Wednesday 30 January 2013

ஆரஞ்சுப்பழம்

நீண்ட நாள் மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்களா?

உடல் சோர்வாக,பலஹீனமாக உணர்கிறீர்களா?

இதய நோய்,புற்று நோய்,இருமல்,அஜீரணம் ஆகியவை உங்களிடம் இருந்து எட்டி நிற்க வேண்டுமா? ஏற்கனவே வந்தாலும் விலகி ஓட வேண்டுமா?

நன்றாக பசி எடுக்க வேண்டுமா?

நுரையீரல் போன்ற சுவாச உறுப்புகள் சுத்தமடைய வேண்டுமா?

எலும்பு மெலிவைத்தடுக்கும் கால்சியம் உங்கள் உடம்புக்குத் தேவையா?

காட்ராக்ட் பிரச்சினை வராமல் கண்களை பாதுகாக்கும் பீட்டா கரோட்டின் தினந்தோறும் நம் உடலுக்கு சேர வேண்டுமா?

வைட்டமின் சி, டி,ஏ பொட்டாசியம்,சோடியம்,மக்னீசியம்,செம்பு,சல்ஃபர்,குளோரின் போன்றவை உடலுக்கு சீராக சேர வேண்டுமா?

வளரும் குழந்தைகளுக்குத் தேவையான கால்சியம் இயற்கையாக கிடைக்க வேண்டுமா?

உடலில் சேரும்,சேர்ந்த தேவையற்ற கொழுப்புகளை வளர்சிதை மாற்றத்தின் மூலம் விரைவாக வெளியேற்ற வேண்டுமா?

இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு புத்துணர்வுடன் இருக்க வேண்டுமா?

ஆண்மை எப்போதும் அளப்பரிய இருக்க வேண்டுமா?

ஒரே விடை : ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து நான்கு ஆரஞ்சு பழம் சாப்பிடுங்க,அது போதும்.எல்லா வயதினருக்கும் ஏற்ற பழம் இது.

உகாண்டாவை ஆட்சி செய்த சர்வாதிகாரி இடி-அமீனிடம் யாரோ ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டால் ஆண்மைக்கு நல்லது என்று சொல்லி விட்டிருக்கிறார்கள். மூட்டை மூட்டையாக உரித்து கட்டுவானாம்.

ஆரஞ்சு,எலுமிச்சை போன்ற பழங்களின் தோல்களில் சால்வெஸ்ட்ரோல் கியூ எனும் ஒரு வகைப்பொருள் இருக்கிறது.இது உடலின் நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. இந்த பொருள்தான் சிட்ரஸ் பழங்களுக்கு நறுமணத்தைக் கொடுக்கின்றது.

இந்தப்பழத்தின் தோல்களை காயவைத்து பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.அந்தப்பொடியை தேநீர் போன்று கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு,புற்று நோய் போன்றவை வராமல் தடுக்கப்படும், வந்திருந்தாலும் கட்டுப்படுத்தப்படும்.

குறிப்பாக புகை பிடிப்பவர்கள்,தினந்தோறும் மது அருந்துபவர்கள் தினமும் இரண்டு ஆரஞ்சுப்பழங்களையும், அதன் தோலின் பொடி கொண்டு செய்யப்பட்ட சூப்பையும் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

தயவு செய்து இனி ஆரஞ்சுப்பழத் தோலுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.

No comments:

Post a Comment