Sunday 7 October 2012

பெரியார்

இந்த கிழவரிடம் ஏதோ ஒன்று இருக்கு,இன்றைக்கும் சமூகநீதி போராளிகளின் ஆயுதமாக பெரியாரின் கருத்துக்கள் பிரதானமாக இருக்கு.

நான் ரொம்ப நாளா கவனிச்சுட்டு வர்ரேன், என் மனசுல தோன்றிய பகுத்தறிவு கருத்துக்களை இந்த ஃபேஸ்புக்கில் பதிவு செய்தால்,உடனே ரெ
ண்டு கமெண்ட்டுகளாச்சும் பெரியாரை தாக்கி வருது.

பகுத்தறிவு கருத்துக்களை பேசினால் ஆன்மிகவாதிகளுக்கு பெரியார் மேல் கோபம் வருதுன்னா,அந்த அளவுக்கு மதத்தின் பெயரால் மூட நம்பிக்கையை கட்டிக்காத்து வரும் மதவாதிகளுக்கு பெரியார் சிம்மசொப்பனமாக விளங்கியிருக்காருன்னு புரிந்து கொள்ள முடிகிறது.

சும்மா பத்திரிக்கைகளில் வரும் பெரியாரின் கருத்து துணுக்குகளை படிச்சுட்டு பகுத்தறிவு பேசும்போதே ஆன்மிகவாதிகளுக்கு இவ்வளவு கோபம் வருதுன்னா,பெரியார் கருத்துக்களை ஆழமாக படித்துவிட்டு பகுத்தறிவு பேசினால்........?

No comments:

Post a Comment