Tuesday 4 September 2012

நூலகம் செல்வோம்


நம் வார்த்தைகள் மற்றவர்களால் கவனிக்கப்பட வேண்டுமானால் நாம் நம் அறிவால் புகழ்பெற வேண்டும்.அந்த அறிவு வளம் பெற்றிட தினந்தோறும் பலதரப்பட்ட நூல்களை படிக்க வேண்டும்.

பலதரப்பட்ட நூல்கள் நம்மால் வாங்கி படிக்க இயலுமா?பல்வேறு அறிஞர்கள்,பல்துறை வல்ல
ுனர்கள் எழுதிய நூல்கள் ஒருங்கே குவிந்திருக்கும் இடம் நூலகம். நூலகத்தை தினந்தோறும் செம்மையாக பயன்படுத்த முனையவேண்டும்.

அவ்வாறு நூலகங்களை பயன்படுத்தி உலகப்புகழ்பெற்ற புரட்சியாளர்கள் இருவரை உதாரணம் சொல்லவேண்டும் என்றால் ஒருவர் அம்பேத்கர்,இன்னொருவர் கார்ல்மார்க்ஸ்.இருவருமே லண்டன் பொது நூலகத்தில் இருந்த அனைத்து புத்தகங்களையும் படித்து முடித்தனராம்.அதனால்தான் இருவருக்கும் அங்கே சிலை வைக்கப்பட்டுள்ளது.

எவர் ஒருவர் தினந்தோறும் நூலகம் சென்று அறிவுக்கு வேலை கொடுக்கிறாரோ, நாளை உலகம் அவரைத் தேடி வரும்.
 

No comments:

Post a Comment