Thursday 16 August 2012

இட்டார் பெரியோர்

வாய் புளித்ததோ,மாங்காய் புளித்ததோ என ஆராயாமல் தந்தை பெரியாரை இகழ்வோரே!பெரியார் குறித்து ஒரு நண்பர் முகநூலில் எழுதியிருக்கும் கருத்தைப்பாருங்கள்.

சு. ஜெயக்குமார்
எனது தாத்தா (தந்தையின் தந்தை) எனது தந்தையின் சிறு வயதிலேயே இறந்துவிட...

ஆதரவற
்றிருந்த ... பொறுப்புகள் நிறைந்த எனது தந்தையை (மூன்று சகோதரிகள் & ஒரு இளைய சகோதரர்)...

எங்களூரிலிருந்த எம்.எல்.சி. ஒருவர் (திரு.தங்கவேலு) பெரியார் அவர்களது ஆசிரி
யர் பயிற்சி பள்ளியில் படிக்கவைத்திருக்கிறார்...

பெரியார் அப்பொழுது உயிருடனிருந்தார்...

இதிலென்ன விசேஷம்...? பெரியார் எதிர்த்த குலத்தில் பிறந்தாலும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்...

தற்பொழுது 72 வயதான எனது தந்தை ஒரு ஓய்வு பெற்ற ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்...

எனவே கடவுள் நம்பிக்கையுடையவனாக நான் இருந்தாலும் பெரியாருக்கு நன்றிக்கடன் பட்டவன் (எங்கள் குடும்பமே).


இதனால்தானய்யா அவர் பெரியார் என அழைக்கப்படுகிறார்.

No comments:

Post a Comment