Tuesday 9 October 2012

ஆடுகள் அல்ல,சிங்கங்கள்

முஸ்லிம்கள் தலித்துக்கள் முன்னேற்றத்திற்காக பாரதீய ஜனதா பாடுபடும். - நிதின்கட்காரி.

இதை படித்தவுடன் அய்யய்யோ மகாத்மாகாந்தி செத்துட்டாரா? என்ற ஜோக்தான் நினைவுக்கு வருது.

முஸ்லிம்கள் மீது இவர்கள் வைத்த பாசம் உலகத்துக்கே தெரியும்.மோடி முஸ்
லிம்கள் மீது வைத்த பாசத்துக்காக இன்னைக்கு வரைக்கும் அமெரிக்காவில் நுழைய முடியல.

அது என்ன புதுசா தலித்துகள் மீது பாசம்? அம்பேத்கர்,பெரியார் உள்ளிட்ட சான்றோர் பலர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய காலகட்டத்தில் முடிந்த அளவுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் எல்லாம் இன்று தலித் முன்னேற்றம் பேசறாங்கப்பா.

உங்க கரிசனத்தை பார்க்கும்போது கசாப்புக்கடைக்காரன் ஆட்டை தடவிக்கொடுக்கிற மாதிரி இருக்கு.

நீங்களெல்லாம் ஆடுகள் அல்ல வெட்டப்படுவதற்கு, சிங்கங்கள் என்று அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கிட்டத்தட்ட 70 வருடங்கள் கழித்து தலித் முன்னேற்றம் குறித்து பேச மனுதர்மக்கூட்டம் கிளம்பியிருக்கு பாஸ்.

No comments:

Post a Comment