Tuesday 4 September 2012

துன்பக்கடல்

துன்பக்கடலில் இருந்து நீந்தி கரை சேர்ந்து சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு நாம் பெரும்பாலும் நம் வாழ்வை வளமாக அமைத்துக்கொள்வதைப்பற்றியே யோசிக்கிறோம்,அல்லது நாம் பிறந்த சமுதாயத்தை பற்றி பேசுகிறோம்.

ஆனாலும் நம்மிலும் மிகவும் கீழான நிலையில் இருக்கும் இருளர்கள்,பூம்பூம் மாட்டுக்காரர்கள், நரிக்குறவர் இன்னும் பல பழங்குடியினர் என தமிழகம் முழுவதும் ஆங்காங்கே விழிப்புணர்வு இல்லாதவர்களாக,அடிப்படை வசதிகள் கூட கிடைக்கப்பெறாதவர்களாக இருப்பவர்களைப்பற்றி சிந்திக்க ,பேச மறந்து போகிறோமே ஏன்?

இருளர் இனப்பெண்கள் மீது பாலியல் அத்துமீறல் நடக்கின்றபோது மட்டுமே அவர்கள் மீது நம் கவனம் திரும்புகிறது.

அவர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்கள்,வாக்கு சதவிகிதம் குறைந்தவர்கள் என்பதால் அவர்கள் மீது கவனம் செல்ல மறுக்கிறதோ?

No comments:

Post a Comment