Friday 2 November 2012

அது நார வாய்....இது வேற வாய்.....

மக்களின் அறியாமை,ஞாபக மறதி ஆகியவற்றை சாதகமாக்கிக்கொண்டு சாமியார்கள் செய்யும் தில்லுமுல்லுகளுக்கு இதோ ஒரு உதாரணம்.

நேற்று மதுரை விளக்குத்தூண் காவல் நிலையத்தில் மதுரை ஆதினத்தின் வழக்குரைஞர் கொடுத்திருக்கும் புகார் மனுவின் சுருக்கம் என்னவெனில
்,

நித்தியானந்தா மற்றும் சீடர்களால் எனக்கும் மடத்துக்கும் ஆபத்து ஏற்படும் வாய்ப்பிருக்கிறது,பாதுகாப்பு வேண்டும் என்பதே.

அடேங்கப்பா இதை முன்கூட்டியே சிவபெருமான் கனவில் வந்து சொல்லவில்லையா? இதே வாய்தான் சில மாதங்களுக்கு முன்பு சிவபெருமான் கனவில் வந்து நித்தியானந்தாவை அடுத்த ஆதினமாக நியமிக்க சொன்னார் என்று சொன்னது.இப்போது அதே நித்தியானந்தாவால் உயிருக்கு ஆபத்தாம்.

அன்று சிவபெருமான் சொன்னது பொய்யா? அல்லது மதுரை ஆதினம் சொன்னது பொய்யா?

அது நார வாய்....இது வேற வாய்.....அப்படித்தானே?????

No comments:

Post a Comment