Tuesday 8 January 2013

எல்லோரும் டெல்லிப்பெண்ணைப்பற்றியே பேசுகிறீர்களே,இங்கே புனிதாவுக்கு நடந்த கொடுமையையோ, ஈழத்தில் நம் தமிழ் சகோதரிகளுக்கு நடந்த கொடுமைகள் குறித்தெல்லாம் பேசினீர்களா என்றெல்லாம் பலரும் கேள்வி கேட்கிறார்கள்.

உண்மைதான்,ஆனால் காரணம் என்ன? ஈழத்தில் கொடுமைகள் நடைபெற்ற போது இங்கே இருந்த பத்திரிக்கைகள் தங்களுக்குள் கட்டுப்பாடுகள் விதித்துக்கொண்டு இருட்டடிப்பு செய்தன,மக்களுக்கு செய்தியை கொண்டு செல்லாமல் பார்த்துக் கொண்டன.
அதே பத்திரிக்கைகள்தான் இப்போது டெல்லிப்பெண் விஷயத்திலும் மக்களிடையே உரிய முறையில் செய்தியை கொண்டு சென்று உணர்வுகளை எழுப்பினர்.

எது எப்படியோ டெல்லிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை பெண்களுக்கு எதிரான வன்கொடுமை விஷயத்தில் ஒரு விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

No comments:

Post a Comment