Tuesday 4 September 2012

முற்பகல் செய்யின்......

குஜராத்தில் கலவரத்தின்போது நடைபெற்ற குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர் சிறைக்கு செல்லும்போது தன் மகளைப்பிரிந்து அழுத காட்சியாம் இது.

அடப்பாவிகளா! எத்தனை பேரை துரத்தி துரத்தி விடட்டினீர்கள்,குத்தி கிழித்தீர்கள்,கர்ப்பிணி என்று பார்த்தீர்களா? உ
ங்களை பார்த்து ஒருவர் கையெடுத்து கும்பிட்டு அழுத காட்சி அனைத்து பத்திரிக்கைகளிலும் வந்ததே! அப்போது இந்த குடும்பம் பாசம் செண்டிமெண்ட் எங்கே போனது?

என்னய்யா பெரிய தண்டனை?இந்திய சட்டங்களில் இருக்கும் ஓட்டைகளில் நீங்கள் என்ன முழு தண்டனையையா அனுபவித்து விடப்போகிறீர்கள்?

தற்காலிகப்பிரிவுக்கே மகளைப்பார்த்து கதறி அழுகிறீர்களே? அன்று எத்தனையோ பேரை உலகத்தை விட்டே அனுப்பினீர்களே,அவர்கள் குடும்பத்திற்கு பரிகாரம் என்ன?

இதெல்லாம் ஒரு தண்டனையா? ஜுஜூபி,சட்டத்தின் ஓட்டைகள் இருக்கு,கவலைவேண்டாம்,பெயிலில் வந்து விடலாம்.சங்கம் உங்களை தியாகிகளாக மாற்றி பிரச்சாரம் செய்யும்.

No comments:

Post a Comment