Monday 5 August 2013

ஐய்யப்பன் கதை உண்மையோ பொய்யோ அது நடந்ததாகக் கூறப்படும் காலத்தை பாருங்கள்,மூவாயிரம் வருடங்களுக்கு முற்பட்டதாக கூறப்படும்,ஆனால் ஐய்யப்பனுக்கு வாவர் எனும் இஸ்லாமியத் தோழன் இருப்பதாக ஒரு செய்தியும் உண்டு.

இதைப் போலவே சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகளின் அண்ணன் சேரன்செங்குட்டுவன் வாழ்ந்த காலம் கி.பி முதலாம் நூற்றாண்டு,ஆனால் அவன் கிபி ஐந்தாம் நூற்றாண்டில் முகம்மதுவால் தோற்றுவிக்கப்பட்ட இஸ்லாத்தில் சேர்ந்தான் எனவும் அவனுடைய சமாதி ஏமன் நாட்டில் இருப்பதாகவும் ஒரு தகவல் முகநூலில் பரப்பப்படுகிறது.

உண்மைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் வரலாற்றினை திரித்து கூறுவது கூட மக்களுக்கு செய்கின்ற ஒரு மோசடியே ஆகும்.

No comments:

Post a Comment