இவை கிடைக்குமிடமாவது நாம் அறிவோமா? நானும் எங்கள் ஊர் முழுவதும் தேடினேன்,தினை மட்டும் கிடைத்தது,வரகு,சாமை கிடைக்கவில்லை.வெறும் அரிசி,கோதுமையை மட்டும் பயன்படுத்துகிறோமே,இது போன்ற தானியங்களையும் தேடி பயன்படுத்தி நலம் பல பெறலாம் அல்லவா?

அகர் மரம்

அகர்மரம் தமிழ்நாட்டின் கர்நாடக மாநில எல்லையை ஒட்டிய மலைப்பகுதிகளில் மட்டுமே நன்றாக விளையும்,ஆனால் தமிழகத்தின் எல்லாப்பகுதிகளிலும் நன்கு வளரும் என்று பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டு மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்று இன்று பசுமை விகடன் பத்திரிக
்கையில் கட்டுரை கூறுகிறது.

என்னுடைய கேள்வி என்னவெனில் இந்த தெளிவான விளக்கத்தை இவ்வளவு நாட்களாக மக்களுக்கு தெரிவிக்காமல் இவ்வளவு தாமதமாக தெரிவிப்பது ஏன்?

தன்னை வாழவைக்கும் விவசாயிகளுக்கு,பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை அளிக்க வேண்டியது பத்திரிக்கைகளின் கடமையாகும்,ஆனால் இந்திய பத்திரிக்கைகள் அவ்வாறு உண்மையாக நடந்து கொள்வதில்லை.

அன்றே ஈமு கோழி குறித்து இந்த பத்திரிக்கைகள் மக்களுக்கு தெளிவை ஊட்டியிருந்தால் மக்கள் விழிப்புணர்வு அடைந்திருப்பார்கள்,கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்திருக்காது.

ஒரு பக்கம் ஈமுகோழி பற்றி ஆஹோ ஓஹோவென புகழ்ந்து கட்டுரை.மறுபக்கம் ஈமுகோழி குறித்து சந்தேகம் எழுப்பி சிறு செய்தி.மோசடி நிகழ்ந்த பின்பு நாங்கள் அன்றே சொன்னோம் என்று கூறுவது,இது உண்மையில் அப்பட்டமான ஏமாற்று வேலையே.

இன்று ஈமுகோழி குறித்து எழுதுகிறார்கள்,அதை அன்றே சொல்லியிருக்கலாமே.

கால்நடைத்துறை மட்டும் அன்று மக்களுக்கு உரிய விழிப்புணர்வு கொடுத்திருந்தால் இவ்வளவு பெரிய மோசடி நிகழ்ந்திருக்காது.

இப்போதுகூட அகர் மர வளர்ப்பு குறித்து விவசாயத்துறை சார்பில் மக்களிடம் உரிய தெளிவு கொடுக்கப்படவில்லை,இந்த விஷயத்தில் மோசடி பூதம் எப்போது கிளம்பப்போகிறதோ தெரியவில்லை. கடைசியில் அகர் மரத்தில் அகர் கிடைக்காமல் விறகுக்குக்காக வெட்ட்ப்படும் நிலை உருவாகப்போகிறது.

பத்திரிக்கைகளும் சரி,சம்பந்தப்பட்டத்துறைகளும் கண்கெட்டப்பிறகுதான் சூரியவணக்கம் சொல்லித்தர முயலுகிறார்கள்.

மரத்தில் பணம்

முதலீடு நோக்கில் வீட்டுமனை வாங்கி வைத்திருக்கிறீர்களா?பணியின் பொருட்டு பட்டணத்துக்கு வந்ததால் கிராமத்தில் இருக்கும் உங்கள் நிலம் தரிசாக கிடக்கிறதா? ஆம் எனில் அவற்றில் மரங்கள் நடலாமே.

ஆம்,உங்கள் காலி மனை,விவசாய நிலங்களில் வேங்கை,தேக்கு,பிள்
ளைமருது,சந்தனம்,செஞ்சந்தனம்,ரோஸ்வுட்,பூவரசு போன்றவற்றை நட்டு ஒரு சில வருடங்கள் பராமரித்தால் போதும்,பிறகு பராமரிப்பு தேவையில்லை.

இதனால் நல்ல பலன்கள் உண்டு.முதலில் சுற்றுச்சூழலுக்கு உறுதுணையாக பத்து,பதினைந்து வருடங்களுக்கு ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் மரங்களை வளர்த்த பெருமை நமக்கு.

இரண்டு நாம் வீடு கட்ட நினைக்கும் போது, நம் மனையில் இருக்கும் மரங்களையே நம் வீட்டு தச்சுவேலைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்,மீதமிருக்கும் மரங்களை விற்று பணமாக்கி கொள்ளலாம்.

அடுத்து விளை நிலத்தில் நடப்பட்ட நூற்றுக்கணக்கான மரங்கள் எனில் பதினைந்து வருடங்களில் உங்கள் நிலத்தின் மதிப்பும் உயர்ந்திருக்கும்,உங்கள் நிலத்தில் லட்சக்கணக்கான அல்லது கோடிகளின் ரூபாய் மதிப்பில் மரங்கள் இருக்கும், நிச்சயமாக எந்த வைப்பு நிதியிலும்,இன்சூரன்சிலும் கிடைக்காத தொகையாக இருக்கும்.

தீவிரமாக யோசிப்போமா மரம் வளர்ப்பு குறித்து.

அர்ச்சகர்

இங்கே முகநூலில் சங்பரிவாரத்துக்கு ஆதரவாக பொங்கி எழும் இளைஞர்களே! 
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று கொள்கை முழக்கம் இடுமாறு உங்கள் சங்பரிவாரங்களை வலியுறுத்துவீர்களா?

ஷாக்கா

நாம் எல்லோரும் ஒன்று, நாம் அனைவரும் இந்நாட்டு மக்கள், நமக்குள் சாதிவேற்றுமைகள் இல்லை,அனைவரும் இந்தியர்,ஒரே நாடு! ஒரே மக்கள்! ஒரே சட்டம்! என்போரே!

நீங்கள் கூறுவது உண்மையெனில் குறிப்பிட்ட சில தொழில்களை குறிப்பிட்ட 
சில சாதிகள் மட்டும் செய்வது ஏன்?

இந்த கேள்வியை இளைஞர்கள் அனைவரும் வலியுறுத்தி ஆணித்தரமாக கேட்க ஆரம்பித்தால் என்ன நிகழும்?

ஆர்.எஸ்.எஸ் ஷாக்காக்கள் நின்று போகும்.

குடும்ப வாழ்வில் சிநேகிதம்

வளர்ந்த கதை மறந்து விட்டாய் கேளடா கண்ணா என்று ஒரு அருமையான பாடல் காலையில் டிவியில் பார்த்தேன்.

அதில் வரும் வரி,அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா.

பாடலுக்கு சுவையாக இருக்கலாம்,ஆனால் உண்மை வாழ்வில் தந்தை பெரியார் சொன்னவாறு சிநேகிதர்கள் போ
ல சிநேகிதமாக இருக்க வேண்டும்.

அடைக்கலம், தஞ்சம் என்ற வார்த்தைகள் பெண்ணை ஒரு படி கீழே வைத்திருக்கிறது அல்லவா?

அதிலும் ஆணுக்கு பெண் சமம்,அனைத்து துறைகளிலும் ஆணுக்கு நிகராக பெண்கள் எனும் இந்த காலகட்டத்தில் குடும்ப வாழ்விலும் ஆணுக்கு பெண் சரி நிகர் என்பதுதானே சரியாக இருக்கும்.

மணமொத்த தம்பதிகளாக வாழ்க்கையை துவக்கிடும் போது அதில் சிநேகிதம் முழுக்க இருந்திடுமானால் அந்த குடும்ப வாழ்க்கை வாழ்நாள் முழுவதும் இனித்திடும் அல்லவா?

பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலத்திலேயே குடும்ப வாழ்வில் சிநேகிதம் என்ற வார்த்தையை 50 வருடங்களுக்கு முன்னரேயே பயன்படுத்தி அறிவுறுத்திய தந்தைபெரியாரின் முற்போக்கு சிந்தனையை எண்ணி பூரிப்படைகிறேன்

பரலோக சாம்ராஜ்ஜியம்

உயரமான மலைப்பாதைகளில் பயணிக்கும் போது,எட்டிப்பார்த்தால் தலை சுற்றுகின்ற உயரத்தில்,யாருமே செல்லமுடியாத இடத்தில் இருக்கும் பாறைகளில் கூட பரலோகசாம்ராஜ்ஜியம் பக்கத்தில் இருக்கிறது என்று எழுதி வைத்திருக்கிறார்களே! எப்படி அந்த ஆபத்தான இடங்களுக்கும் சென்று அவர்களால் எழுதமுடிகிறது? கால் கூசாதா?

ஒருவேளை தவறி விழுந்தால் அடையாளம் தெரியாமல் செத்துப்போய்விடுவோம் என்பதை விளக்கத்தான் பரலோக சாம்ராஜ்ஜியம் பக்கத்தில் இருக்கிறது என்று எழுதி வைக்கிறார்களோ?

மதத்தின் பெயரால்

பழங்குடியின மக்களுக்கு இயற்கையாகவே இசையுணர்வும்,ஆடல்பாடல் குணங்களும் நிறைந்திருக்கும்,அங்கே மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடும்.

நம் மாநிலத்தில் இருளர் சமுதாய மக்களுடன் பழகியவர்களுக்கு தெரியும் அவர்களுக்கு இருக்கும் இசையுணர்வு.

இது உலகம் பூராவும் 
இருக்கும் பழங்குடியினரிடம் காணப்படும் ஒன்று.ஆப்ரிக்க கறுப்பின மக்களிடமும் இசையுணர்வு அதிகம் இருப்பதை காணலாம்.

இது போலத்தான் ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஒரு பழங்குடியின மக்கள் தங்கள் விழாக்களில் இசையுடன் ஜிப்சி நடனம் ஆடுவது வழக்கமாம்.சமீபத்தில் அவர்களிடையே ஒரு ஆட்டம்,பாட்டம் நிகழ்ச்சி ஒன்று நடக்கும் போது காட்டுமிராண்டி தாலிபன்கள் நுழைந்து இரண்டு பெண்கள் உள்பட பதினேழு பேரை தலை துண்டித்து கொன்று இருக்கிறார்கள்.

மதப்பழமைவாதத்தின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களுக்கு இது ஒரு உதாரணம்.பழமைவாதம் பேசும் இந்த காட்டுமிராண்டிகள் போரிடுவதற்கு மட்டும் நவீன ஆயுதங்கள்,ராக்கெட்டுகள்,ரேடியோ,கையெறி குண்டுகளை துறந்து கத்தியை தூக்கிக்கொண்டு போருக்கு செல்லலாமே.இவர்கள் போரில் காயம்பட்டால் கருஞ்சீரக எண்ணெய்,பேரிச்சம் பழத்தை மறுத்து நவீன மருந்துகளை பயன்படுத்துவது ஏனோ?இவையெல்லாம் இஸ்லாத்துக்கு விரோதமானது கிடையாதா?

மூளைச்சலவை செய்யப்பட்ட மனித இயந்திரங்கள்.இவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மனதிலும் இந்த மிருக உணர்வு பதுங்கியிருக்கிறது என்றே கருதலாம்
புராண புரட்டுகளையும்,மூட நம்பிக்கைகளையும் அது தன்னுள் கொண்டிருக்கும் பிரிவினை,அடக்குமுறை சூழ்ச்சிகளையும் பேசினால் மனது வலிக்கிறதாம்.

மனது வலிக்காமல் பகுத்தறிவு பேசும் வழிமுறை ஏதேனும் இருக்கிறதா? உண்மையை வெளிச்சம் போட்டுக்காட்டினால்கூட மனது வலிக்குமா என்ன?

முற்பகல் செய்யின்......

குஜராத்தில் கலவரத்தின்போது நடைபெற்ற குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர் சிறைக்கு செல்லும்போது தன் மகளைப்பிரிந்து அழுத காட்சியாம் இது.

அடப்பாவிகளா! எத்தனை பேரை துரத்தி துரத்தி விடட்டினீர்கள்,குத்தி கிழித்தீர்கள்,கர்ப்பிணி என்று பார்த்தீர்களா? உ
ங்களை பார்த்து ஒருவர் கையெடுத்து கும்பிட்டு அழுத காட்சி அனைத்து பத்திரிக்கைகளிலும் வந்ததே! அப்போது இந்த குடும்பம் பாசம் செண்டிமெண்ட் எங்கே போனது?

என்னய்யா பெரிய தண்டனை?இந்திய சட்டங்களில் இருக்கும் ஓட்டைகளில் நீங்கள் என்ன முழு தண்டனையையா அனுபவித்து விடப்போகிறீர்கள்?

தற்காலிகப்பிரிவுக்கே மகளைப்பார்த்து கதறி அழுகிறீர்களே? அன்று எத்தனையோ பேரை உலகத்தை விட்டே அனுப்பினீர்களே,அவர்கள் குடும்பத்திற்கு பரிகாரம் என்ன?

இதெல்லாம் ஒரு தண்டனையா? ஜுஜூபி,சட்டத்தின் ஓட்டைகள் இருக்கு,கவலைவேண்டாம்,பெயிலில் வந்து விடலாம்.சங்கம் உங்களை தியாகிகளாக மாற்றி பிரச்சாரம் செய்யும்.

எப்பா ஒப்பிலியப்பா.....

1).ஒரு அரக்கன் பூமியை பாய்போல சுருட்டி எடுத்துக்கொண்டு போய் கடலில் பதுங்கிக்கொண்டான்,(கடலும் பூமியில்தானே இருக்குன்னுல்லாம் கேட்கக்கூடாது,சிந்திக்கக்கூடாது) உடனே மகாவிஷ்ணு மச்சாவதாரம் எடுத்துண்டு போய் அரக்கனை கொன்று பூமித்தாயை மீட்டு வந்தார
்.

2)108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான ஒப்பிலியப்பன் கோயில் நகைகளை கோயில் பெருச்சாளிகளே பொய்க்கணக்கு காட்டியே அமுக்கி விட்டனராம்.

கேள்வி: பூமிக்கு பிரச்சினை வந்தவுடன் பாய்ந்து வந்து மீனாக மாறி அரக்கனை கொன்ற கடவுள்,இங்கே அவர் கண்முன்னே நடந்த கொள்ளையை கண்டு அமைதியாக இருப்பது ஏன்?

பெருச்சாளி பிடிக்க.......

அரசு மருத்துவமனைகளில் பெருச்சாளி பிடிக்க அதில் அனுபவமுள்ள இருளர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
-தமிழக அரசு

என்ன அநியாயம் இது?எலி பிடிக்க இருளர்களா? முதலில் அவர்கள் மேற்படிப்பு படிக்க தடையாக இருக்கு
ம் சாதி சான்றிதழை கொடுங்கப்பா.

எலி,பன்றி இதெல்லாம் எங்கே இருக்கும்? அசுத்தம் இருக்குமிடத்தில் மட்டுமே இருக்கும்.அரசு மருத்துவமனைகளை சுத்தமாக பராமரித்தாலே போதுமே,இவையெல்லாம் ஓடி விடுமே.

தலையில் பேன் இருந்தால் பேன் எடுக்க ஆள் பார்ப்போமா? அல்லது ஷாம்பு,சீப்பு போட்டு தலையை சுத்தம் செய்வோமா?

துன்பக்கடல்

துன்பக்கடலில் இருந்து நீந்தி கரை சேர்ந்து சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு நாம் பெரும்பாலும் நம் வாழ்வை வளமாக அமைத்துக்கொள்வதைப்பற்றியே யோசிக்கிறோம்,அல்லது நாம் பிறந்த சமுதாயத்தை பற்றி பேசுகிறோம்.

ஆனாலும் நம்மிலும் மிகவும் கீழான நிலையில் இருக்கும் இருளர்கள்,பூம்பூம் மாட்டுக்காரர்கள், நரிக்குறவர் இன்னும் பல பழங்குடியினர் என தமிழகம் முழுவதும் ஆங்காங்கே விழிப்புணர்வு இல்லாதவர்களாக,அடிப்படை வசதிகள் கூட கிடைக்கப்பெறாதவர்களாக இருப்பவர்களைப்பற்றி சிந்திக்க ,பேச மறந்து போகிறோமே ஏன்?

இருளர் இனப்பெண்கள் மீது பாலியல் அத்துமீறல் நடக்கின்றபோது மட்டுமே அவர்கள் மீது நம் கவனம் திரும்புகிறது.

அவர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்கள்,வாக்கு சதவிகிதம் குறைந்தவர்கள் என்பதால் அவர்கள் மீது கவனம் செல்ல மறுக்கிறதோ?

ரோபோவுக்கு தூக்குத்தண்டணை


ஒரு வழியாக ஒரு ரோபோ இயந்திரத்துக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டது.

அஜ்மல் கசாப்பைத்தான் ரோபோ என்கிறேன்.12 அ 13 வயதிலேயே பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு முகாம்களில் வைத்து மதத்தின் பெயரால் மூளைச்சலவை செய்யப்பட்டு தீவிரவாத செயல் ப
ுரிய அனுப்பப்படும் சிறுவர்களை மனித எந்திரம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?

படித்து பட்டம் படித்து அதன்பிறகும் சிந்திக்கும் திறனில்லாமல் மதவெறி பிடித்து அலைபவனை மிருகம் எனலாம்,ஆனால் இது போன்ற சிறுவர்கள் கதை வேறு.

முழுக்க முழுக்க மூளைச்சலவை.இறைவன் உனக்கு சொர்க்கத்தை கொடுப்பார்,இந்த உலகில் அனுமதிக்கப்படாத இன்னும் பல விஷயங்களை அளிப்பார் என்று ஆசைக்காட்டப்படும்போது அந்த கல்வியறிவு இல்லாத பிஞ்சு உள்ளங்கள் என்ன செய்யும்? இதுதான் உண்மை என்று நம்பும்.

கசாப்புக்கு அளிக்கப்பட்டுள்ள தூக்குத்தண்டனை தீவிரவாதத்தை நிறுத்திடுமா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். இந்த தண்டனை மும்பையில் நடைபெற்ற கொடுஞ்செயலினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வேண்டுமானால் ஆறுதலாக இருக்கலாம்.ஆனால் இதனால் ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை.

என்று மனிதன் மத அடிப்படைவாதத்திலிருந்து விடுபடுகிறானோ,மதப்பழமைவாதிகளை புறக்கணிக்கத் துவங்குகிறானோ,என்றைக்கு ஏன் எதற்கு என்று கேள்விகள் கேட்டு உண்மைகளை கண்டறிய முற்படுகிறானோ அன்றுதான் இத்தகு படுபாதகமான மத(ட)க்கொடுமைகளில் இருந்து மனிதகுலத்துக்கு விடுதலை கிடைக்கும்.
 

தந்தைபெரியார் எனும் ஊதாரி

இவரைப்போன்ற ஊதாரி எவரும் இருக்க முடியுமோ? ஒரு பவுன் தங்கம் 20 ரூபாய்க்கு விற்ற காலத்திலேயே 68 ஆண்டுகளுக்கு முன்பே திருச்சி அரசு மருத்துவமனையில் பிரசவ விடுதி அமைக்க ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வீணாக்கியிருக்கிறார்.

சேய்ய்ய்ய்ய்ய் இவ்வளவு பெர
ிய கஞ்சனா இருந்திருக்காரே இந்த கிழவன்,அன்னைய தேதியில் ஒரு பவுன் விலை 20 ரூபாய்தானாம்.எத்தனையோ பவுன் வாங்கி கோவிலில் அம்பாளுக்கு சேர்த்திருக்கலாம்,அந்த காசை எடுத்துண்டு போய் சூத்திரா எல்லாம் வைத்தியம் பார்த்துக்கற கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் கொட்டியிருக்காரே.

உண்மைக்காதல்

I stopped thinking about beauty. . .when I saw love between BLIND COUPLE

இங்கு அழகு என்பது அகத்தில் இருந்து வெளிப்பட்டு ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் அளவில்லாத அன்பு மட்டும்தான் அல்லவா?

சாமி வந்துடுச்சா??????????????

வெளிநாட்டுக்காரர் ஒருவரைக் கொண்டுவந்து நிறுத்தி வைத்து, ஒரு வாரம் உடுக்கடித்தாலும் அவருக்குச் சாமி வராது. காரணம் அவர் அதற்கு முன் சாமி வந்து ஆடியதைப் பார்த்தது கிடையாது.


சாமி வந்த ஆடும்போது எது சொன்னாலும் உண்மை, அது பலிக்கும் என்றெல்லாம் சொல்வார்கள். உங்கள் ஊரில் யாராவது சாமி வந்து ஆடும்போது ஓசாமா பின்லேடன் எங்கே ஒளிந்திருக்கிறான் என்று கேட்டுப்பாருங்கள்! பதில் வருமா? வராது. சாமி மலையேறிவிடும்!

நன்றி திரு. Sirpi Rajan

ஆவி

நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 3 மணிவரை சுடுகாட்டுப்பாதையில் இருக்க வேண்டியதாயிற்று, நிலத்திற்கு மண் அடிக்கும் வேலை.

அந்த இருட்டு நேரத்தில் இரண்டு நரிகளை பார்த்தேன்,ஒரு உடும்பு,ஒரு ஆமை,ஆந்தையின் அலறல்,வண்டுகளின் ரீங்காரம் எல்லாம் கேட்டது.

ஆனால் ஒரு ஆவியைக்கூட பார்க்கமுடியல. மைக்கேல் ஜாக்சனின் த்ரில்லர் ஆல்பத்தில் கல்லறையிலிருந்து பிணங்கள் எழுந்து வருவது போல ஏதாவது வருதான்னு பார்த்தால் ஒன்னுமே வரலப்பா.

சிற்பி ராசன் SirpiRajan

சமூக நீதிப்போராட்டங்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட தோழர் சிற்பி ராஜன்Sirpi Rajanஅவர்களைப்பற்றி இந்த வார ஆனந்த விகடனில் 4 பக்கங்களில் செய்தி வந்ததை நம்மில் பலரும் அறிவோம்.

அவரைப்பற்றி இன்னொரு செய்தி,என்னவெனில் பல மேஜிக் வித்தைகள
ை செய்து காட்டுவார்.இதில் சிறப்பு என்னவெனில் செய்து காட்டியவுடன் அது எப்படி செய்யப்பட்டது என்பதை வெளிப்படுத்திவிடுவார்.

ஏன் அய்யா இரகசியத்தை போட்டு உடைக்கிறீர்கள் என்று கேட்டேன்.அதற்கு அவர் சொன்ன பதில், ரச்கசியத்தை சொல்லவில்லையெனில் நான் பகுத்தறிவுவாதி அல்ல.மக்கள் எப்படியெல்லாம் போலி சாமியார்களின் வித்தைகளில் ஏமாறுகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காகவே நான் மேஜிக் வித்தைகளை கற்றேன் என்றார்.

அய்யா இந்த இரகசியங்களை சொல்லாமலிருந்தால் என்னவாகும் என்றேன். நானும் ஒரு பாபாவாக மக்களால் கொண்டாடப்பட்டிருப்பேன்.சிற்பி ராஜன் என்ற என் பெயர் ராஜன் பாபா என மக்களால் மாற்றப்பட்டு கொண்டாடப்பட்டிருப்பேன்,தினந்தோறும் வாயிலிருந்து லிங்கமும் வானத்திலிருந்து விபூதியும் வரவழைத்து பொய் பேசிக்கொண்டிருந்திருப்பேன்,பல நூறு ஏக்கர் நிலத்தில் ஆசிரமம் வைத்துக்கொண்டிருந்திருப்பேன் என்றார்.

உண்மையை சொன்னால்

பருப்பு கீரை சமைப்பது எப்படி?தயிர் ஷாதத்துடன் சுவையான மாவடு ஊறுகாய், சூரிய நமஸ்காரம் செய்வதால் என்ன பலன்? வாஸ்து சாஸ்திரம், நல்ல நேரம் பார்ப்பது எப்படி? குடும்ப பெண்ணுக்கு லட்சணம்,நலம் தரும் காயத்ரி மந்திரம்,இதமான இட்லிப்பொடி,தோசை முருகலாக 
சுடுவது எப்படி? விதவிதமான கொழுக்கட்டை வகைகள் செய்வது எப்படி? அந்த மகானை பார்த்தேன் கண்களில் ஒளி தெரிந்தது.என் வாழ்வில் மாற்றம் கொடுத்த ஆலயம்,இது மாதிரியான பதிவுகள் போட சொல்றாங்கப்பா. போட்டால் நான் நல்லவன்னு சொல்றாங்க.

இதை விடுத்து சமூகத்தில் இருக்கும் அநீதிகளை பேசினால் முட்டாள்,வம்புக்காரன்,பிழைக்கத்தெரியாதவன்,இந்து மத விரோதி, மாற்றுமத கைக்கூலி,என்று பட்டம் கொடுத்திடறாங்கப்பா.

போலிச்சாமியார்

வாயிலிருந்து லிங்கம் வரவைத்து தருகிறார்,வானத்திலிருந்து விபூதி வரவழைத்து தருகிறார் என்று போலிச்சாமியார்களின் வித்தைகளிலே புளகாங்கிதம் அடைபவர்களே! ஏன் அவர்களால் 3 அடி உயரத்தில் லிங்கம் வரவழைக்க முடியவில்லை,மூட்டை மூட்டையாக விபூதி வரவழைக்கமுட
ியவில்லை என்பதை யோசித்திருக்கிறீர்களா?

அவர்கள் வரவழைத்து தரும் வாட்சுகளில் மேட் இன் இந்தியா,ஜப்பான்,சைனா என்று இருப்பது ஏன்? சொர்க்கம்,செவ்வாய்கிரகம்,இந்திரலோகம்,சந்திரலோகம் என்று இருப்பதில்லையே ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா?

அவர்கள் வரவழைத்து தரும் பொருட்கள் நேரடியாக உங்கள் வீட்டு பீரோவுக்குள் சென்று சேறுமாறு செய்வதில்லையே ஏன்?

திருமணத்திற்கு தாலி வரவழைத்து தருகிறார்களே,தங்கள் தெய்வீக சக்தியால் வீட்டிற்கு நூறு பவுன் வரவழைத்து தரலாமே! தருவதில்லையே ஏன்?

நூலகம் செல்வோம்


நம் வார்த்தைகள் மற்றவர்களால் கவனிக்கப்பட வேண்டுமானால் நாம் நம் அறிவால் புகழ்பெற வேண்டும்.அந்த அறிவு வளம் பெற்றிட தினந்தோறும் பலதரப்பட்ட நூல்களை படிக்க வேண்டும்.

பலதரப்பட்ட நூல்கள் நம்மால் வாங்கி படிக்க இயலுமா?பல்வேறு அறிஞர்கள்,பல்துறை வல்ல
ுனர்கள் எழுதிய நூல்கள் ஒருங்கே குவிந்திருக்கும் இடம் நூலகம். நூலகத்தை தினந்தோறும் செம்மையாக பயன்படுத்த முனையவேண்டும்.

அவ்வாறு நூலகங்களை பயன்படுத்தி உலகப்புகழ்பெற்ற புரட்சியாளர்கள் இருவரை உதாரணம் சொல்லவேண்டும் என்றால் ஒருவர் அம்பேத்கர்,இன்னொருவர் கார்ல்மார்க்ஸ்.இருவருமே லண்டன் பொது நூலகத்தில் இருந்த அனைத்து புத்தகங்களையும் படித்து முடித்தனராம்.அதனால்தான் இருவருக்கும் அங்கே சிலை வைக்கப்பட்டுள்ளது.

எவர் ஒருவர் தினந்தோறும் நூலகம் சென்று அறிவுக்கு வேலை கொடுக்கிறாரோ, நாளை உலகம் அவரைத் தேடி வரும்.
 

ஆர்எஸ்எஸ்

இந்த படை எங்கே கிளம்பி விட்டது? இரட்டைக்குவளை டீக்கடைகளை அடித்து நொறுக்கவா?

ஊர்த்தெருவுக்குள் சேரிப்பிள்ளைகள் செருப்பு போட்டு நடக்க அனுமதிக்காத கிராமங்களை திருத்தவா?

சேரி மக்களை அனுமதிக்காத கோயில் கதவை திறந்து விட புறப்பட்டு விட்டதா?

சாதிகளற்ற சமுதாயம் உருவாக்கிட கலப்புத்திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு அளித்திட புறப்பட்டு விட்டதா?

இயற்கையின் நீர் நிலைகள் அனைவருக்கும் சொந்தம் என்று கூறி தலித்துகளை ஊர்ப்பொது குளத்துக்கு நீர் அருந்த அழைத்து செல்ல புறப்பட்டு விட்டதா?

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க புறப்பட்டு விட்டார்களோ!

இதில் எதுவும் இல்லையென்றால் அப்புறம் என்னய்யா ஒரே நாடு! ஒரே மக்கள்! ஒரே சட்டம்! எனும் கோஷம் உங்களுக்கு? சாதி கட்டமைப்பை பாதுகாத்து வைத்துக்கொண்டு, நாமெல்லாம் ஒன்று, நமக்குள் வேறுபாடுகள் இல்லை,இந்த நாடு இந்து நாடு,இந்து மக்கள் சொந்த நாடு என்று புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறீர்களே.என்னய்யா ஏமாற்று வேலை இது? இளைஞர்களே சிந்தித்து பார்க்க மாட்டீர்களா?

தாளிக்கீரை

இது தாளிக்கீரை, நறுந்தாளி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் தானாக விளைந்து வீணாக போகிறது.கிராமப்புறங்களில் பரிச்சயமுள்ளவர்கள் இந்த கீரையை பார்த்திருக்கலாம்.

வேலிகள்,சிறு காடுகள் ஆகியவற்றில் காணப்படும் கொடியினம். உடல் கொதி
ப்பு,எரிச்சல் போக்கும்.காமம் பெருக்கும் வல்லமை படைத்தது.

இதில் இலை மட்டுமே மிகுந்த மருத்துவ குணம் கொண்டது.

இலையை பருப்புடன் சேர்த்து கடைந்து குழம்பாகவோ,கூட்டாகவோ சமைத்து உண்ண பல பலன்கள் கிடைக்கும்.

உள் உறுப்புகளில் ஏற்படும் புண்,அழற்சி,வாய்ப்புண்,சிறு நீரக்கப்பாதையில் தோன்றும் நோய்கள்,விந்தணு குறைபாடு போன்றவை காணாமல் போகும்.

இதன் இலைகளை அரைத்து தினந்தோறும் உடலில் தலைமுதல் கால்வரை தேய்த்து குளித்து வர உடல் அரிப்பு நீங்கும்,தோல் நோய்கள் அணுகாது.சருமம் பளபளப்பு அடையும்.உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்.

இதனை தொடர்ந்து உண்டுவர ஒரு சில தினங்களிலேயே குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

இனி தாளிக்கீரை என்பது என்ன?எங்கே கிடைக்கும் என்று தேடி எடுத்து பயன்படுத்தி உடலுக்கு வலு சேர்ப்போமா?