Wednesday 30 January 2013

இவர்கள் தேசபக்த இயக்கத்தின் வருங்காலமாம்.

இந்த பிஞ்சுகளின் மனதிலே நஞ்சினை விதைக்கும் இந்த இயக்கம் தர்மபுரி கலவரத்தில் இதுவரைக்கும் களமிறங்கி இருக்கிறதா?

வாச்சாத்தியிலே சென்று வக்கற்றவர்களுக்காக வக்காலத்து வாங்கியிருக்கிறதா?

அத்தியூர் விஜயாவுக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறதா?

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தடையாக இருக்கும் வழக்கில் தானாக சென்று ஆஜராகி இருக்கிறதா?

இந்த இயக்கத்தால் எத்தனை கிராமங்களில் இரட்டை டம்ளர் முறை ஒழிக்கப்பட்டிருக்கிறது?

நாமெல்லாம் இந்து என்று முழங்கும் இவர்களிடம் சாதி மறுத்து காதல் செய்யும் காதலர்கள் தஞ்சமடைந்தால் சேர்த்து வைப்பார்களா?

ஒரே நாடு,ஒரே மக்கள்,ஒரே சட்டம் என முழங்கும் இவர்கள் காவிரி டெல்டா விவசாயிகளுக்காக கர்நாடகம் நோக்கி பேரணி செல்வார்களா?

No comments:

Post a Comment