Monday 5 August 2013

வர்ரவன்,போறவன் எல்லாம் சிக்ஸ்,ஃபோர்னு அடிச்சிட்டு போகும் ஒரு பேட்டிங் பிட்ச் போல இந்தியா ஒரு காலத்தில் இருந்ததுன்னா அதற்கு காரணம் இந்து மதமே.இந்து மதம் இந்த நாட்டில் இருந்த மக்களிடையே ஏற்படுத்தி வைத்திருந்த ஒற்றுமையின்மையே இந்த நாடு பல துண்டுகளாக பிரிந்து கிடந்தது.அதனாலேயே ஆங்கிலேயன்,ஃப்ரெஞ்சுக்காரன்,டச்சு,அரேபியன்,ஆப்கானியன்,மங்கோலியன் என நினைத்தவனெல்லாம் போரடிக்கும் போதெல்லாம் இங்கே வந்து புகுந்து விளையாடினான்.

இப்போதிருக்கும் மதசார்பற்ற நாடு என்கிற ஒரு நிலைப்பாடு இருக்கும்வரைக்கும்தான் இந்த நாடு நிலைத்திருக்கும்,இந்துத்துவம் என் உயிர்மூச்சு போன்ற தத்துவங்கள் எல்லாம் வெற்றிபெறத் துவங்கினால் கண்டிப்பாக அதன் அடுத்த கட்டமாக வர்ணாசிரமம்,சாதி,மத மோதல்கள் எல்லாம் உச்சக்கட்டத்தை அடையத் துவங்கும்.விளைவு மக்களிடையே ஒரு பெரும் குழப்பமும்,பிரிவினைவாதமும் வலுவாக நிலைகொள்ளத்துவங்கி சரிசெய்திட முடியாத அளவுக்கு அமைதியின்மையும்,ஸ்திரமற்றத்தன்மையும் உருவாகி இந்த நாடு சிதறுண்டு போக வழிவகை செய்திடும்.

No comments:

Post a Comment