Wednesday 5 September 2012

ஆசிரியர் தினம்

மந்தை ஆடுகளிலே நடக்க இயலாத ஆட்டின் மீது தனிக்கவனம் செலுத்துபவனே நல்மேய்ப்பன் என்பார்கள்.ஆசிரியர் சமுதாயமும் அப்படியே. பாகுபாடு பார்க்காமல் திறமைகுறைந்த மாணவனை ஊக்குவித்து அவன் திறமைகளை ஊக்குவிப்பதே நல்ல ஆசிரியர்க்கு அழகு. 

இப்போதைய காலகட்டத்தில் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஆசிரியர்களை தேடினால் மட்டுமே பார்க்கமுடிகிறது.

நான் கல்வி பயின்ற போது ஒவ்வொரு மாணவனையும் தங்கள் பிள்ளைகளாக பாவித்த ஆசிரியர்களுக்கும்,இன்றும் அத்தகு குணங்கள் வாய்க்கப்பட்ட இந்த தலைமுறை ஆசிரியர்களுக்கும் இந்த ஆசிரியர் தினத்திலே என் பணிவான வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment