Tuesday 4 September 2012

தினப்பலன்


நான் சொல்லலப்பா, பிரபல பத்திரிக்கையாளர் குஷ்வந்த்சிங் சொல்லியிருக்கார்.

இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி (ILLUSTRATED WEEKLY)
மேற்சொன்ன ஆங்கில் வார இதழின் ஆசிரியர் திரு குஷ்வந்தசிங் அவர்கள். சோதிடத்தை நம்பாதவர். அந்த வார இதழில் ராசி பலன் எழுதிவந்த ச
ோதிடர் தனக்குச் சம்பளம் போதவில்லை என்று சொல்லிக் கொஞ்சம் சேர்த்துக் கொடுக்குமாறு கேட்டார். அதற்குக் குஷ்வந்த்சிங் அவர்கள் நீங்கள் எழுதுவது பொய்தானே? இதற்கு ஏன் அதிகச் சம்பளம் என்று கூறி மறுத்துவிட்டார். ஜோஸியரும் வேலைக்கு வருவதை நிறுத்திக்கொண்டார்.
ராசிபலன் இல்லாமலேயே பத்திரிகையும் வெளிவந்தது. ராசிபலன் இல்லாததால் பத்திரிகை விற்பனை மிகவும் மோசமானது.
அப்போது அந்தப் பத்திரிகையின் உரிமையாளர்கள் குஷ்வந்த் சிங் அவர்களிடம் நமக்கேன் வம்பு? அந்தச் சோதிடருக்குச் சம்பளம் அதிகமாகக் கொடுத்து வேலைக்குச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். நூலாசிரியரோ அதை மறுத்துவிட்டு 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பத்திரிகையில் வெளிவந்த ராசிபலன்களை அப்படியே எடுத்து அச்சிட்டு வெளியிடச் சொன்னார். வீழ்ந்த வியாபாரம் மள, மளவென்று பழைய நிலைக்கு வந்தது.

நன்றி திரு :Sirpi Rajan
 

No comments:

Post a Comment