Wednesday 19 August 2015

அர்ஜூன் சம்பத்,இராம.கோபலனை தேடுறேளா?
வருவாங்க,நாளைக்கே சேஷாலம் கிராம தலித்துகள் ஒன்று கூடி பேசி முடிவெடுத்து மதம் மாற ஒரு நாள் குறித்தால் அய்யய்யோ மதம் மாத்தறாங்கப்பான்னு குய்யோ முய்யோன்னு கூவிக்கிட்டு வெளியே வருவாங்க,இந்த நிமிஷம் வரைக்கும் சேஷாலம் கிராமத்தில் தேர்,வீடு எரிக்கப்பட்ட விஷயமே அவங்களுக்குத் தெரியாதாம்,தெரியவே தெரியாதாம்.
பேரிக்காய் ஒரு காலத்தில் கடைத்தெருக்களில் சர்வசாதாரணமாக காணப்படும் பழம்,இப்போது அரிதாகி விட்டது.பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடப்படும் தருணத்தில் மட்டும் விற்கப்படும் பழமாகி விட்டது.
ஆப்பிள் குடும்பத்தை சார்ந்த பழம்தான் பேரிக்காய் என்றாலும் ஆப்பிளில் இல்லாத விட்டமின் ஏ இதில் நிறைந்து காணப்படுகிறது.மேலும் விட்டமின் பி, பி2, மற்றும் சுண்ணாம்பு,இரும்புச்சத்தும் இதில் ஏராளமாக உண்டு.
எலும்புகள்,பற்கள் ஆகியவற்றுக்கு உறுதி அளிக்கக்கூடியது,வளரும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கக்கூடியது,இரவில் உணவுக்குப்பின் தினந்தோறும் ஒரு பழத்தை குழந்தைகளை உண்ணச் செய்யலாம்.
கர்ப்பிணிப்பெண்களுக்கு மிகவும் ஏற்ற பழம் இது,கருவில் இருக்கும் குழந்தைக்கும் நலம் தரும்.அதுமட்டுமல்ல பால் கொடுக்கும் பெண்களுக்கும் தாய்ப்பாலைச் சுரக்கச்செய்யும் ஆற்றல் பேரிக்காய்க்கு உண்டு.
வாய்,வயிறு ஆகியவற்றில் ஏற்படும் புண்களை பேரிக்காய் ஆற்றும்.நரம்புத் தளர்ச்சியை போக்கும்,கண்களுக்கு ஒளி கொடுக்கும்,உடலுக்கு தெம்பு தரும்.வயிற்றில் உள்ள கிருமிகளை அழிக்கும்,வயிற்றுப் போக்கினை குணப்படுத்தும்.
இதய பலவீனம்,இதயம் படபடப்பு உள்ளவர்கள் பேரிக்காயை தொடர்ந்து உண்டு வர படபடப்பு நீங்கி உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒரு தெம்பு உருவாவதை உணரலாம்.
பேரிக்காய் வருடம் முழுவதும் கிடைக்கும் பழமல்ல,குறிப்பிட்ட காலம் மட்டுமே கிடைக்கும் பழமாகும்,இப்போது பேரிக்காய் சீசன்,கடைகளில் பேரிக்காய் தென்படுகிறது.பேரிக்காய் சீசன் முடியும் வரை தினந்தோறும் விடாமல் குடும்பத்தில் உள்ள அனைவரும் பேரிக்காய் சாப்பிட்டு வருவோம்,நிச்சயம் நாம் பல மாற்றங்களை உணரலாம்,ஜீரண சக்தி அதிகரித்து பசியுணர்வு,உடல் தெம்பு,சுறுசுறுப்பு,நோயெதிர்ப்புத்திறன் அதிகரிப்பு ஆகியவற்றை அனுபவப்பூர்வமாக உண்ரலாம்.
ஆப்பிள் விலை கிலோ ரூபாய் 150க்கு குறையாமல் விற்கும் நிலையில் ஆப்பிளை விட பல மடங்கு நலன் தரும் அதே ஆப்பிள் குடும்பத்தை சார்ந்த பேரிக்காய் கிலோ முப்பது அல்லது நாற்பது ரூபாய்க்கு கிடைக்கிறது என்றால் அந்த பேரிக்காயை ஏழைகளின் ஆப்பிள் என்று அழைப்பது பொருத்தமான ஒன்றுதானே? இது பேரிக்காய் சீசன்,நாட்டு பேரிக்காய் கிடைத்தால் விடாதீர்கள்.
ஏன் முகநூலில் உங்க மூஞ்சியை காட்ட மாட்டேங்கறீங்கன்னு என்னைப் பார்த்து கேள்வி கேட்கறவங்க,அடியே மாரியாத்தா உன் பேரால இவ்ளோ களேபரம் நடக்குதே,ஒரே ஒரு முறை நீ எங்களுக்கு காட்சி கொடுத்து உன் இருப்பைக் காட்டக்கூடாதான்னு கேட்கக் கூடாதா?
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நாற்பது பேர் எம் எல் ஏக்களாக இருந்தாலும் அவர்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை அல்லது மிஞ்சிப் போனால் கால்நடைத்துறை அமைச்சர் பொறுப்புகள் மட்டுமே கொடுக்கப்படுவதும்,நிதித்துறைச் செயலர்,உள்துறைச்செயலர் பதவிகளுக்கு தலித் சமூகத்தைச் சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் புறக்கணிக்கப்படுவதும் ஏன் எனபது குறித்து தாழ்த்தப்பட்ட மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவருக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதால் இன்னாருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது,இஸ்லாமியருக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து விடக் கூடாதே என்று அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்ற நிலையில்தான் இந்த இருபெரும் சமூகங்களும் ஏமாளிகளாக இருக்கின்றன.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவருக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதால் இன்னாருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது,இஸ்லாமியருக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து விடக் கூடாதே என்று அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்ற நிலையில்தான் இந்த இருபெரும் சமூகங்களும் ஏமாளிகளாக இருக்கின்றன.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவருக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதால் இன்னாருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது,இஸ்லாமியருக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து விடக் கூடாதே என்று அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்ற நிலையில்தான் இந்த இருபெரும் சமூகங்களும் ஏமாளிகளாக இருக்கின்றன.
அன்று தந்தை பெரியாரின் சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுத்த காமராசரால் கக்கன் எனும் தாழ்த்தப்பட்டவரின் நேர்மையும் எளிமையும் இன்று வரை பெருமையாகப் பேசப்படுகிறது.
உரிமைகளை நிலைநாட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் ஒன்று கூடுவது அவசியம்,அதே வேளையில் சங்பரிவார்,சங்பரிவாரின் அறிவிக்கப்படாத ஏஜெண்ட் போலி தமிழ்த்தேசியங்களின் வஞ்சக வலையில் வீழ்ந்து திராவிடத்துக்கு எதிராகத் திரும்பினால் படு குழியில் வீழ்ந்து மாய்ந்து போவோம்.