Tuesday 8 January 2013

அவர் மண்டைச் சுரப்பை உலகு தொழும் - பாவேந்தர் பாரதிதாசன்.

பிள்ளைப் பேறு என்பது கடவுளின் பாக்கியம் என்று கருதப்பட்ட காலத்தில் பிள்ளைப்பேறுக்கு ஆண்,பெண் சேர்க்கை நீக்கப்பட்டு இஞ்ஜெக்‌ஷன் மூலம் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி குழந்தை பெறும் காலம் வரும் என்று டெஸ்ட் ட்யூப் குழந்தை உருவாக்கம் நடைபெறுவதற்கு 40 ஆண்டுகள் முன்னரே சொன்னவர் பெரியார்.

கம்பியில்லா தந்தி சாதனம் அனைவர் சட்டைப்பையிலும் இருக்கும், உருவத்தை தந்தியில் அனுப்பும் படியான சாதனம் எங்கும் மலிந்து எல்லோர் கையிலும் இருக்கும் என்று இன்றைய செல்ஃபோன், டேப்லட்,கம்ப்யூட்டர் குறித்தும் அன்றைக்கே சொன்னவர் தந்தை பெரியார்.இது போன்று பல விஷயங்களை தீர்க்கதரிசி போன்று எடுத்துரைத்தவர் பெரியார்.அதனால்தான் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் பெரியார் குறித்து, அவர் மண்டைச்சுரப்பை உலகு தொழும் என்று வியந்து போற்றினார்.

இப்படி பெரியாரின் சிந்தனைகள் சிறு சிறு கேப்சூல் போன்று தொகுக்கப்பட்டு பெரியார் ஆயிரம் வினா-விடை என்ற பெயரில் வெறும் 50 ரூபாய் விலையில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது, வாங்கிப் பயன் பெறுவோம். மேலும் விபரங்கள் இன்று வெளிவந்துள்ள ஜூனியர் விகடன் பத்திரிக்கையில் இருக்கிறது.

No comments:

Post a Comment