Tuesday 4 September 2012

ஆர்எஸ்எஸ்

இந்த படை எங்கே கிளம்பி விட்டது? இரட்டைக்குவளை டீக்கடைகளை அடித்து நொறுக்கவா?

ஊர்த்தெருவுக்குள் சேரிப்பிள்ளைகள் செருப்பு போட்டு நடக்க அனுமதிக்காத கிராமங்களை திருத்தவா?

சேரி மக்களை அனுமதிக்காத கோயில் கதவை திறந்து விட புறப்பட்டு விட்டதா?

சாதிகளற்ற சமுதாயம் உருவாக்கிட கலப்புத்திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு அளித்திட புறப்பட்டு விட்டதா?

இயற்கையின் நீர் நிலைகள் அனைவருக்கும் சொந்தம் என்று கூறி தலித்துகளை ஊர்ப்பொது குளத்துக்கு நீர் அருந்த அழைத்து செல்ல புறப்பட்டு விட்டதா?

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க புறப்பட்டு விட்டார்களோ!

இதில் எதுவும் இல்லையென்றால் அப்புறம் என்னய்யா ஒரே நாடு! ஒரே மக்கள்! ஒரே சட்டம்! எனும் கோஷம் உங்களுக்கு? சாதி கட்டமைப்பை பாதுகாத்து வைத்துக்கொண்டு, நாமெல்லாம் ஒன்று, நமக்குள் வேறுபாடுகள் இல்லை,இந்த நாடு இந்து நாடு,இந்து மக்கள் சொந்த நாடு என்று புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறீர்களே.என்னய்யா ஏமாற்று வேலை இது? இளைஞர்களே சிந்தித்து பார்க்க மாட்டீர்களா?

No comments:

Post a Comment