Tuesday 4 September 2012

சிற்பி ராசன் SirpiRajan

சமூக நீதிப்போராட்டங்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட தோழர் சிற்பி ராஜன்Sirpi Rajanஅவர்களைப்பற்றி இந்த வார ஆனந்த விகடனில் 4 பக்கங்களில் செய்தி வந்ததை நம்மில் பலரும் அறிவோம்.

அவரைப்பற்றி இன்னொரு செய்தி,என்னவெனில் பல மேஜிக் வித்தைகள
ை செய்து காட்டுவார்.இதில் சிறப்பு என்னவெனில் செய்து காட்டியவுடன் அது எப்படி செய்யப்பட்டது என்பதை வெளிப்படுத்திவிடுவார்.

ஏன் அய்யா இரகசியத்தை போட்டு உடைக்கிறீர்கள் என்று கேட்டேன்.அதற்கு அவர் சொன்ன பதில், ரச்கசியத்தை சொல்லவில்லையெனில் நான் பகுத்தறிவுவாதி அல்ல.மக்கள் எப்படியெல்லாம் போலி சாமியார்களின் வித்தைகளில் ஏமாறுகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காகவே நான் மேஜிக் வித்தைகளை கற்றேன் என்றார்.

அய்யா இந்த இரகசியங்களை சொல்லாமலிருந்தால் என்னவாகும் என்றேன். நானும் ஒரு பாபாவாக மக்களால் கொண்டாடப்பட்டிருப்பேன்.சிற்பி ராஜன் என்ற என் பெயர் ராஜன் பாபா என மக்களால் மாற்றப்பட்டு கொண்டாடப்பட்டிருப்பேன்,தினந்தோறும் வாயிலிருந்து லிங்கமும் வானத்திலிருந்து விபூதியும் வரவழைத்து பொய் பேசிக்கொண்டிருந்திருப்பேன்,பல நூறு ஏக்கர் நிலத்தில் ஆசிரமம் வைத்துக்கொண்டிருந்திருப்பேன் என்றார்.

2 comments:

  1. Dear Deena

    I am much pleased about your Blog...

    Pl give me the phone no. of our Sirpi Rajan....

    ReplyDelete
  2. Dear Deena

    I am much pleased about your Blog...

    Pl give me the phone no. of our Sirpi Rajan....

    ReplyDelete