Monday 8 October 2012

இந்து என்று சொல்வதிலே......

ஆமாம் பெருமிதம் அடைகிறேன்,என்னை சூத்திரன் என்று சொன்னமைக்காக பெருமை கொள்கிறேன்.

என்னை தொட்டால் தீட்டு என்று வகைப்ப்டுத்தியமைக்காக உவமை கொள்கிறேன்.

மனித மலத்தை அள்ளுவதற்கும்,கழிப்பறையை கழுவுவதற்காக ஒரு சாதியை வைத்திருப்பதற்காக பூரிப்பு அடை
கிறேன்.

கோவிலுக்குள் நான் சென்றால் சாமிக்கு தீட்டு என்று சொல்லிவிட்டு,மலம் அள்ளுவது புனிதமான தொழில் என்று சொல்லி எங்கள் கவுரவத்தை உயர்த்தியமைக்காக பெருமை அடைகிறோம்.

பிணம் புதைக்கும்,எரிக்கும் தொழிலை எவருக்கும் கொடுக்காமல் தாராள மனதுடன் எங்களுக்கு மட்டுமே கொடுத்ததற்காக பெருமகிழ்ச்சியடைகிறோம்.

ஆடு,மாடுகள் கூட குடிக்கும் பொதுக்குளத்தில் நாங்கள் மட்டும் குடிக்காமல் பார்த்துக்கொண்டதற்காக புளகாங்கிதம் அடைகிறோம்.

இந்த 21ம் நூற்றாண்டிலும் சாதிக்கட்டமைப்பை பாதுகாத்து வருவதை எண்ணி மட்டில்லா இன்பம் கொள்கிறோம்.

இந்து என்று சொல்லிக்கொள்வதிலே இறுமாப்பு அடைகிறோம்

No comments:

Post a Comment