Wednesday 22 August 2012

மரபு மீறல்

கிறிஸ்து மீது நம்பிக்கை வைத்து சர்ச்சுக்கு செல்கிறேன்: உமாசங்கர் ஐஏஎஸ்.

இந்த நாடு சுதந்திரம் அடைந்த தருணத்தில் ஆட்சிப்பொறுப்பு ஏற்ற முதல் ஆட்சியாளர்களுக்கு இந்திய அரசியல்வாதிகள் மீது அவநம்பிக்கை இருந்தது.எதிர்காலத்தில் இவர்கள் இந்தியாவை அழ
ிவுப்பாதைக்கு கொண்டு சென்றுவிடுவர் என்று ஐயமுற்றனர்.

அத்தகு நிலை ஏற்பட்டால் இந்தியாவை காப்பாற்றும் சக்திகளாக ஐஏஎஸ் அதிகாரிகள் இருப்பர் என நேருவும்,படேலும் நம்பினர்.அதனால்தான் இந்த பதவிக்கு அதிக அதிகாரங்களை கொடுத்தனர்.

சிலர் ஓய்வுக்கு பிறகு அரசியல் கட்சிகளில் சேர்ந்து பணியாற்றுவதைக்காணும் போது அவர்கள் பணியில் இருந்தபோது,அவர்களின் நடு நிலைமையை சந்தேகப்படவேண்டியதாகிறது.

அதனால்தான் திரு.முருகன் ஐஏஎஸ் என்ற ஓய்வுபெற்ற அதிகாரி தினமணியில் எழுதும் கட்டுரைகளை நான் படிப்பதே இல்லை.ஏனெனில் அவர் சரத்குமாரின் கட்சியில் இருந்தவர்.

தற்போது உமாசங்கர் ஐஏஎஸ் மதப்பிரச்சாரங்களுக்கு செல்வது கூட முரணான ஒன்றுதான். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த அவர் தன்னுடைய நேர்மையை கிறித்தவ மதப்பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகிறார் என்றே நினைக்கத்தோன்றுகிறது.மதம் என்பது அவருடைய உரிமையாயினும் பிரச்சாரம் என்பதும் ஐஏஎஸ் அதிகாரியாக அவருக்கு இருக்கும் உரிமையா? தார்மீக கட்டுப்பாடு வேண்டும் அல்லவா?

உமாசங்கர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர்,அவரைப்போய் பழிக்கிறாயே,இனத்துரோகி என்று என் மேல் பாயாதீங்கப்பா.

No comments:

Post a Comment