Tuesday 4 September 2012

போலிச்சாமியார்

வாயிலிருந்து லிங்கம் வரவைத்து தருகிறார்,வானத்திலிருந்து விபூதி வரவழைத்து தருகிறார் என்று போலிச்சாமியார்களின் வித்தைகளிலே புளகாங்கிதம் அடைபவர்களே! ஏன் அவர்களால் 3 அடி உயரத்தில் லிங்கம் வரவழைக்க முடியவில்லை,மூட்டை மூட்டையாக விபூதி வரவழைக்கமுட
ியவில்லை என்பதை யோசித்திருக்கிறீர்களா?

அவர்கள் வரவழைத்து தரும் வாட்சுகளில் மேட் இன் இந்தியா,ஜப்பான்,சைனா என்று இருப்பது ஏன்? சொர்க்கம்,செவ்வாய்கிரகம்,இந்திரலோகம்,சந்திரலோகம் என்று இருப்பதில்லையே ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா?

அவர்கள் வரவழைத்து தரும் பொருட்கள் நேரடியாக உங்கள் வீட்டு பீரோவுக்குள் சென்று சேறுமாறு செய்வதில்லையே ஏன்?

திருமணத்திற்கு தாலி வரவழைத்து தருகிறார்களே,தங்கள் தெய்வீக சக்தியால் வீட்டிற்கு நூறு பவுன் வரவழைத்து தரலாமே! தருவதில்லையே ஏன்?

No comments:

Post a Comment