Friday 2 November 2012

சசிதரூர்


மத்திய அமைச்சர் சசிதரூருக்கு காதலர் விவகாரத்துறை என்ற பெயரில் புதுத்துறை ஒன்றை உருவாக்கி அதற்கு அவரை அமைச்சராக்க வேண்டும் என்று பாஜக கிண்டலடித்திருக்கிறது.

கிண்டல் மட்டும்தானே? உண்மையில்லையே? அப்புறம் உண்மையாகவே அது மாதிரி ஒரு துறை அமைந்து
 விட்டால் வம்பாகிப்போய் விடுமே.

துணிச்சல் வந்து விடும்,காதலிப்பவர் எண்ணிக்கை அதிகமாகிவிடும்,சாதி மறுப்புத்திருமணங்கள் அதிகமாகிவிடும்,இது அதிகமானால் சாதி ஒழிந்து போகத்துவங்கும்.

அப்புறம் சாதி இல்லாட்டா வர்ணாசிரமம் என்னாகும்? இந்துத்வா கேலியாப்போய் விடுமே? எப்படி அப்புறம் இந்துத்வ அரசியல் எடுபடும்?

சீரியஸ் இல்லையே? சும்மனாங்காட்டியும் தமாசுக்குத்தானே சொன்னீங்க?
 

No comments:

Post a Comment