Tuesday 8 January 2013

மதங்களின் பெயரால் இந்த உலகம் முழுவதும் மனித குலத்துக்கு காலம்காலமாக நடந்து வரும் கொடுமைகளையும்,அவலங்களையும் தெளிவாக உணர்ந்ததாலேயே நாத்திகர்கர்களாகிய நாங்கள் கடவுள் மறுப்பை பேசி வருகிறோம்,மூட நம்பிக்கைகளை எதிர்த்து வருகிறோம்.

அவ்வாறு நாங்கள் பேசிடும் போது ஒரு சிலர் ஓடி வந்து எங்கள் மதத்துக்கு வாருங்கள்,அங்கே மூட நம்பிக்கைகள் இல்லை,ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று மதப்பிரச்சாரம் செய்திடுவது வேடிக்கையாக இருக்கிறது.

அவர்களின் இந்த செயலை பார்க்கும் போது சாலையில் பேருந்து ,டோல்கேட் போன்ற இடங்களில் வேகம் குறைத்திடும் போது பனங்கிழங்கு, அவிச்ச வேர்க்கடலை,வாட்டர் பாக்கெட் என்று ஒரு கும்பல் ஓடி வந்து விற்பனை செய்யுமே,அது போல் இருக்கிறது.

No comments:

Post a Comment